என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mandous cyclone"

    • 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • புதுச்சேரி துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றது. சென்னை, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக (இன்று) புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது.

    இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது.
    • தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த 5-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது.

    இந்த தாழ்வு மண்டலம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக நேற்று மாலை மாறும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றிரவு தான் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு "மாண்டஸ்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    இந்த புயல் காரைக்காலுக்கு 560 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு 640 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு இருக்கிறது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை (9-ந்தேதி) நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதற்கிடையே இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி மாண்டஸ் புயல் தென் மேற்கு வங்க கடலில் காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் நிலவியது.

    சென்னையை நெருங்கிவரும் இந்த புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.

    11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி உள்பட 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும்.

    சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது. மாண்டஸ் புயல் நாளை சென்னையை நெருங்கக் கூடும் என்பதால் இன்று முதல் சனிக்கிழமை வரை தமிழகம், புதுச்சேரி, கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வேலூர்:

    சென்னையை நெருங்கிவரும் மாண்டஸ் புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மேலும், புயல் காரணமாக வட மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் நிலையில் சுமார் 6 அடிக்கு மேல் கடல் அலைகள் உயர்ந்து மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது.
    • கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளதால் அதன் தொடர்ச்சியாக கடல் நீர் தற்போது வழக்கத்தை விட சுமார் 30 அடிக்கு மேல் வந்து செல்கின்றது.

    கடலூர்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இதில் புயலுக்கு மாண்டாஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

    மேலும் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றி இருந்த நிலையில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு புயல் உருவாகி உள்ளது என்பதனை அறிவித்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் நிலையில் சுமார் 6 அடிக்கு மேல் கடல் அலைகள் உயர்ந்து மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது. மேலும் கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளதால் அதன் தொடர்ச்சியாக கடல் நீர் தற்போது வழக்கத்தை விட சுமார் 30 அடிக்கு மேல் வந்து செல்கின்றது.

    மேலும் கடலூர் தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக 30 அடிக்கு முன்பு நிறுத்தப்பட்ட இடத்திற்கு கடல் அலை வந்து செல்வதால் மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அவசர அவசரமாக படகுகளை சற்று முன்னோக்கி கொண்டு செல்வதையும் காண முடிந்தது.

    இன்று முதல் கடல் பகுதியில் காற்றின் வேகமும், அலையின் சீற்றமும் அதிகரிக்கும் என்ற நிலையில் தற்போது கடல் அலை வழக்கத்தை விட அதிக அளவில் முன்னோக்கி வருவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் சமயத்தில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் மீனவர்கள் இருந்து வருகிறார்கள்.

    மேலும் கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக லேசான காற்றும் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்று, கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து புயல் மற்றும் மழை வெள்ள மீட்பு பணிக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்று, கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இக்குழுக்களில் வருவாய் காவல், உள்ளாட்சி மண்டல்க குழுக்கள் மின்சாரம் உள்ளிட்ட 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றிருப்பர். இந்த குழுவினர் மழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.

    21 மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்:- காஞ்சிபுரம் மாநகராட்சி ஜி.கண்ணன் (ஆணையர் காஞ்சிபுரம்)- 7397372823. காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம் ஏழுமலை (துணை ஆட்சியர்) -9677053981, பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்த வாடி பிரகாஷ்வேல் (மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்)-7338801259.

    வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் பிரமிளா (நேர்முக உதவியாளர் சத்துணவு திட்டம்)-7402606004, தென்னேரி சுமதி (தனித்துணை ஆட்சியர்) -9840479712, மாகரல்- கணேசன் (நேர்முக உதவியாளர் (வேளாண்மை)-9894215521. உத்திரமேரூர் பேரூராட்சி - ராமசந்திரன் (உதவி.செயற்பொ றியாளர்)-7402606000, திருப்புலிவனம், களியாம்பூண்டி கனிமொழி (வருவாய் கோட்டாட்சியர்) -9445000413. சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் இளங்கோவன் (இணைஇயக்குநர் வேளாண்மை)- 9842007125, திருபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் செல்வமதி (தனித்துணைஆட்சியர் (நி.எ) மண்ணூர்) -9842023432.

    மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் புஷ்பா- (நேர்முக, உதவியாளர்)- 9443395125. வல்லம் மற்றும் தண்டலம் மதுராந்தகி-(சிறப்பு மாவட்ட வருவாய அலுவலர்)-7305955670.

    படப்பை, மணிமாறன் (உதவி இயக்குநர்)- 7402606005, படப்பை சிவதாஸ் (உதவி ஆணையர்) -9360879271, செரப்பணஞ்சேரி மணிமங்கலம்-எம்.சத்தியா (ஆய்வுக்குழு அலுவலர்) -9566420921. கொளப்பாக்கம் (மவுலிவாக்கம், கொளுத்து வாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) பாபு மாவட்ட, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்- 9445000168.

    திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து யசோதரன் (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்)- 9952227179, மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், பொழு முனிவாக்கம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, தண்டலம், கோவூர்சிக் கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்) கோபி (உதவி இயக்குநர் )-7402606006.

    மாங்காடு நகராட்சி பகுதிகள் கே.கணேஷ் (கூடுதல் நேர்முக உதவியாளர்)-9840281502, குன்றத்தூர் நகராட்சி ஜெசரவணகண்ணன், (வருவாய் கோட்ட அலுவலர் திருபெரும்புதூர்)- 9444964899.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • கொடுமுடி, பவானி, பு.புளியம்பட்டி, சென்னிமலை, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, பர்கூர், பெருந்துறை, சிவகிரி உள்பட மாவட்டம் முழுவதும் சாரல்மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    மாண்டஸ் புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதே போல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் வீரர்கள் பேரிடர் மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று வீசிவருகிறது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே போல் கொடுமுடி, பவானி, பு.புளியம்பட்டி, சென்னிமலை, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, பர்கூர், பெருந்துறை, சிவகிரி உள்பட மாவட்டம் முழுவதும் சாரல்மழை பெய்து வருகிறது.

