என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love"

    • காதல் திருமணம் ெசய்தவர்களை இரு தரப்பு பெற்றோர்கள் உதறினர்
    • அறிவுரை சொல்லி அனுப்பி வைத்த போலீசார்

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் தர்மர் கோவில் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குமாரவேல் (வயது 33). கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார்.இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வேலை பார்த்தபோது, அருகில் இருந்த பட்டபிரான் தெருவை சேர்ந்த மகிமைதாஸ் மகள் பிரித்தி (வயது 21) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கீரமங்கலம் சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தங்களது பெற்றோர்களால் ஆபத்து வரும் என்று உணர்ந்த அவர்கள், பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் கா வல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவகி, பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு அவர்கள் தேவையில்லை என்று இரு வீட்டாரும் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர். பின்னர் போலீசார் திருமணம் செய்த காதல் ஜோடிக்கு அறிவுரைகள் கூறி அனுப்பிவைத்தனர்.

    • இப்போது ‘கலர் சைக்காலஜி’, என்பது பிரபலமாக இருந்துகொண்டிருக்கிறது.
    • உங்கள் காதலருக்கு எந்த நிறம் பிடிக்கும் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்.

    மனிதர்களின் உணர்வுகளோடு மிகுந்த நெருக்கம்கொண்டவை. அதனால்தான் மனிதர்கள் மகிழ்ச்சியோடு வாழ விரும்பும் அவர்களது வீடுகளில், எந்தெந்த அறைகளில் எந்தெந்த நிற பெயிண்ட்களை பூசவேண்டும் என்றெல்லாம் முடிவு செய்கிறோம். வாங்கும் வாகனங்களில்கூட வண்ணம் எப்படி இருக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கிறோம். இப்போது 'கலர் சைக்காலஜி', என்பது பிரபலமாக இருந்துகொண்டிருக்கிறது. அதனை இளம்பெண்கள் அதிகம் நம்பு கிறார்கள். தனக்கான நண்பனையோ, காதலனையோ தேர்ந்தெடுக்கும்போது அவர்களுக்கு தெரியாமலே அவர்களுக்கு பிடித்த கலரை அடையாளங்காணுகிறார்கள். அந்த கலரைவைத்து, அவர் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி காய்நகர்த்துகிறார்கள்.

    உங்கள் காதலருக்கு எந்த நிறம் பிடிக்கும் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். அந்த நிறத்திற்கு ஏற்ப அவரது குணாதிசயமும், காதல் உணர்வுகளும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். (காதலிகளுக்கு பிடித்த நிறத்தைவைத்து அவர்களது காதல் உணர்வுகளை காதலர்களும் தெரிந்துகொள்ளலாம்தான்!)

    சிவப்பு: காதல் உணர்வு அதிகம்கொண்டவர்கள் பட்டியலில் இந்த நிறத்தை விரும்புபவர்களை சேர்க்கலாம். அவ்வப்போது காதல் உணர்வில் நீந்தத்தொடங்கிவிடுவார்கள். கற்பனையில் நினைப்பதை எல்லாம் காதலில் நிறைவேற்ற துடிப்பார்கள். இவர்கள் ஆசைப்பட்ட பெண்ணை (அல்லது ஆணை) அடையாமல் விடமாட்டார்கள். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் காதலில் மிதவாதிகளாக இருக்க முயற்சிக்கவேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு நல்லது.

    மஞ்சள்: காதலில் இவர்கள் ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். காதல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை என்று தத்துவமும் பேசுவார்கள். சில நேரங்களில் இவர்களது காதல் ஆசைகள் முரண்பாடுகொண்டதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. 'இப்படியுமா ஆசைப்படுவீர்கள் சே..' என்று சொல்லும்படி ஆகிவிடும். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப்பார்கள். அதனால் இந்த நிற மனிதர் களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். ஆனால் இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்து விட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள். காதலில் இவர்கள் காட்டாற்று வெள்ளம். கல்யாணமாகிவிட்டால் சலசலக்கும் அழகான நீரோடை.

