search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maaveerar Day"

    மாவீரர் நாளை முன்னிட்டு ம.தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ சுடர் ஏற்றி வைத்து, மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
    சென்னை:

    மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று காலை 7 மணி அளவில், ம.தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ கொட்டும் மழைக்கு இடையே சுடர் ஏற்றி வைத்து, தமிழ் ஈழப்போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

    இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.ராசேந்திரன், கே.கழக குமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மற்றும் எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று புகழ் வணக்கம் செலுத்தினர்.

    ×