search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mathyapradesh"

    மத்திய பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை கற்பழித்த வழக்கை 3 நாட்களில் விசாரித்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தரேட் என்ற கிராமத்தில் 6 வயது சிறுமியை மோதிலால் அஹிர்வால் என்ற 25 வயது இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சம்பவத்தின்போது கையும் களவுமாக சிறுமியின் பெற்றோரிடம் பிடிபட்டார்.

    இதையடுத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மோதிலால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு எதிராக 11 சாட்சியங்களை மிகவும் தீவிரமாக விசாரித்த நீதிமன்றம், மூன்றே நாட்களில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    இதுபோன்று அனைத்து நீதிமன்றங்களும் விரைவாக குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வழங்கினால் குற்றங்களை வெகுவாக குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    ×