    பிங்க்: இவர்கள் கட்டுங்கடங்காத காதல் போராளிகள். எளிதாக திருப்திகொள்ளமாட்டார்கள். புதிதுபுதிதாக இவர்களது விழிகள் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக அடுத்தடுத்து காதல் பார்வை பார்த்து ரசிப்பார்கள். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக்கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக நம்பிவிடக்கூடாது. ஏன்என்றால் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை இவர்களிடம் குறைவாக இருக்கும். பிங்க் ரசிக்கவைக்கும் அழகு நிறைந்தது. ஆனால் வாழ்க்கையை ருசிக்கும்போது நெருடல் ஏற்படலாம். அதனால் கவனம்தேவை.

    பர்பிள்: இவர்கள் தனித்துவமிக்கவர்களாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடுவார்கள். அந்த போராட்டத்திலே சிலர் தங்கள் இளமைக் காலத்தை இழந்துவிடுவார்கள். இவர்களிடம் சுயநல எண்ணம் அதிகம் இருக்கும். காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடுவார்கள். அதனால் இவர்கள் எளிதாக காதல் வலையில் விழமாட்டார்கள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனியாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் 'டன்' கணக்கில் கொட்டு வார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், 'அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது' என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். பர்பிளிடம் நெருங்கும் முன்னால் நேசம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று உரசிப்பார்த்துக்கொள்ளவேண்டும்.

    கறுப்பு: இவர்கள் காதலில் இருந்து சற்று விலகி இருக்க முயற்சிப்பார்கள். வெளிப்பார்வைக்கு இறுக்கமான மனிதர்களாக காட்சியளிப்பார்கள். யாரிடமும் மனம்விட்டுப்பேச மாட்டார்கள். அதனால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது. கறுப்புக்கு காதல் கரும்பல்ல, இரும்பு.

    பச்சை: காதலில் கசிந்துருகுவது பச்சை. இவர்கள் காதல்வசப்பட்டுவிட்டால், 'சோறு தண்ணி எல்லாம் அதுக்கு அப்புறந்தாய்யா' என்று காதலே கதி என்று கிடப்பார்கள். பச்சையை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வு அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். காதலில் பச்சையை மொத்தமாய் நம்பலாம்.

    நீலம்: இவர்கள் காதல் தத்துவஞானிகள். நீல நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிகமிருக்கும். ஆனால் தனக்கும் காதலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் நடந்துகொள்வார்கள். பெண்கள் என்றால் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். 'தாம்பத்ய' விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும். நீலம் காதலைவிட கல்யாணத்திற்கு மிகவும் ஏற்றது.

    வெள்ளை: இவர்கள் மென்மையானவர்கள். காதலை வெளிப்படுத்தக்கூட பயப்படுவார்கள். அதனால் காதலை மறைத்தபடியே காலத்தை கடத்திவிடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒருதலைக்காதலால் அவஸ்தைப்படுவார்கள். உள்ளே காதலை மூடிவைத்துக்கொண்டு வெளியே, 'காதலாவது கத்தரிக்காயாவது..' என்று காதலுக்கு எதிராக பேசிக்கொண்டிருப்பார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வெள்ளை பெரும்பாலும் காதலுக்கு தொல்லை.

    ஆரஞ்ச்: இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இவர்களிடம் வசீகரம் இருக்கும். மற்றவர்கள் இவர்களை காதலுடன் சுற்றிச்சுற்றி வந்தாலும், இவர் களுக்கு காதல் வராது. ஆரஞ்ச் மனிதர்கள் ஆன்மிக ரசிகர்கள். காதலை ரசிக்கத் தெரியாதவர்கள்!

    • மணமகன் தமிழ்முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார்.
    • மணமகள் பட்டு புடவை, தங்க அணிகலன் அணிந்து இருந்தார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இன்று காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் பாலச்சந்தர் மணமகள் சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோவிற்கு தாலி கட்டினார்.

    மணமகன் தமிழ்முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார். மணமகள் பட்டு புடவை, தங்க அணிகலன் அணிந்து இருந்தார். யாக குண்டம் அமைத்து மந்திரம் முழங்க மங்கள இசையுடன் திருமாங்கல்யம் கட்டி திருமணம் நடைபெற்றது. இதனை மணமகளின் உறவினர்கள், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆனந்தமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது குறித்து மணமகன் பாலச்சந்தர் கூறியதாவது:-

    சீனா மற்றும் பாங்காங்கில் தொழில் முனைவராக இருந்து வருகின்றேன். அப்போது எனக்கும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோவிற்கும் சமூக வலைத்தளங்கள் (ஆப்) மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் நல்ல நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து 2பேரும் மனதளவில் காதல் ஏற்பட்டு இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவர்களது திருமணத்தை தொடர்ந்து பாலச்சந்தர் சகோதரர் பாலமுருகனுக்கும் திருமணம் நடைபெற்றது. சினிமா படத்தில் காண்பது போல் ஒரே மேடையில் ஒரே நாளில் அண்ணன் மற்றும் தம்பிக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கடல் கடந்து காதல் மலர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் சீன நாட்டைச் சேர்ந்த பெண்ணை கடலூரை சேர்ந்த பாலச்சந்தர் இந்திய கலாச்சார படியும் தமிழ் முறைப்படியும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட பெண் விவரங்களை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை சம்மட்டி புரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் திருநகர் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த செல்வம் மகன் ஆனந்துக்கும் (24) செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் மதுரை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். நான் அவருடன் நண்பர் என்ற முறையில் பழகினேன். ஆனந்த் என்னிடம் காதலை தெரிவித்தார். நான் அவரை ஒதுக்கினேன். செல்போனில் பேசுவதை நிறுத்தினேன்.

    இதனால் ஆனந்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் என்னுடன் அடிக்கடி தகராறு செய்தார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    சம்பவத்தன்று இரவு நான் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஆனந்த், என்னை தாக்கியதுடன் அவதூறாக பேசிவிட்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மேற்கண்ட விவரங்களை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஆனந்த்திடம் விசாரிக்கப்பட்டது.

    இதில் அவர் அந்த பெண்ணை தாக்கி அவதூறாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஐ.டி. ஊழியர் ஆனந்த்தை போலீசார் கைது செய்தனர்.

    • பெண்கள் அழகான நகைகளை பரிசாகப் பெற விரும்புகிறார்கள்.
    • பரிசு என்பது உங்கள் அன்பு மற்றும் பாசத்தின் காட்சி சின்னம்!

    நமக்கு நெருக்கமானவர்களிடம் நம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் மொழி பரிசு வழங்குவது. பரிசு என்பது 'காட்சி சின்னம்'. ஒரு பரிசை சிந்தனையுடன் தேர்ந்தெடுத்து அதை வாங்க முயற்சி செய்வது, பரிசைப் பெறுபவருக்கு உங்கள் அன்பைக் காட்டுகிறது. ஒரு நல்ல பரிசு மறக்கமுடியாததாகவும் பெறுபவரின் ஆர்வத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்க வேண்டும். நகைகள் விலைமதிப்பற்றவை மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் என்பதால், இது உலகளவில் மிகவும் பிரபலமான பரிசு யோசனைகளில் ஒன்றாகும். ஆண்களும் பெண்களும் அழகான நகைகளை பரிசாகப் பெற விரும்புகிறார்கள். இது ஒரு சிறந்த நினைவுச்சின்னமாகும். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைலுக்கும் அழகான நகைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்!

    பரிசு என்பது உங்கள் அன்பு மற்றும் பாசத்தின் காட்சி சின்னம்! அதை தனித்துவமாகவும், மறக்கமுடியாததாகவும், காலமற்றதாகவும் மாற்றுவதை உறுதிசெய்யவும். ஒரு அழகான நகையின் காலத்தால் அழியாத கவர்ச்சியை எதுவும் வெல்ல முடியாது! ஒரு நகை பல ஆண்டுகளாக அணிந்து, தலைமுறைகளுக்கு அனுப்பப்படும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கான பரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் முயற்சியை நகைகள் பிரதிபலிக்கின்றன.

