search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manchalaru dam"

    • இடி மின்னலுடன் கூடிய கன மழை இரவு முழுவதும் பெய்தது.
    • அணைக்கு திடீரென நீர்வரத்து 184 கனஅடியாக உயர்ந்தது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு திடீரென நீர்வரத்து 184 கனஅடியாக உயர்ந்தது.

    ஏற்கனவே மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டி 30 நாட்களுக்கும் மேலாக அதே நிலையில் நீடிக்கிறது.

    அணைக்கு நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 184 கனஅடியாக அதிகரித்தது. 184 கன அடி நீரை அப்படியே மஞ்சளாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மஞ்சளாற்று கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

    இதேபோல் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து வந்தது.

    இதனிடையே பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான சோத்துப்பாறை வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை முதல் கன மழை பெய்தது.

    எ.புதுப்பட்டி, வடுகபட்டி, சில்வார்பட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை இரவு முழுவதும் பெய்தது.

    மேலும் சின்னமனூர், பாளையம், கோம்பை, கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    முல்லைப்பெரியாறு அணை 126.25 அடியாக உள்ளது. அணைக்கு 570 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1511 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    3888 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 57.25 அடியாக உள்ளது. 1441 கன அடி நீர் வருகிறது.

    மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1199 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 3097 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 114.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 17.4, தேக்கடி 12.6, கூடலூர் 8.4, சண்முகாநதி அணை 8.6, உத்தமபாளையம் 5.6, வீரபாண்டி 2, வைகை அணை 38, மஞ்சளாறு 61, சோத்துப்பாறை 12, கொடைக்கானல் 17 மி.மீ மழை அளவு பதிவானது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கொடைக்கானலில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வறண்டுகிடந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

    57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில் 51 அடியை எட்டும் போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 53 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை, அதனைதொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

    தற்போது அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 23 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 866 கனஅடிநீர் வருகிறது. 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.13 அடியாக உள்ளது. 374 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 93.15 அடியாக உள்ளது. 26 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 6.4, கூடலூர் 14.2, சண்முகாநதிஅணை 13.6, மஞ்சளாறு 7, பெரியகுளம் 3.6, வீரபாண்டி 4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • 53 அடியை எட்டியதும் 2 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும்.
    • கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடைதொடரும் என அறிவித்துள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் உயரம் 57 அடியாகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கப்படு கிறது.

    கொடைக்கானல் பகுதியில் பெய்யும் மழை யால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக அக்டோபர் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கி யுள்ளது.

    இன்று காலை நிலவர ப்படி 51.20 அடி நீர்மட்டம் உள்ளது. இதனைதொடர்ந்து தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரான்கோட்டை மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 53 அடியை எட்டியதும் 2 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும்.

    தற்போது அணைக்கு 86 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 300 கனஅடியில் இருந்து 928 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டமும் 118.80 அடியிலிருந்து 119.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.13 அடியாக உள்ளது. 333 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.61 அடியாக உள்ளது. 19 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை யால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடைதொடரும் என அறிவித்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    பெரியாறு 13.2, தேக்கடி 2.4, சண்முகாநதி 1.8, போடி 3, மஞ்சளாறு 7, சோத்து ப்பாறை 3, வீரபாண்டி 4.2, அரண்மனைப்புதூர் 13 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×