search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meat seized"

    • பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
    • 1½ டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சென்னை:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    அதில் பார்சல் பெட்டியில் ஆட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் வந்த குழுவினர் அந்த ரெயிலில் இருந்த இறைச்சியினை பரிசோதனை செய்தனர்.

    அப்போது முறையாக பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    3 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியை சென்னைக்கு கொண்டு வந்து ஓட்டல்களில் சப்ளை செய்ய இருந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 1½ டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கெட்டுப்போன அந்த இறைச்சியை பரிசோதனை செய்த பிறகு தான் அதன் தன்மை தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சி மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.
    சென்னை:

    சென்னை வடபழனியில் உள்ள யா மொகிதீன் பிரியாணி கடையில் உணவின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் அந்த பிரியாணி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் 65 கிலோ அளவில் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அழுகிய, கெட்டுப்போன கோழி, ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சி மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அவை அழிக்கப்பட்டன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ''கெட்டுப்போன இறைச்சி சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த இறைச்சியை அழித்துவிட்டோம். அதன் மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்துக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தவறான போக்கு. இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த இருக்கிறோம்'', என்றனர்.

    ''பொதுமக்களும் உணவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். உணவின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ×