என் மலர்
நீங்கள் தேடியது "Land"
- தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
- எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன். இவர் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை பன்றிகள் மிகவும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறுகையில் எலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் இறைச்சிக்காக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல் திறந்தவெளியில் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்ப்பதால் தோட்ட த்து பகுதிகளில் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளம், கரும்பு பயிர்களை சேதம் செய்ததால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் நாங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பயிர்களை வளர்த்தால் ஒரே நாளில் இந்த பன்றிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.
எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
- தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.
தாராபுரம்:
நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்து 20 ஆண்டுகள் ஆகிய பின்பும் இழப்பீடு வழங்காததை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பொன்னிவாடி கிராமம், நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கோனேரிப்பட்டி.பாலு ஆகியோர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு கடந்த 1997ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே நல்ல தங்காள் அணையை கட்டியது. அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது, விவசாயிகளும் முழு சம்மதத்தோடு நிலத்தை கொடுத்தார்கள்.
இழப்பீடு மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதால், உரிமையியல் நீதிமன்றத்தில் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி வழக்கு தாக்கல் செய்து அந்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இழப்பீட்டு தொகை இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல் நீர்வள ஆதாரத்துறை மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது.
20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல் ஒரு நிர்வாகம் இயங்கி வருவது என்பது, தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.
எனவே நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று 1-4-2024 முதல் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர்.
- ஆட்சியர் அலுவலக அறையில் அழுதபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தனது நிலம் தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைகளை குவித்தபடி புரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மந்சவுர் மாவட்டத்தில் உள்ள சங்கர்லால் என்ற விவசாயி வைத்திருந்த நிலத்தில் பாதி அவருக்கு சொந்தமில்லை என்றும் அந்த பாதி நிலத்தை அதன் அப்போதய சொந்தக்காரர்கள் ஏற்கனவே பக்கத்து கிராமத்தில் உள்ளவருக்கு 2010 ஆம் ஆண்டில் விற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தாசில்தார் முன்னிலையில் நடந்த பத்திரப்பதிவுக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி தற்போது நிலத்தை வாங்கியவரின் மகன் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அந்த நிலம் தன்னுடையதே என்றும் தனது குடும்பமே அதில் இத்தனை காலமாக விவசாயம் பார்த்து வந்ததாகவும், எனவே இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் படியும் பல முறை சங்கர்லால் அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி சங்கர்கர்லால், தனது நிலத்தை மாஃபியாக்கள் தன்னிடம் இருந்து பறித்துவிட்டனர், தாசில்தாரின் தவறினால் விவசாயியான நான் பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர். அரசாங்கத்தால் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர் என்று ஆட்சியர் அலுவலக அறையில் கைகளை குவித்தபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- சான்க்டிட்டி ஃபெர்ம் (Sanctity Ferme) நிறுவனம், திரூர்கரன் பைஜு என்பவரால் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு.
- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோக்கம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு காலநிலை செயல்திட்டத்தில் சத்தமில்லாமல் சாதிக்கும் ஒரு நிறுவனம்
சான்க்டிட்டி ஃபெர்ம் (Sanctity Ferme) நிறுவனம், திரூர்கரன் பைஜு என்பவரால் தொலைநோக்கு திட்டத்துடன் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு. இந்நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிலப்பரப்பை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வளப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை விளைநிலங்களில் நட்டு தமிழகத்தின் காலநிலை மாற்ற செயல்திட்டத்துக்கு பங்காற்றியுள்ளது. இயற்கையை மீட்டெடுப்பது மற்றும் நகர்ப்புற மக்களை அதனுடன் மீண்டும் இணையக்கூடிய சூழலை உருவாக்குவதே பைஜுவின் முக்கிய நோக்கம் ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோக்கம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. 'நிர்வகிக்கப்பட்ட விளை நிலங்களை' சந்தைப்படுத்தும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களைப் போல் அல்லாமல், சான்க்டிட்டி ஃபெர்ம் நிறுவனம் தனது உண்மையான செயல்பாட்டை செய்து காட்டியுள்ளது. முதல் மூன்று கட்டங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலங்கள், மனநிறைவோடு நிலத்தை வாங்கிய நூற்றுக்கணக்கான உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் இதற்கு நேரடி சான்று.
