என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Adalat"

    • தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம்.

    கோவை,

    நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்வதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது.

    இந்த மக்கள் நீதிமன்றமானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலூர் ஆகிய நீதிமன்றங்களில் நடக்கிறது.

    இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணும் வகையில் பல்வேறு அமர்வுகளாக நடக்கிறது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம். இந்த லோக் அதாலத்தை பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொள்ளலாம்.

    • வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொண்டனர்.
    • தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    கோவை,

    நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்வதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பணி ஆனைக் குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி ராஜசேகர் தலைமையில், நீதிபதிகள் கோவிந்தராஜன், குலசேகரன், முரளிதரன், ராமகிருஷ்ணன், சஞ்சீவி பாஸ்கர், மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டக் குழு ஆணையத்தின் செயலாளர் சார்பு நீதிபதி கங்கா ராஜ் செய்திருந்தனர். இந்த மக்கள் நீதிமன்றமானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலூர் ஆகிய கோர்ட்டுகளில் நடந்தது.

    இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் இன்றைய தினமே தீர்வு காணும் வகையில் பல்வேறு அமர்வுகளாக நடைபெற்றது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொண்டனர். இந்த லோக் அதாலத்தை பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொண்டனர்.

    • திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 1,952 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதன் தீா்வுத் தொகை ரூ.39.12 கோடியாகும்.  

    • திருமங்கலம் கோர்ட்டில் நாளை சிறப்பு லோக் அதாலத் நடக்கிறது.
    • மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் நாளை (11-ந்தேதி) சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் நலன்கருதி நடைபெறும் இந்த சிறப்பு லோக் அதலாத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்த மனுக்களையும், திருமங்கலம் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல்நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், பிற கோரிக்கைள் தொடர் பாகவும் உடனடியா தீர்வு காண மனுசெய்து உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம்.

    • பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன
    • சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு)பி.சிவஞானம் தலைமையில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் பி.திருஞான சம்பந்தம், சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி வரவேற்று பேசினார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு ஆகியன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 276 வழக்குகள் விசாரித்து சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 234 வழங்கப்பட்டது. இதில் விரைவு நீதிமன்ற அரசு வக்கீல் தி.சத்தியமூர்த்தி, எஸ்.துரைமுருகன், உதயன், வடிவேல், சரவணன் கலந்து கொண்டனர்.

    பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நீதிபதிகள் மோகனப்பிரியா, ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டு பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் 11கோடியே 57 லட்சத்து 215 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டன.

    முகாமில் பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் சி.எம்.டி.ஏ. வழக்கறிஞர் பிரசன்ன குமார், கூடுதல் சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பல்லவன் மற்றும் அரசு வழக்கறிஞர் அம்ரத் காந்தி உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

    • ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வள்ளியூர்:

    ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொது மக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தரப்பி னர் முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலை யில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

    இதனை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதில் லோக் அதலாத் வாயிலாக வழக்குகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டால் முழு கோர்ட்டு கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், பிரச்சினைகளை விரைவாக கையாண்டு, கட்டணம் இல்லாமல் தீர்வுகளை பெற முடியும். சமரச மையத்தில் நடக்கும் அனைத்து பேச்சு வார்த்தைகள் எந்த வகையிலும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் பேச்சு வார்த்தைகள் ஒருவருக்கு எதிராக சாட்சி யங்களாக பயன்படுத்து வதில்லை. எளிய முறையில் துரிதமாகவும், பணம் விரயமின்றியும் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை பெறுவதற்கு சமரசம் உதவுகிறது. இதனால் சமரசத்தில் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலைப்பாடு ஏற்படும்.

    மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடை யாது என்பது போன்ற விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டது.

    • தீர்வு காண ப்பட்ட வழக்கு களுக்கான சமரசத் தொகையையும் மாவட்ட நீதிபதி சீனிவாசன் உரியவரிடம் வழங்கினார்.
    • கடந்த 10 நாட்களாக மக்கள் நீதிமன்றம் மூலம் 4,028 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் தலைவருமான சீனிவாசன் கலந்து கொண்டு சமரச தீர்வு மைய விசாரணையை தொடங்கி வைத்தார்.

    இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலா ளர்கள் வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் , குடும்ப வழக்குகள், காசோலை வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசார ணை நடைபெற்றது. தொடர்ந்து தீர்வு காண ப்பட்ட வழக்கு களுக்கான சமரசத் தொகையையும் மாவட்ட நீதிபதி சீனிவாசன் உரியவரிடம் வழங்கினார்.

    இதனையடுத்து நீதிபதி சீனிவாசன் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் 10 இட ங்களில் 25 அமர்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. கடந்த 10 நாட்களாக மக்கள் நீதிமன்றம் மூலம் 4,028 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 59 வழக்குகள், சிறு வழக்குகள் 1,413 என்பன உள்பட 1498 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 280 சமரச தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. எனவே பொதுமக்கள் மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா மற்றும் நீதிபதிகள் பன்னீர்செல்வம், திருமகள், குமரேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட அளவிலான லோக் அதாலத்தில் 1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கப்பட்டது.
    • ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் (ேலாக் அதாலத்) அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், வக்கீல் ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    125 குற்றவியல் வழக்குகள், 150 காசோலை மோசடி வழக்குகள், 117 வங்கிக்கடன் வழக்குகள், 131 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், 85 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், 215 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 1,574 மற்ற குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 1,564 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.95லட்சத்து 64ஆயிரத்து 692 வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதுபோல் வங்கிக்கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 550 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 19 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.18 லட்சத்து 95 ஆயிரம் வரை வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இதில் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்காடிகளும் ஏராளமானோர் பங்கேற்று தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர்.

    • மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடை பெற்றது.
    • 4 விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டில் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மற்றும் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடை பெற்றது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 315 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரு மான சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    இதில் அரசு மருத்துவர் தினேஷ், வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விசாரணையின் போது 4 விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது. 4 விபத்துகளிலும் இறந்தவர்களின் குடும்பத்தி னருக்கு மொத்தமாக ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ், மூத்த வக்கீல்கள் திருமலையப்பன், மரிய குழந்தை, ராமேஸ்வரன், முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தார்.

    • காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.
    • லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, அறிவுறுத்துதலின்பேரில் நேற்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.

    லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.

    காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின், தலைவர், முதன்மை சார்பு நீதிபதி அருண் சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரைமுருகன், பார் அசோசியேஷன் சங்க தலைவர் அரிதாஸ், செயலாளர் வித்தகவேந்தன், லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வக்கீல்கள் பத்மநாபன், சத்தியமூர்த்தி, மூத்த காப்பீட்டு நிறுவன வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இதில் காஞ்சிபுரம் வட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 130 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 4 ஆயிரத்து 236 இழப்பீடாக வழங்கப்பட்டது.

    இதனை காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு ஏற்பாடு செய்திருந்தது.

    • ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார்.
    • சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி சட்டப் பணிகள் ஆணைக்குழுசார்பில், பண்ருட்டி நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடத்தப்பட்டது. வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நடுவர் நீதிபதி மகேஷ் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் பங்கேற்றனர்.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 13 வாகன விபத்து வழக்கு, ஒரு சொத்து வழக்கு முடிக்கப்பட்டு ரூ24.40 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை இள நிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.

    • காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது.
    • 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    பயனாளிக்கு இழப்பீட்டுத் தொகையினை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது. காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் லோக் அதாலத்தை தொடக்கி வைத்து சமரசம் செய்து வைக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கினார்.

    தொடக்க விழாவுக்கு முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லோக் அதாலத்தில் விசாரணைக்காக மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    தொடக்க விழா நிகழ்வில் நீதிபதிகள் இனிய கருணாகரன், வாசுதேவன், வக்கீல்கள் சத்தியமூர்த்தி, பரணி, ரஞ்சனி மற்றும் மூத்த வக்கீல்கள், காப்பீட்டு நிறுவனத்தின் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் சதீஷ்ராஜ் நன்றி கூறினார்.

    ×