search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodumudi Magudeshwarar Kovil"

    • விநாயகரின் திருவருள் நிலைபெற்றிருக்கும் இடம் “ஸ்வேதார்க்கம்” எனப்படும் வெள்ளெருக்கு செடியாகும்.
    • இம்மகா மூலிகையை சிவபெருமான் ஸ்ரீ காக புஜண்ட மகரிஷிக்கு அளித்தார்.

    விநாயகரின் திருவருள் நிலைபெற்றிருக்கும் இடம் "ஸ்வேதார்க்கம்" எனப்படும் வெள்ளெருக்கு செடியாகும்.

    இம்மகா மூலிகையை சிவபெருமான் ஸ்ரீ காக புஜண்ட மகரிஷிக்கு அளித்தார்.

    வெள்ளெருக்கினால் விநாயகர் செய்து வீட்டில் வைத்து ஸ்வேதார்க்க விநாயகரது துதியை செவ்வாய் தோறும் வாசித்து வந்தால் சகல பாக்கியங்களும் படிப்படியாக வந்து சேரும்.

    பூ பூக்கும் காய் காக்காது!

    ஈரோடு அருகே உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் மிகப்பழமையான வன்னி மரம் உள்ளது.

    இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மறுபக்கம் முள் இருக்காது.

    இந்த மரத்தின் இலையைத் தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெட்டுப் போகாது.

    பழனி பங்குனி உத்திரத்திருவிழாவுக்கு தீர்த்தக் காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளைப் போட்டுத்தான் பக்தர்கள் பாத யாத்திரையாகக் கொண்டு செல்வார்கள்.

    ×