    பரிசளிப்பதற்காக மோதிரங்கள், வளையல்கள், சங்கிலிகள் மற்றும் நெக்லஸ்களின் பல வடிவமைப்புகளைக் கொண்ட நகைகளை தேர்வு செய்யலாம். ராசி பதக்கங்கள் மற்றும் ரத்தினப் பதக்கங்கள் போன்ற சிலவையும் தனித்துவமானவை. ஒருவரின் பெயர் மற்றும் குடும்ப பெயர் பொறிக்கப்பட்ட நகைகளும் தனித்துவமானவை.இதை தவிர நவீன ஆபரணங்கள் பலவும் தற்போது அதிகம் உள்ளன.

    குழந்தை பிறப்பு,பிறந்தநாள் மற்றும் திருமண நாள் மட்டுமல்லாமல் அனைத்து சமூக விழாக்களுக்கும் உறவுகளுக்கு நகை பரிசளிப்பது உங்களுக்கு அவர்களுடனான நெருக்கத்தையும் அன்பையும் காட்டுகிறது. பாலினம், உலோக நிறம், தயாரிப்பு வகை போன்றவற்றின் அடிப்படையில் முடிவுகளை வடிகட்டலாம். நீங்கள் பரிசளிக்கும் நபரின் பாணி மற்றும் விருப்பங்களுடன் பொருந்தக்கூடிய பரிசை ஆராய்ந்து தேர்வு செய்யலாம்.

    • கமலேஸ்வரனுக்கு பழனிசெட்டிபட்டி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
    • கமலேஸ்வரனும், மாணவியும் பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை செல்போனில் பதிவு செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள சின்னம்மாள்புரம் சன்னாசியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் கமலேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற கமலேஸ்வரன் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவனின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    நேற்று இரவு வீட்டுக்கு அருகே உள்ள காலி இடத்தில் கமலேஸ்வரன் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து அவரது தாய் ஊஞ்சம்மாள் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இது குறித்து மாணவனின் தாய் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கமலேஸ்வரனும் பழனிசெட்டிபட்டி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கமலேஸ்வரனும், அந்த மாணவியும் பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை செல்போனில் பதிவு செய்தனர். இதனிடையே அந்த காதல் விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து கமலேஸ்வரனை கண்டித்து இனிமேல் தனது மகளுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்து சென்றனர். அதன் பிறகும் மாணவர் தொடர்ந்து தனது காதலியுடன் பேசி வந்துள்ளார். இதனால் மாணவியின் தந்தையான போடேந்திரபுரம் காளியம்மன் கோவில் அருகில் வசிக்கும் சன்னாசி என்பவர் மாணவனின் செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டார். அதன் பிறகு கமலேஸ்வரனை அழைத்துக் கொண்டு நான் மாணவி வீட்டுக்கு சென்றேன்.

    அப்போது சன்னாசி உன் மகனை கண்டித்து வை. படிக்கும் காலத்திலேயே என் மகளுடன் காதல் செய்து வருகிறான். இனியும் தொடர்ந்தால் உன் மகனை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து செல்போனை வாங்கிக் கொண்டு எனது மகனையும் அழைத்துக் கொண்டு நான் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்நிலையில்தான் எனது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே எனது மகனை அவர்கள்தான் கொலை செய்திருக்க கூடும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் மாணவியின் பெற்றோரை தேடிச் சென்ற போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனைத் தொடர்ந்து சன்னாசி மற்றும் அவரது மனைவி தமிழ்செல்வி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதல் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • லேகா தனது பிறந்தநாளில் அவரது காதலனுடன் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் முன்பு நிற்கிறார்.
    • காதலர் ஆகாஷ் லேகாவை சதுக்கம் முன்புள்ள ஒரு பெரிய விளம்பர பலகையின் முன்பு அழைத்து செல்கிறார்.

    காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தும் வாலிபர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரப்படுவது உண்டு. ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் 'டேல்ஸ் பை லேகா' என்பவரது பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில், லேகா தனது பிறந்தநாளில் அவரது காதலனுடன் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் முன்பு நிற்கிறார். அப்போது அவரது காதலர் ஆகாஷ் லேகாவை சதுக்கம் முன்புள்ள ஒரு பெரிய விளம்பர பலகையின் முன்பு அழைத்து செல்கிறார். அங்கு இருவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். அப்போது அவர்களின் பின்புறம் உள்ள பெரிய விளம்பர பலகையில் லேகாவின் புகைப்படங்கள் காட்டப்படுகிறது. இதைப்பார்த்து வியப்பில் ஆழ்ந்த லேகா மிகவும் சந்தோசப்படும் காட்சிகள் பார்ப்பவர்களை ரசிக்க செய்கிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.
    • அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரு :

    'காதல்' என்ற வார்த்தையை வர்ணிக்க முடியாது என்பார்கள் கவிஞர்கள். அதுபோல் காதலை மையமாக வைத்து வந்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன. கவிஞர்கள் பெருமாலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டான காதலை மையப்படுத்தியே கவிதைகள், பாடல்கள் எழுதுவார்கள். அக்காலத்தில் காதல் ஒரு ஊரிலோ அல்லது கிராமத்திலோ தான் இருக்கும்.

    ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசி பழகி பின்னர் திருமணம் பந்தத்தில் இணைவார்கள். பல காதல்கள் பெற்றோர் எதிர்ப்பு, சாதி, மதம், அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிந்ததும் உண்டு. அது இன்றளவும் நடந்து வருகிறது. ஆனால் தற்போது காதல் கடல் கடந்து கணினி, செல்போன் வாயிலாக காற்றில் பறந்து காதலர்களிடையே இணைப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.

    காதல் என்பது பைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம், வேலையில்லாதவர்கள் செய்யும் வேலை என்று கூறி பலர் பலவிதங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதையும் மீறி காதலர்கள் தங்களது காதலை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல் ஏராளமான காதல் ஜோடிகள் தங்கள் காதலில் மட்டுமல்லாது பல எதிர்ப்புகளை மீறி திருமணம் புரிந்து வாழ்விலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவர் மீதான அதீத காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வினோத செயலை செய்திருக்கிறார்.

    அதாவது அந்த இளம்பெண் தனது கணவரின் பெயரான 'சதீஷ்' என்ற பெயரை தன்னுடைய நெற்றியில் பச்சை குத்திக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார்.

    அந்த புகப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து 2.68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 'லைக்' செய்துள்ளனர். சிலர் 'இதுதான் உண்மையான காதல்' என்றும், சிலர் 'இது ஓவர் ஆக்டிங்' என்றும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். ஆனால் அந்த கருத்துகளுக்கு இளம்பெண் பதில் ஏதும் கூறவில்லை. தனது கணவர் மீதான அதீத அன்பையும், காதலையும் வெளிப்படுத்தவே தான் இதுபோன்று செய்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். தற்போது அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • மாணவியின் பெற்றோர், தங்கள் மகளை ஆசிரியர் கடத்திச் சென்று விட்டதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
    • பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருடன் மாணவி ஓட்டம் பிடித்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த வாரம் தனது 19-வது வயது பிறந்தநாளை சக மாணவிகளுடன் உற்சாகமாக கொண்டாடினார்.

    பிறந்த நாள் கொண்டாடிய ஒரு சில தினத்தில் தோழியை பார்த்து வருவதாக வீட்டில் கூறி சென்ற மாணவி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் மாணவி படித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாயமான மாணவியின் தோழியிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    மாயமான மாணவிக்கும், 32 வயதான ஆங்கில ஆசிரியருக்கும் கடந்த சில மாதங்களாக காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாததால், தங்கள் காதலை ரகசியமாக வைத்துள்ளனர். சமீபத்தில் மாணவிக்கு 19-வது வயது பிறந்து விட்டதால், அவர் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளை ஆசிரியர் கடத்திச் சென்று விட்டதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது, மாயமான மாணவி, ஆசிரியருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. அவர்களை நாகர்கோவில் அழைத்துவர போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் பயனாக மாணவியும் ஆசிரியரும் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் நிலையம் வந்த அவர்கள் மகளை பார்த்து கதறி அழுதனர். படிக்க வேண்டிய வயதில் திருமணம் வேண்டாம் என கூறினர். ஆனால் மாணவி அதனை கேட்கவில்லை. அவர் ஆசிரியருடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.