    மேலும் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், சுவட்டர் அணிந்த படி சென்றனர். தாளவாடி, பர்கூர் மலை பகுதிகளில் பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-3, கோபி செட்டிபாளையம்-1.20, பவானி-1.40, கொடுமுடி-2, சென்னிமலை-2, மொடக்குறிச்சி-3.4, எலந்தகுட்டை மேடு-1.8, கொடிவேரி-3, மொத்தம் 17.80 மி.மீ.மழை பதிவாகி இருந்தது.

    • பலத்த காற்று வீசியதால் கொடைக்கானல் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் பெயர்ந்து விழுந்தன.
    • சாரல் மழை காரணமாக ஏரியில் படகு சவாரி செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையிலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இருந்தபோதும் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

    கொடைக்கானலில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் வத்தலக்குண்டு ரோடு, பழனி ரோடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து தடைபட்டது. அந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சென்று முறிந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பலத்த காற்று வீசியதால் கொடைக்கானல் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் பெயர்ந்து விழுந்தன. சாரல் மழை காரணமாக ஏரியில் படகு சவாரி செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பெரும்பாலான சுற்றுலா தலங்களும் வெறிச்சோடியே காணப்பட்டது.

    இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாநகர பேருந்து சேவையும் குறைக்கப்பட்டுள்ளது.
    • சாலைகளில் குறைந்த அளவிலேயே நடமாட்டம் இருந்தது.

    சென்னை:

    மாண்டஸ் புயலால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு கடுமையான குளிர் வாட்டி எடுக்கிறது.

    ஊட்டியில் இருப்பது போன்று வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் கம்பளி உடைகளை அணிந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாநகர பேருந்து சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் குறைந்த அளவிலேயே நடமாட்டம் இருந்தது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையோர டீ கடைகள் பல மூடிக்கிடந்ததை காண முடிந்தது. சில கடைகள் மட்டுமே திருந்திருந்தன. சாலையோரத்தில் காய்கறி, பூ வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களும், சிறு வியாபாரிகளும் கடைகளை திறக்காமல் வைத்திருந்தனர். இதனால் கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    • மாண்டஸ் புயல் வலுவிழுந்து கரையை கடப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
    • வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் அதி கனமழை பெய்யும்.

    சென்னை:

    வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டிருந்தது.

    பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு "மாண்டஸ்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர புயல் இன்று காலையில் புயலாக வலுவிழுந்து கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது.

    அதன்படி தீவிர புயலாக இருந்த மாண்டஸ் இன்று காலையில் புயலாக வலுவிழுந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    புயல் கரையை கடக்கும் போது 65 கி.மீ. வேகத்தில் இருந்து 75 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

    இன்று காலை நிலவரப்படி மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் இலங்கை திரிகோணமலைக்கு வடக்கு-வடகிழக்கே 240 கி.மீ. தூரத்திலும், காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கே 240 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்றும் அதே நேரத்தில் கடல் சீற்றம், கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் வலுவிழுந்து கரையை கடப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் அதி கனமழை பெய்யும்.

    நாளை (10-ந்தேதி) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று காலை நிலவரப்படி மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர புயலாக இருந்து தற்போது வலுவிழக்கிறது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக் கூடும்.

    தற்போது 13 கி.மீ. வேகத்தில் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு முதல் அதிகாலை வரைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும்- புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரத்தையொட்டி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மிக கனமழையும் பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடக்க இருப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதி நாளை காலை வரையில் கொந்தளிப்புடன் காணப்படும். அதே போல மேற்கு மத்திய வங்க கடல் பகுதியிலும் கடல் சீற்றத்துடன் உள்ளது.

    தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கை கடல் பகுதியில் கடல் சீற்றம் நாளை வரை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் புயல் கரையை கடக்கும் போது வட தமிழக கடலோரப் பகுதி மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் கடல் அலை 2 அடி உயர வாய்ப்பு உள்ளது.

    மேலும் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதே போல் இன்று மாலை முதல் நாளை காலை வரை மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அதன் பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    மாண்டஸ் புயலையொட்டி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாலம் சேதம்

    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாலம் மாண்டஸ் புயலால் சேதம் அடைந்துள்ளது. ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் சில நாட்களிலேயே சேதம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.
    • திருவொற்றியூரில் காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.

    சென்னை:

    மாண்டஸ் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதனால் ராட்சத அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பி வருகின்றன. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் இன்று காலையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடற்கரை மணல் பகுதியை தாண்டி வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

    பட்டினப்பாக்கத்தில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. இந்த படகுகளை மீனவர்கள் போராடி கரைக்கு கொண்டு வந்தனர்.

    பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதேபோல திருவொற்றியூரில் காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
    • தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முடுக்கிவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் காட்டுப்பள்ளி, காலாஞ்சி, பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பாதுகாப்பு மையங்களில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன் உடன் இருந்தனர்.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் திருவள்ளூர், பேரம்பாக்கம், திருவூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய் கண்டிகை, பொன்னேரி ஆகிய 9 தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் இன்று காலை திருவள்ளூர் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் ஆய்வு செய்தார். அப்போது தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்ட கயிறு, ரப்பர் படகு உள்ளிட்ட மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    மேலும் கனமழையை எதிர்கொள்ள அனைத்து நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    ×