search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolihan Mine"

    • சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கினர்.
    • இவர்களில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோலிஹான் சுரங்கம் உள்ளது. நேற்று இரவு லிப்ட் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 15 பேர் சிக்கிக் கொண்டனர்.

    கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச்சென்ற லிப்ட் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பியபோது லிப்டின் கம்பி அறுந்து விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதல் மந்திரியும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

    இந்நிலையில், லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்ற 14 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் சிக்கிக் கொண்டனர்.
    • அவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோலிஹான் சுரங்கம் உள்ளது. நேற்று இரவு லிப்ட் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 14 பேர் சிக்கிக் கொண்டனர்.

    கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச்சென்ற லிப்ட் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பியபோது லிப்டின் கம்பி அறுந்து விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக உள்ளூர் எம்.எல்.ஏ. தரம்பால் குர்ஜார் கூறுகையில், மீட்பு பணிகளில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது. முழு நிர்வாகமும் விழிப்புடன் உள்ளது. உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை; அனைவரும் பாதுகாப்பாக வெளியே வருவார்கள் என தெரிவித்தார்.

    ×