    இதற்கிடையில் அவர்கள் 2 பேரும் மேஜர் என ஆசிரியரின் நண்பர்கள் பேசினர். இந்த நிலையில் ஆசிரியரின் பெற்றோரும் போலீஸ் நிலையம் வந்தனர். பின்னர் இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆசிரியர்-மாணவி திருமணத்தை நடத்துவது எனவும், திருமணம் நடக்கும் வரை மகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர். இதற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசாரிடம் எழுதி கொடுத்தனர். அதன்பிறகு மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருடன் மாணவி ஓட்டம் பிடித்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருமணத்திற்கு பின்பும் பிரியங்கா குமாரி தனது காதலன் ஜிதேந்திராவை மறக்கமுடியாமல் அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
    • பிரியங்கா குமாரியின் பெற்றோரை அழைத்து சனோஜ்குமார் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்திற்குட்பட்ட மனாட்டு பகுதியை சேர்ந்தவர் சனோஜ்குமார் சிங். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று புதுமண தம்பதியினர் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

    ஆனால் திருமணத்திற்கு முன்பே பிரியங்கா குமாரி கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜிதேந்திர விஸ்வகர்மா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பிரியங்கா குமாரியை சனோஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    திருமணத்திற்கு பின்பும் பிரியங்கா குமாரி தனது காதலன் ஜிதேந்திராவை மறக்கமுடியாமல் அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இருவரும் வீட்டை விட்டு ஓடுவதற்கும் திட்டமிட்டு இருந்தனர். இந்த விபரம் சனோஜ்குமாருக்கு தெரிய வந்தது.

    அவர், பிரியங்கா குமாரியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தனது மனைவியை அவரது விருப்பப்படி காதலருடன் அனுப்பி வைத்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • காதல் ஜோடி மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் மாரீஸ்வரி(வயது19). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதே கல்லூரியில் படிப்பவர் சங்கரப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் என்பவரின் மகன் தனுஷ்வரன்(20), மாரீஸ்வரியும், தனுஷ் வரனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி மதியம் வீடு திரும்பவில்லை.

    பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். மாலையில் அவரது சகோதரர் பிரேம்குமாருக்கு செல்போனில் மாரீஸ்வரி அழைத்துள்ளார். கல்லூரியில் உடன் படிக்கும் தனுஷ்வரனை காதலித்த தாகவும், அவருடன் சென்றிருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறினார். இதுகுறித்து பிரேம்குமார் பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தந்தை பாலமுருகன் சங்கரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று ராமஜெயத்திடம் விசாரித்துள்ளார். அப்ேபாது ராமஜெயம் தனக்கும் இப்போதுதான் தனது மகன் அழைத்ததாகவும் தன்னுடன் படிக்கும் மாரீஸ்வரியை அழைத்து சென்றிருக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து இரு வீட்டாரும் காதல்ஜோடியை பற்றி பலரிடம் விசாரித்தும், அவர்களை பல இடங்களில் தேடியும் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து மகளை மீட்டு தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

    • நமது திருமண முறையும் மிகுந்த பாரம்பரியம் மிக்கது.
    • திருமண சடங்குகள் என்பது மிகவும் தனித்துவமானது.

    காதல் என்ற ஒற்றைச் சொல்லை வாழ்வில் கடக்காதவர்கள் வெகு சிலரே. பள்ளிப் பருவத்தில் அரும்பும் இனக்கவர்ச்சி தொடங்கி தங்களது இறுதிக்காலம் வரை காதலை பல்வேறு காலகட்டத்தில் கடந்தே பயணிக்கிறார்கள். காதலும் தன்னை பல்வேறு பரிணாமங்களுக்கு உட்படுத்திக் கொண்டாலும், மனித வாழ்வில் பல்வேறு மகத்துவங்களை நிகழ்த்தியே வருகிறது.