இயற்கை மற்றும் நிலையான வாழ்வுக்கான பைஜு வின் அர்ப்பணிப்பு:
"சான்க்டிட்டி ஃபெர்ம் என்பது மரங்களை நடுவது மட்டுமல்ல; மக்களும் இயற்கையும் இணக்கமாக வாழும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றியது" என்கிறார் பைஜு . 300 ஏக்கர் தரிசு நிலத்தை பசுமையான இயற்கை உணவு உற்பத்தி காடாக மாற்றி நிலத்துக்கு புத்துயிர் அளிப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையான விவசாய நடைமுறைகளுக்கான தமிழ்நாட்டின் முயற்சிகளுடன் இணைந்து, நிலையான ஆதாரத்தை வழங்கியுள்ளது. இந்த பண்ணையில் தற்போது 150 க்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறி வகை பயிர்கள் உள்ளன. இது சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவக்கூடியதாக அமைந்துள்ளது.
ஒரு தனித்துவமான கூட்டணி : தொழில்நுட்பத்திலிருந்து இயற்கைக்கான பயணம்
பெங்களூருவில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த பைஜு, விவசாயத்தின் மீது எப்போதுமே ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பத் துறையில் இருந்து இயற்கையை மறுமலர்ச்சி அடைய வைக்கும் அவரது பயணம் சுற்றுச்சூழலின் மீதான ஆழ்ந்த அன்பு மற்றும் அமைதியான, நிலையான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான விருப்பத்தின் உந்துதலால் ஏற்பட்டதாகும். சூளகிரியில் அவர் உருவாக்கிய 300 ஏக்கர் நிலப்பரப்பு, அவரது அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் சான்றாக திகழ்கிறது.
"தொழில்நுட்பம் சார்ந்த வேலையில் இருந்து பண்ணையை நிர்வகிப்பதற்கு மாறுவது என்பது நம்பிக்கையின் பாய்ச்சலாக இருந்தது. ஆனால், நான் எடுத்த முடிவுகளில் இது மிகவும் மனநிறைவான முடிவு" என்கிறார் பைஜு. "சான்க்டிட்டி ஃபெர்மில், நாங்கள் உணவுக்கான தாவரங்களை வளர்ப்பது மட்டுமல்ல; நாங்கள் ஒரு சமூகத்தை வளர்த்து வருகிறோம், பல்லுயிர்ப் பெருக்கத்தை வளர்த்து வருகிறோம். மேலும், ஆரோக்கியமான ஒரு கோளுக்கு (planet) பங்களிக்கிறோம்" என அவர் மேலும் கூறுகிறார்.
தமிழ்நாட்டின் காலநிலை ஆய்வுகளுடன் இணைந்து செயல்படுவது:
சான்க்டிட்டி ஃபெர்மின் முயற்சிகள், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்களை வலுவாக பிரதிபலிக்கக்கூடியவை. இவை இரண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்டவை. இந்த இரண்டு அமைப்புகளின் பணிகள் மாநிலத்தின் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்துவது மற்றும் வனப்பகுதியை கணிசமாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சான்க்டிட்டி ஃபெர்மின் பணி என்பது இந்த மாநிலத்தின் பரந்துபட்ட முயற்சிகளின் நுண்ணிய வடிவமாக செயல்படுகிறது. "நாங்கள் பொதுவான நோக்கத்தை மாநிலத்தின் தலைமையுடன் பகிர்ந்து கொள்கிறோம். பசுமையான, நிலையான தமிழ்நாட்டுக்கான பார்வை அது" என்று பைஜு குறிப்பிடுகிறார்."
