search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mantra to be recited"

    • அயோத்தியில் ராமருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேக நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்.

    உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் பிறந்த அந்த பூமியில், ராமருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவில் கும்பாபிஷேகமானது இன்று நடைபெறுகிறது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்த விஷயம் தான். இருந்தபோதிலும் நாம் எல்லோரும் அயோத்திக்கு சென்று அந்த கும்பாபிஷேகத்தை பார்க்க கூடிய பாக்கியத்தை பெற முடியாது. நிறைய தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

    வாய்ப்பு கிடைப்பவர்கள் பார்த்து அந்த ராமபிரானின் ஆசிர்வாதத்தை பெறலாம். இதோட மட்டுமல்லாமல் ராமருக்கு கும்பாபிஷேகம் நடக்கக்கூடிய அன்றைய தினம், ராமபிரானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற, கும்பாபிஷேகத்தை நேரடியாக பார்த்த பலனை பெற, சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரத்தை பற்றியும், நம் வீட்டில் செய்ய வேண்டிய சின்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாடு பற்றியும், இந்த பதிவை மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

    காலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் குளித்துவிட்டு உங்கள் வீட்டில் பெருமாளின் படம், ராமரின் பட்டாபிஷேகப்படம், அல்லது அனுமனின் திருவுருவப்படம் எது இருந்தாலும் சரி, அதை சுத்தபத்தமாக துடைத்து அதற்கு துளசி இலைகளை சூட்டிவிடுங்கள். பிறகு ஒரு சின்ன மண் அகல் விளக்கில் முதலில் நெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றி `ஜெய் ஸ்ரீ ராம்' என்ற மந்திரத்தை சொல்லலாம். அப்படி இல்லை என்றால் `ஸ்ரீ ராம ஜெயம்' என்ற மந்திரத்தை சொல்லலாம்.

    இந்த இரண்டில் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் தவறு இல்லை. இரண்டு மந்திரத்தையும் மாற்றி மாற்றி சொன்னாலும் தவறு இல்லை. 27 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள். பிறகு அந்த தீபம் உங்களுடைய வீட்டில் திங்கட்கிழமை முழுவதும் இரவு 7 மணி வரை அணையா தீபமாக ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. முடியாதவர்கள் 1 மணி நேரம் தீபத்தை ஏற்றி வைத்து, குளிர வைக்கலாம் தவறு கிடையாது.

    முதல் 1 மணி நேரம் நெய்யில் தீபம் ஏற்றுபவர்கள், அடுத்தடுத்து நெய் ஊற்றி நாள் முழுவதும் விளக்கு எரிய வைக்க முடியாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள், நல்லெண்ணெய் ஊற்றி அந்த தீபத்தை நாள் முழுவதும் ஏற்றி வைக்கலாம். கும்பாபிஷேகம் நடக்கும் சமயத்தில் உங்களுடைய வீட்டில் இந்த தீப ஒளி சுடர் பிரகாசமாக இருந்தால் அந்த ஸ்ரீராமரை இந்த தீபச்சுடரின் மூலம் நீங்கள் தரிசனம் செய்யலாம்.

    சரியாக கும்பாபிஷேகம் நடக்கப் போகும் சமயத்தில் `ஸ்ரீ ராம ஜெயம்' மந்திரத்தை நம் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால், அயோத்திக்கு சென்று ராமரை தரிசனம் செய்யவில்லை என்றாலும் சரி, அந்த ராமபிரானின் பரிபூரண ஆசியை நம்மால் பெற முடியும்.

    பூஜை அறையில் ஏற்ற வேண்டிய விளக்கை, சரியாக ராமபிரானுக்கு கும்பாபிஷேகம் நடைபெறக்கூடிய அந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ளலாம் தவறு கிடையாது. காலையில் இருந்து நம் வீட்டில் தீபம் ஏற்றி, ராம மந்திரத்தை மனதிற்குள் உச்சரிப்பது, ராமபிரானை நினைப்பது நமக்கு கோடி புண்ணியத்தை தரும்.

    ×