    காதலின் பரிணாமம் என்பது சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. சங்க காலத்தில் அரசர்கள் கொண்ட காதலும், காந்தர்வ திருமணமும் எண்ணற்ற இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அரசர்கள் காலம் முடிந்து நமது கருப்பு, வெள்ளை திரைப்பட காலத்தில் காதல் மிகவும் புனிதமானதாக காட்டப்பட்டாலும், நிஜ வாழ்வில் அதை ஏற்றுக் கொண்டவர்களும், காதலில் வெற்றி பெற்றவர்களும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான்.

    காரணம், நமது நாடு பன்முக கலாசாரம் கொண்ட நாடாக இருப்பினும், இங்குள்ள ஜாதி, மத கட்டுப்பாடுகள் ஏராளம். நமது திருமண முறையும் மிகுந்த பாரம்பரியம் மிக்கது. அந்தந்த ஜாதி, மதம், இனம், மொழி என எத்தனை பிரிவு இருந்தாலும் திருமண சடங்குகள் என்பது மிகவும் தனித்துவமானது.

    நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளாலும், பல்வேறு மேற்கத்திய கலாசாரத்தாலும் வாழ்க்கை முறை எவ்வளவோ மாறி இருப்பினும், நமது சமுதாயத்தில் உள்ள திருமண சடங்குகளும், நடைமுறைகளும் இன்றும் பழமை மாறாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் நாம் காதலுக்கு எதிரி என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் அமரத்துவம் பெற்ற லைலா, மஜ்னு முதல் அம்பிகாவதி, அமராவதி வரை காதலர்கள் இங்குதான் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அதைவிட உலக அதிசயங்களில் ஒன்றான காதலுக்கான அதிசயம் தாஜ்மஹாலின் அமைவிடமே நமது நாடுதான். அந்த அளவுக்கு கலை மற்றும் கலாசாரம் மட்டுமல்ல, காதலும் பொங்கி வளர்ந்தது இந்த பூமியில் தான். காதலின் மகத்துவத்தை நாம் அறிந்ததால் தான் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மேன்மைமிகு கலாசாரத்திற்கு சொந்தமான பூமியாக பாரத தேசம் திகழ்கிறது.

    காதல் புனிதமானதுதான். ஆனால் நாம் அதை கையாளும் விதம் எப்படி என்பதுதான் அதை நிர்ணயிக்கிறது. சமீப காலங்களில் காதலும், இதைத்தொடர்ந்து நடைபெறும் பல்வேறு சம்பவங்களும் பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளன. நவீன கால மாற்றத்தால் காதலும் பரிணாம வளர்ச்சி அடைந்து பெரிதும் மாறிப் போயுள்ளது. 90-களின் மத்தியில் காதலை வெளிப்படுத்தக் கூட தயங்கிய இளைய சமூகம் இன்று மேற்கத்திய கலாசாரமான 'டேட்டிங்', 'லிவிங் டுகெதர்' வரை வந்து விட்டது என்றால் அது நவீன மாற்றமா அல்லது கலாசார சீரழிவா? என பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு சமூக சூழல் மாறிப் போயுள்ளது.

    இன்று கல்வி, வேலைவாய்ப்பிற்காக ஆண், பெண் பேதமின்றி அனைவரும் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். மேற்கத்திய நாடுகளில் நமக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கும் சூழலில், அங்கு செல்லும் நம்மிடம் அவர்களது உணவு, உடை மட்டுமல்ல, கலாசாரமும் தொற்றிக் கொள்வதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அதில் மிக முக்கியமாக நோய் போல் தொற்றி பரவிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பழக்கம் 'லிவிங் டுகெதர்' கலாசாரம்.