சமூக ஈடுபாடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
சான்க்டிட்டி ஃபெர்ம், சூளகிரியில் உள்ள உள்ளூர் மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பண்ணையை 300 ஏக்கரில் இருந்து கிட்டத்தட்ட 600 ஏக்கராக விரிவுபடுத்தும் திட்டத்துடன், உள்ளூர் மக்களில் 250 பேருக்கு இந்த திட்டம் வேலையை வழங்கியுள்ளது. இந்த விரிவாக்கம், கிருஷ்ணகிரியில் உள்ள நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும். இது பற்றிக் குறிப்பிடும் பைஜு, "நாங்கள் பண்ணையை மட்டும் உருவாக்கவில்லை; ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம்" என்கிறார் பெருமிதத்துடன்.
"இயற்கைக்கு இசைவாக மக்கள் பணிபுரிய, வாழ மற்றும் செழித்து வளரக்கூடிய இடத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். எங்களுக்கு உள்ளூர் சமூகத்தின் ஆதரவு அமோகமாக உள்ளது. நாங்கள் வளர வளர அதற்கேற்ற வகையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், இந்த சமூகத்துக்கு திருப்பித் தருவதற்கு உறுதி ஏற்றுள்ளோம்" என மேலும் கூறுகிறார் பைஜு.

சான்க்டிட்டி ஃபெர்மை அனுபவியுங்கள்: இயற்கையின் சரணாலயம்
சான்க்டிட்டி ஃபெர்ம் என்பது நிர்வகிக்கப்படும் விளைநிலம் மட்டுமல்ல; நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கு இது ஓர் அற்புத அனுபவம். வார இறுதியில் இந்த விவசாயப் பண்ணையில் பொழுதைக் கழிக்கலாம், இயற்கையான சூழலுடன் தடையின்றி நம்மை ஒன்றிணைக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட வீடுகளில் தங்கலாம். அமைதியான ஓய்வு அல்லது புத்துணர்ச்சிக்கான விடுமுறையை விரும்புவோருக்கு சிறந்த இடமாகும். குதிரை சவாரி மற்றும் மலையேற்றப் பாதைகள் முதல் பருவகால அறுவடை திருவிழாக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் வரை அனைத்தும் நடக்கிறது. ஒரு கைவிடப்பட்ட குவாரியை அழகான பொழுதுபோக்கு பகுதியாக மாற்றியிருக்கிறோம் இங்குள்ள கொலோசியம் (Colosseum) ஓர் அற்புதமான பகுதி. இது நீச்சல் குளம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான மேடை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. "சான்க்டிட்டி ஃபெர்மின் அமைதியான அரவணைப்பில் மூழ்கி, மறக்க முடியாத அனுபவங்களின் பயணத்தைத் தொடங்குங்கள்" என அழைப்பு விடுக்கும் பைஜு.

நிலையான வாழ்க்கைக்கான முன்மாதிரி
சான்க்டிட்டி ஃபெர்மில், விவசாயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், நிலையான வாழ்க்கைக்கான முன்மாதிரியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
பண்ணையில் நாட்டு மாடுகள், ஆடுகள், வாத்துகள், முயல்கள், கோழிகள் மற்றும் குதிரைகள் உள்ளன. இவை அனைத்தும் பண்ணையின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உயிரி உரம் மற்றும் இயற்கை உரங்கள் போன்ற இயற்கை வேளாண்மை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"உங்கள் கனவு இல்லத்தை 15% நிலத்தில் கட்டுவது என்பது ஒரு கட்டமைப்பை உருவாக்குவதைவிட அதிக மதிப்புமிக்கது" என்கிறார் பைஜு. "இயற்கை சுற்றுச்சூழலை மதிக்கும் மற்றும் மேம்படுத்தும் வகையில் உங்கள் கண்ணோட்டத்தை உயிர்ப்பிப்பதைப் போன்றது. தடையற்ற கட்டுமானப் பயணத்திற்கு நாங்கள் அதற்கான உதவியை வழங்குகிறோம். உண்மையிலேயே வீடு போல் உணரும் ஒரு சரணாலயத்தை உருவாக்க உங்களை வழிநடத்துகிறோம்." என்கிறார் பைஜு.
