search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "landslides"

    கஜா புயல் காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்ததால் இடுக்கியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பல வீடுகள் இடிந்து சேதமானது. #GajaCyclone #KeralaRain
    திருவனந்தபுரம்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்தில் கரையை கடந்தது.

    தமிழகத்தின் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல் நேற்று பிற்பகலுக்கு மேல் திண்டுக்கல், தேனி, போடி வழியாக கேரள மாநிலத்தில் நுழைந்து அரபிக்கடலுக்கு நகர்ந்தது.

    இதன் காரணமாக கேரளாவின் இடுக்கி, வயநாடு, கோட்டயம் மாவட்டங்களில் நேற்று காலை முதலே பலத்த மழை பெய்தது.



    கஜா புயலின் கண் பகுதி கேரளாவிற்குள் நுழைந்ததும் இடுக்கியில் மிக கனத்த மழை பெய்தது. இதனால் பெரியாறு, மூணாறு பகுதிகள் வெள்ளக்காடானது. ஏற்கனவே இங்கு பெருமழை பெய்ததால் சேதமான பாலங்களுக்கு பதில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இந்த பாலங்களை கஜா புயல் துவம்சம் செய்தது. இதனால் மூணாறு சென்ற சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    இடுக்கியில் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், பல வீடுகள் இடிந்து சேதமானது. இடுக்கி, வயநாடு பகுதிகளை சேதப்படுத்திய கஜா புயல் மெதுவாக தென்கிழக்கு அரபிக்கடலுக்குள் நகர்ந்தது.

    தற்போது இப்புயல் கொச்சியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அமித்தி தீவுகளை கடந்து மினிகாய் தீவு வழியாக வளைகுடா நாட்டுக்கு நகரும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் இன்றும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சபரிமலை, எரிமேலி, பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

    இன்றும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வளைகுடா நாட்டிற்கு நகர்ந்த பின்னரே கேரளாவில் மழை குறையுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #GajaCyclone #KeralaRain



    மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. #Karnatakarains #Kodaguflood
    குடகு:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொட்டி தீர்த்த கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை, நிலச்சரிவால் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். குடகு மாவட்டத்தில் உள்ள 51 நிவாரண முகாம்களில் சுமார் 4 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதைந்த 10-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



    இதற்கிடையே, குடகு மாவட்டத்தில் மேலும் 10 பேர் மாயமாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்துக்கு முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குடகில் தொடர்ந்து முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில், ஹெலி கேமராக்கள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குடகில் மழை நின்றுள்ளதால், மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மறுசீரமைப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மடிகேரி டவுனில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில் தற்போது மழை நின்றதால், வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால், நிவாரண முகாம் களில் இருந்த மக்கள், தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில அரசு சார்பில் அறிவித்த ஒரு குடும்பத்துக்கு ரூ.3,800-ம், சமையல் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு அலுமினிய கொட்டகை அமைக்கும் பணியும் தீவிரமாக நடக்கிறது.

    மடிகேரி அருகே அட்டிஒலே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்ட பிரான்சிஸ் என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பிரான்சிசின் உடலை நேற்று அவருடைய உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரான்சிசின் குடும்பத்தினருக்கு ரூ.5.38 லட்சம் நிவாரண தொகைக் கான காசோலை வழங்கப்பட்டது. இந்த காசோலையை பா.ஜனதா எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன், அவருடைய குடும்பத்தினரிடம் வழங்கினார்.

    மேலும், கரடூர், ஆலேறி உள்ளிட்ட கிராமங்களில் கிராம பஞ்சாயத்து சார்பில் அரிசி, உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடகில் மழை நின்றாலும், ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். அவர்களுக்கு மாநிலம் முழுவதும் நிவாரண பொருட்கள் குவிந்து வருகிறது. ஆனால், தங்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்கள் கிடைப்பதில்லை என்றும், தங்களுக்கு உடனடியாக நிரந்தர வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மடிகேரி டவுன் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியில் சுமார் 200 வீடுகள் உள்ளன. அங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். குடகில் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச்சரிவால் அந்தப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், தற்போது அந்தப்பகுதியில் நிலத்தில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக அங்கு வசித்து வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும், இந்த விரிசல், நிலச்சரிவுக்கான அறிகுறி என்றும் கருதப்படுகிறது. இதனால் அங்கும் நிலச்சரிவு ஏற்படும் என்று பீதியில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு சென்று வருகிறார்கள்.  #Karnatakarains #Kodaguflood

    நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் குமுளி மலைச்சாலையில் 8-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

    தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளி, போடிமெட்டு, கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் குமுளி மலைச்சாலையில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது.

    அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்த போது மற்றொரு இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே எப்படியாவது வேலைக்கு சென்றுவிட வேண்டும் என போடி மெட்டு, கம்பம் மெட்டு வழியாக வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது குமுளி மலைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் வாகனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றார்.

    பைக் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் லோயர் கேம்ப்பில் இருந்து குமுளி வரை மோட்டார் சைக்கிளில் ட்ரிப் அடித்து வருகின்றனர்.

    பஸ்களில் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மோட்டார் சைக்கிளில் ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கின்றனர். மேலும் மலைச்சாலையில் 3 முதல் 4 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து போலீசார் எச்சரித்த போதும் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளில் அதிக விலை கொடுத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே அரசு சார்பில் பொதுமக்கள் சென்று வர வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் அதிக ஆட்களை ஏற்றிக் கொண்டு மலைச்சாலையில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
    கேரளாவின் அழகிய சுற்றுலாத்தலமான மூணாறில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் வெளியேற முடியாமல் சுமார் 80 பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். #KeralaRain #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய சுற்றுலாத்தலமான மூணாறு, பசுமை நிறைந்த தேயிலை தோட்டம் மற்றும் ஆர்ப்பரித்து கொட்டும் மலையருவிகளுக்கு பேர்போன இடமாகும். இந்த இயற்கை எழிலை ரசிப்பதற்காக உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சமீபத்தில் கேரள மாநிலம் முழுவதும்  பெய்த கனமழை இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. குறிப்பாக, மூணாறு பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



    வெள்ளநீர் பாய்ந்து ஓடிய பல பகுதிகளில் மண் அரிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் சாலைகளை இணைக்கும் பாதைகளில் பிளவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இடுக்கியில் உள்ள செருத்தோனி அணைக்கட்டில் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்துள்ளது.

    இதனால், மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்ற 20 வெளிநாட்டினர் உள்பட சுமார் 80 பேர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து அங்கு மழை பெய்துவரும் நிலையில் அவர்களை அங்கிருந்து மீட்க பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவம் விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மழை மற்றும் நிலச்சரிவில் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். #KeralaRain #KeralaFloods #IdukkiDam

    வங்காளதேசத்தில் பலத்த மழை, நிலச்சரிவால் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Bangladesh #Landslides #HeavyRain
    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மியான்மர் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இந்த தொடர் மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளில் பெருத்த நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.



    இந்த மழையாலும், நிலச்சரிவாலும் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் மூங்கிலாலும், பிளாஸ்டிக் பலகைகளாலும் கொண்டு அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்புகளில்தான் வசித்து வருகின்றனர். அதில் 1,500 தங்குமிடங்கள் பெருத்த சேதம் அடைந்து உள்ளன.

    கோக்ஸ் பஜாரில் ஒரு மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு ரோஹிங்யா முஸ்லிம் பெண்ணும், அவரது 2½ வயதான ஆண் குழந்தையும் சிக்கிக்கொண்டனர். இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதே போன்று பலத்த காற்று வீசியதில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து முகமது அலி என்ற ரோஹிங்யா முஸ்லிம் வாலிபர் பலி ஆனார். மழை, நிலச்சரிவுகளில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இதை ரங்கமாதி அரசு மருத்துவ அதிகாரி டாக்டர் ஷாகித்த தாலுக்தர் உறுதி செய்தார். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அவர் தெரிவித்தார்.

    ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் ஒரு லட்சம் பேர் அவதியுற்று வருகிற நிலையில் அவர்களை வேறு இடங்களில் குடி அமர்த்துவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைப்பை சேர்ந்த முகமது ஷா கமால் தெரிவித்தார்.மழையை எதிர்பார்த்து ஏற்கனவே 28 ஆயிரம் அகதிகள், பாதுகாப்பான இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பு, ரோஹிங்யா அகதிகள் நிலவரம் குறித்து கூறுகையில், “அகதிகளை இட மாற்றம் செய்வதற்கு காலி மனைகள் இல்லை. இதனால் அவர்களை இடமாற்றம் செய்வது சவால் ஆக உள்ளது. ஆபத்தான நிலையில் இருப்பதாக 2 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். செப்டம்பர் மாதத்துக்குள் அவர்களை பசான்கார் தீவு பகுதிக்குத்தான் மாற்ற வேண்டியது இருக்கிறது” என்று கூறியது.

    இதற்கு இடையே அடுத்த 24 மணி நேரத்துக்கு அங்கு மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது.   #Bangladesh #Landslides #HeavyRain
    ×