    மேலை நாடுகளில் மட்டும் கேள்விப்பட்ட இந்த கலாசாரம் இன்று நமது நாட்டிலும் கால் எடுத்து வைத்து இருப்பது தான் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. திருமண பந்தத்தில் இணையும் மணமக்களுக்கு நமது நாட்டில் சமூக அந்தஸ்தும், பாதுகாப்பும், சட்ட உதவிகளும் கிடைக்கிறது. திருமணப் பதிவு சட்டம் கட்டாயம் என்ற அளவுக்கு இன்றைய சட்டமும், சமூகமும் சென்று கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற `லிவிங் டுகெதர்' கலாசாரம் எந்தவிதமான தாக்கத்தை கொண்டு வரப் போகிறதோ என்பதுதான் சமூக ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ''மேஜரான ஆண், பெண் இருவரும் சேர்ந்து வாழ்வதை 'லிவிங் டுகெதர்' என்கிறோம். இந்த உறவில் இருந்து அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விலகிச் செல்லும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அவ்வாறு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எவ்வித சட்டபூர்வ உரிமையும் இல்லை'' என தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு சட்ட ரீதியில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இதே வேளையில், இந்த உறவு முறையை இரண்டாகப் பிரித்து ஏற்கனவே உச்சநீதிமன்றமும் ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையின் வரம்பிற்குள் 'லிவிங் டுகெதர்' வருகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணமாகாத மேஜர் இருவர் லிவிங் டுகெதர் முறையில் வாழ சட்ட அங்கீகாரம் உள்ளது என்றும், மேஜராகவே இருந்தாலும் திருமணமானவருடன், திருமணமாகாத ஒருவர் சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சட்ட அங்கீகாரம் இருந்தாலும் `லிவிங் டுகெதர்' முறைக்கு சமூக அங்கீகாரம் கிடைக்குமா? என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான்.

    ''சமூக கட்டுப்பாடுகள் நிறைந்த நமது திருமண சடங்குகள் மூலம் தம்பதிகள் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ வைக்கப்படுகிறார்கள். ஆனால் 'லிவிங் டுகெதர்' போன்ற மேற்கத்திய கலாசார முறைகள் மூலம் எங்கள் உணர்வுகளுக்கு உரிய மதிப்பும், சுதந்திரமும் கிடைக்கிறது'' என்பதே இன்றைய இளைய தலைமுறையினரின் வாதமாக உள்ளது. பிடித்தால் வாழ்கிறோம், இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம் என்ற பாணியிலான வாழ்க்கை முறை நமது கலாசாரத்திற்கு ஏற்றதா? என கேள்வி எழுப்புகிறார்கள் பெற்றோர்கள் தரப்பினர். திருமணச் சடங்கில் இருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு இதில் இல்லாததால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதே பெற்றோரின் கவலை. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தோல்வியில் முடிந்தாலும் அவர்களுக்கு ஜீவனாம்சம், சொத்தில் பங்கு, குழந்தைகளுக்கு சொத்துரிமை போன்ற அடிப்படை சட்டப் பாதுகாப்புகள் ஏராளமாக உள்ளது. எவ்வித சமூக அங்கீகாரமும், சட்டப் பாதுகாப்பும் இல்லாத இந்த வாழ்க்கை முறையால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் பெற்றோர்கள்.

    நமது பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என பெற்றோர் கனவு காண்பது மட்டும் அல்ல, அவர்கள் எதை தேர்வு செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணித்து வழிநடத்த வேண்டும். அப்போதுதான் 'லிவிங் டுகெதர்' போன்ற மேற்கத்திய கலாசார வாழ்க்கை முறையில் இருந்து நமது எதிர்கால சந்ததியை காப்பாற்ற முடியும் என்பதே உண்மையாகும்.

    பிடித்தால் வாழ்கிறோம், இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம் என்ற பாணியிலான வாழ்க்கை முறை நமது கலாசாரத்திற்கு ஏற்றதா? என கேள்வி எழுப்புகிறார்கள் பெற்றோர்கள் தரப்பினர். திருமணச் சடங்கில் இருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு இதில் இல்லாததால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதே பெற்றோரின் கவலை.

    ×