பசுமை வளர்ச்சியில் பாரம்பரியத்தை உருவாக்குதல்
ஃபெர்ம் போன்ற திட்டங்கள், தனிநபர் முயற்சிகள் எவ்வாறு பரந்த சுற்றுச்சூழல் இலக்குகளுடன் இணைந்து, நிலையான மற்றும் அற்புதமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு வலிமையான எடுத்துக்காட்டுகளாக செயல்படுகின்றன. இயற்கையின் மடியில் உள்ள அமைதியான சரணாலயமான சான்க்டிட்டி ஃபெர்மில் அமைதியைப் பெறுங்கள். அங்கு நிலையான வாழ்க்கை என்பது வெறும் கருத்து மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறையாகும்" என்று உற்சாகமாக கூறி முடித்தார் பைஜு.
வருங்கால குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு
"ஒவ்வொரு சொத்தும் ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் எங்களுடன் தங்கியிருப்பது அசாதாரணமானது அல்ல. எங்களின் நிர்வகிக்கப்பட்ட விவசாய நிலத்தின் அமைதியில் மூழ்கி, எங்கள் கட்டடக்கலை அதிசயங்களின் வசதி மற்றும் அழகியலில் பொழுதை கழியுங்கள்" என்கிறார் பைஜு.
நான்காம் கட்ட திட்டம் செயல்பாட்டில் இருப்பதாலும், ஐந்து மற்றும் ஆறாவது கட்டங்கள் பற்றிய திட்டமிடுதல் இருப்பதாலும், சான்க்டிட்டி ஃபெர்ம் அதன் வளர்ச்சியையும் தாக்கத்தையும் தொடர, தயாராக உள்ளது. சான்க்டிட்டி ஃபெர்ம், சுற்றுச்சூழலின் மிகப் பெரிய இலக்குகளுக்கு பங்களிப்பதில் தனிப்பட்ட செயலின் வல்லமைக்கு ஒரு சான்று எனலாம். பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் மற்றவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள சான்க்டிட்டி ஃபெர்ம் அழைக்கிறது.
- நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாயநிலம் வாங்க மானியம்” வழங்கப்படுகிறது.
- விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
2022-23 ஆம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் "நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாயநிலம் வாங்க மானியம்" வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம், (தாட்கோ) 2022-23ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் "200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம்" வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த 4 நபர்களுக்கு ரூ.20லட்சம் மானியமும், பழங்குடியின இனத்தை சார்ந்த 1 நபருக்கு ரூ.5 லட்சம் மானியமும் ஆக மொத்தம் 5 நபர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மகளிருக்குமுன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர்அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். வயது 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும்.
விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ்இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது.
ஒருவர் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர். ஒரு திட்டத்தின் கீழ் ஒரு முறை மானிய உதவி பெற்றால், பின்னர் அவர் தாட்கோ செயல்படுத்தும் சிறப்பு மைய உதவியுடனான பெற பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் தகுதியற்றவராகிறார்.
மேற்கண்ட இத்திட்டம் தொடர்பான www.application.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ , அறை எண்: 501 (ம) 503, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் 641604. தொடர்புக்கு : செல்போன் எண்: 94450 29552, தொலைபேசி : 0421-2971112 என்ற முகவரி , தொலைபேசி எண்ணை அணுகலாம். திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- புறம்போக்கு இடத்தில் சுமார் 23 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.
- பயனாளிகள் வீட்டிற்கே சென்று இலவச பட்டா வழங்கல்.
திருவையாறு:
திருவையாறு அருகே கீழதிருப்பூந்துருத்தி ஊராட்சி மணக்கொல்லை பகுதியில் ரசுப் புறம்போக்கு இடத்தில் சுமார் 23 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.
