என் மலர்
நீங்கள் தேடியது "Machine"
- கனமழையால் மழைநீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது.
- ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் வடிய வைக்கும் பணி.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தோட்ட மானியத்தில் சில மாதங்களுக்கு முன்பு மயான சாலை பேவர் பிளாக் முலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்கால்கள் பகுதி சாலை போடப்பட்டதால் குறுகியது.
தற்பொழுது பெய்து வரும் கனமழையால் மழை நீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது இதனால்பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டன மேலும் விசப்பூச்சிகள், பாம்புகள் வருவதால் பேரூராட்சி நிர்வாகம் விரைவாக புதிதாக அமைக்கப்பட்ட சாலை குறுக்கே வடிகால் குழாய்களை அமைத்துமழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் மயிலாடுதுறை சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு வெட்டி மழை நீர் வடிய வைக்கப்பட்டது.
- சிறிது நேரத்தில் மளமளவென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் வாடி வாசல் கடைத்தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 62). இவர் அதே பகுதியில் தையல் கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் திருப்பதிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை தஞ்சைக்கு வந்தார். பின்னர் கடையை திறந்து வாசலில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கடைக்குள் தீ பற்றியது. சிறிது நேரத்தில் மளமள வென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. திடுக்கிட்டு எழுந்த கதிரேசன் ஓடி சென்று வாளியில் தண்ணீர் நிரப்பி ஊற்றினார்.
இருந்தாலும் தீ மளமளவென எரிந்த தால் கட்டுப்படுத்த முடியவி ல்லை.இது குறித்து தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருந்தாலும் கடையின் பெருமளவு பகுதி எரிந்தது. தையல் எந்திரம் மற்றும் அனைத்து பொருட்கள் எரிந்து சேதமானது.
இது பற்றிய புகாரின் பேரில் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் கசிவால் தீப்பிடி த்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட வருவாய் அலுவலருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
- 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவைகள் கையிருப்பில் உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ், மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது :-
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24/7 இயங்ககூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை கலெக்டர் நிலையிலான 10 குழுக்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத வகையில், புயல் சீற்றங்கள் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேவையான அளவு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் 1,லட்சத்து 30 ஆயிரத்து 25, மணல் மூட்டைகளும், 84ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5 ஆயிரம் சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது.
106 மரம் அறுக்கும் எந்திரங்கள், 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- உழவு எந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு.
- நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், குருங்குளம், வெட்டிக்காடு, திருவோணம், ஊரணிபுரம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும்.
கார்த்திகை மாத பருவத்தில் நிலக்கடலை விதைக்க வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
தற்போது மானாவாரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், நிலத்தை உழவு செய்வது, அடியுரம் இடுவது, சமன்படுத்துவது, நிலக் கடலையை வாங்கி அதிலிருந்து விதையை உடைத்து எடுப்பது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறனர்.
மானாவாரி பகுதியில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்புப் பணியில் ஈடுபடுவதால் உழவு இயந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலக்கடலை விதையின் விலையும் அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து மருங்குளம் விவசாயிகள் கூறும் போது:-
மானாவாரி பகுதியில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை விதைத்தால் மகசூல் நன்றாக இருக்கும் என்பதால் அதிக பரப்பளவில் கடலை விதைப்பில் ஈடுபடுவோம்.
தற்போது இந்த பட்டத்தில் மழையும் பரவலாக பெய்துள்ளதால் இதனை பயன்படுத்தி நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் போதிய அளவு நிலக்கடலை விதை இல்லாததால் புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்கி வர வேண்டி உள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான நிலக்கடலை விதையை வேளாண்மை துறை சார்பில் வழங்க வேண்டும்.
மேலும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நிலக்கடலை விதைக்கும் எந்திரங்களை அதிக அளவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதுடன் துறை சார்பில் வாடகைக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
- விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியை டிரோன் எனும் எந்திரத்தை மூலம் தொடங்கி விட்டனர்.
- 3 முதல் 4 ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வட்டத்தில் சமீபகாலமாக டிரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கூலி ஆட்கள் பற்றாகுறை, கூலிதொகை உயர்வு, அதிகரித்து வரும் செலவு போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்போது விவசாய பணிக்கு அதிகளவில் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வயல்களை உழவு செய்தல், வரப்பு சீர்செய்தல், நடவு நடுதல் உள்பட அனைத்து விவசாய தேவைக்கும் கடந்த சில வருடங்களாக அதிகளவில் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியிலும் டிரோன் எனும் இயந்திரத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். டிரோன் மூலம் மணிக்கு 3முதல் 4ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் டிரோன் மூலம் மருந்து தெளிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
- முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிந்து நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சியில் வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்டத்திற்குள்ளான பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.
திருமருகல் வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வக்குமார் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தபடும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.
வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர் ஏழுமலை எடுத்துரைத்தார்.
காம்கோ கம்பெனி டீலர் சங்கரநாராயணன் தங்கள் நிறுவனத்தில் உள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கூறினார்.
முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிந்து நன்றி கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடு களை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபு மற்றும் ராஜ்குமார் செய்திருந்தனர்.
- 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஸ்கில் இந்தியன் டெல்டாகலை திருவிழா நடைபெற்றது. ஸ்கில் இந்தியன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் தலைமை வசித்தார். முதல்வர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோலப் போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செல்வராஜ் எம்.பி, நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
முடிவில் டெல்டா கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
- மகளிர் நலனுக்காக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச தையல் பயிற்சி மையம்.
- 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடியில் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையத்தினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலினர் திறந்து வைத்து பயிற்சி உதவி பொருட்களை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மகளிர் உதவும் சங்கங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது .
அத்தகைய வகையில் தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் மகர்நோன்புச்சாவடி வாடிவாசல் வைக்கோல்கார தெருவில் இலவச தையல் பயிற்சி முகாம் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் மகளிர் நலனுக்காக வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் தையல் பயிற்சி அளித்திட இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் செயலாளர் முகமது ரபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி, ஸ்டாலின் பீட்டர் பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- மாற்றுத்திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அல்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச தையல் எந்திரங்களை பெற விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் விவரம் வருமாறு :-
வருமானச் சான்று நகல் ரூ.72,000-த்திற்குள் இருத்தல் வேண்டும். (தாசில்தாரிட மிருந்து பெறப்பட வேண்டும்). பிறந்த தேதிக்கான வயது சான்று நகல் அல்லது கல்வி சான்று நகல் வேண்டும் (வயது 20 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்) .
விதவையாயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெறப்பட வேண்டும். சாதிச் சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும். கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும்.
மாற்றுத் திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும். தையல் தெரியும் என்பதற்கான சான்று நகல் (இணைக்கப்பட்ட வேண்டும்).
குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல். பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் 2.மேற்கண்ட ஆவணங்க ளுடன் அவரவர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக த்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர்/ ஊர்நல அலுவலர் ஆகியோர்களை அணுகி, இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு அறை எண்.303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சபுஜா குமாரி குச்சியை எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.
- இதில் குச்சி உடைந்து தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
பீகார் மாநிலம், ஹிசுவா பகுதியை சேர்ந்தவர் அனூப் மாஞ்சி (43). இவர் ஈரோடு மாவட்டம் குப்பக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அனூப்மாஞ்சி சம்பவத்தன்று பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அவரது மகள் சபுஜா குமாரி (12) விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அப்போது சபுஜா குமாரி கையில் வைத்திருந்த மரக் குச்சியை அங்கு இயங்கி கொண்டிருந்த எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.
இதில் குச்சி உடைந்து சபுஜா குமாரியின் தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கி விழுந்த சிறுமியை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சபுஜா குமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.1160 மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை எந்திரங்களுக்கு ரூ.1880 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏக்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.625 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக விவசாய நிலங்களை சமன் செய்யும் புல்டோசர்கள் மணிக்கு ரூ.1230, உழவுப் பணிகளை மேற்கொள்ள டிராக்டர் உடன் கூடிய இணைப்பு கருவிகளான நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம், வரப்பு செதுக்கி சேறும் பூசும் கருவி, தென்னை மட்டை தூளாக்கும் கருவி, ரோட்டவேட்டர், 5 வரிசை கொத்து கலப்பை, சட்டிக் கலப்பை மற்றும் 9 வரிசை கொத்து கலப்பை ஆகியன மணிக்கு ரூ.300ம், நெல் அறுவடைப் பணிகள் மேற்கொள்ள டயர் வகை இயந்திரங்களுக்கு ரூ.1160 மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.1880 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் மேற்காணும் கருவிகளுக்கு செலுத்தப்படும் வாடகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இவற்றை விவசாயிகள் பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகப ட்சமாக 5 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 5 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏக்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.1250 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.
பாசன நினங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2.5 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 2.30 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏங்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.625 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.
மேற்கண்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவை ப்படும் விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்யும் சமயம் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் பதிவு செய்து பயன் பெறலாம்.
செலுத்திய வாடகையில் மானியத்தொகையினை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல் கும்பகோ ணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் -612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டா ரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறி யாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புஷ்பா (வயது 47). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் உளுந்து அடிக்கும் எந்திரத்தில், உளுந்து அடித்துக் கொண்டிருந்தார்.
- புஷ்பாவின் கழுத்தில் இருந்த துண்டு உளுந்து அடிக்கும் எந்திர விசிறியில் மாட்டிக்கொண்டது. தூக்கி வீசப்பட்ட புஷ்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி புஷ்பா (வயது 47). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் உளுந்து அடிக்கும் எந்திரத்தில், உளுந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது புஷ்பாவின் கழுத்தில் இருந்த துண்டு உளுந்து அடிக்கும் எந்திர விசிறியில் மாட்டிக்கொண்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட புஷ்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு புஷ்பாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலன் அளிக்காமல் புஷ்பா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். புஷ்பாவின் கணவர் ராமசாமி (55) கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.