நீண்ட காலமாக அவர்கள் வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி வந்த நிலையில் நேற்று ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன் முன்னிலையில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாவட்ட வருவாய் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் ஆகியோர் 23 பயனாளிகள் வீட்டிற்கே சென்று இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தாசில்தார் பழனியப்பன், ஒன்றியச் செயலாளர் கௌதமன், திருப்பூந்துருத்தி பேரூராட்சித்துணைத் தலைவர் அகமதுமைதீன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
- வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் மற்றும் வட்டி முறையாக செலுத்தாததால் நிலத்தை ஏலம் விடுவதாக வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.
தகவல் அறிந்து இடத்தின் உரிமையாளர் தனபால் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இடத்திற்கு அளவீடு செய்ய செல்வதற்கு வழித்தடம் இல்லாததால் அருகே உள்ள இடத்தின் வழியாக சென்று வங்கி நிர்வாகத்தினர் அளவீடு செய்ய முயன்றனர். அதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வழித்தடத்திற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வருவதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்க பட்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
- கோவிலுக்கு சொந்தமான 1.21 ஏக்கர் தென்னைதோப்பை ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் வசம் மீட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர்அடுத்த ஆலங்குடி நெடாரில்பிரம்ம புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் வட்டாட்சியர் சங்கர்,
கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் பணியாளர்கள் கோவிலுக்கு சொந்தமான 1.21 ஏக்கர் தென்னைதோப்பை ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் வசம் மீட்டனர் .
தொடர்ந்து தோப்பு மீட்கப்பட்டு அதே இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
அதில் தென்னந்தோப்பு கோவிலுக்கு சொந்தமானது ஆகும்.
இங்கு யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.
மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 15 லட்சம் ஆகும்.
- ராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளுக்கு பாத்தியப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
- நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சந்திரன் பதிவு செய்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், ராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளான சரோஜினி, கஸ்தூரி, மணிராஜ், தங்கராசு, கடலாட்சி மற்றும் சந்திரன் ஆகிய 6 பேருக்கு பாத்தியப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை, அவர்களின் கடைசி தம்பி சந்திரன் என்பவர் மொத்த நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் சந்திரனின் மனைவி செல்லம்மாளுக்கு ஏற்பாடு ஆவணம் செய்துள்ளார்.
இதுகுறித்து சரோஜினி கடந்த 6-ந் தேதி கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சந்திரன் பதிவு செய்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட நிலத்திற்கான ஆவணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முன்னிலையில் தங்கராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் கிழக்குப் பக்கத்தில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 81 சென்ட் புன்செய் நிலம் உள்ளது
- சிவகிரி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிவகிரி:
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் கிழக்குப் பக்கத்தில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 81 சென்ட் புன்செய் நிலம் உள்ளது. இது தொடர்பாக சிவகிரி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் எதிர்தரப்பு மேல்முறையீடு காலமும் முடிவுற்ற நிலையில் மேற்படி வழக்கு நடந்து வந்த இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி தலைமையில், தென்காசி நிலம் எடுப்பு தாசில்தார், செயல் அலுவலர்கள் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முருகன், கடையம் வில்வநாதன் சுவாமி கோவில் அசோக்குமார், வி.கே.புதூர் நவநீதகிருஷ்ணன் கோவில் முருகன், கிருஷ்ணாபுரம் கோபால கிருஷ்ணசுவாமி கோவில் கார்த்திக் லட்சுமி, ஆய்வாளர்கள் தென்காசி சரவணகுமார், ஆலங்குளம் சேதுராமன், சிவகிரி ஆர்.கே.நாச்சியார் கட்டளை நிர்வாக அலுவலர் ஜெகநாதன், கணக்கர் குமார், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், வி.ஏ.ஓ. அன்புச்செல்வி, தலையாரி முத்துசாமி, சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், சிவகிரி அளவையாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.