என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monitoring"

    • 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

    ஊட்டி,

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கக்கனல்லா, நம்பியார் குன்னு, தானூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடிகளில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலை மையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியா ளர்கள் கொண்ட குழு போலீசார், வனத்துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளதால், அங்கிருந்து இறைச்சியையோ, முட்டைகளையோ தமிழகத்துக்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

    தற்காலிகமாக கேரள மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் பறவைகள் தொடர்புடைய பொருட்களை மறு உத்தரவு வரும் வரை கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

    • தஞ்சை பெரிய கோவில் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிரம்.
    • போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் எளிமையான முறையில் நடந்த குடியரசு தின விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில், கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், பூண்டி மாதா தேவாலயம், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை, பாபநாசம் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

    ரயிலில் ஏறியும் இருப்பு பாதை மற்றும் பாதுகாப்பு படை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். தண்டவாளங்களில் நவீன கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் விடுதிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுகிறது. மேலும் போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தவிர கடல் வழியாக சமூகவிரோதிகள் ஊடுருவாமல் தடுக்க, சேதுபாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளிலும் கடலோர போலீஸார் படகுகளில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தின் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 ஏ.டி.எம்.களில் மர்மநபர்கள் ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் தடுப்புகள் வைத்து கண்காணித்தல், பஸ் நிலையங்களின் அருகே விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தங்கி உள்ளனரா? என ரோந்து பணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிர கண்காணிப்பு இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில், பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏ.டி.எம்.மையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா? ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும், அங்கு பணியில் உள்ள காவலாளிகளிடம் ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்தாலோ, அடிக்கடி ஒரே நபர் நோட்டம் விட்டபடி அப்பகுதியில் சுற்றித்திரிந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதேபோல் அந்தந்த போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் ஆய்வு செய்தார். கமுதி அருகே உள்ள டி.புனவாசல் கிராமத்தில் அங்கன்வாடி மையம், வல்லந்தை ஊராட்சியில் பஞ்சாப் மாநில விவசாயி மன்மோகன் சிங்கின் விவசாயத் தோட்டம், கண்மாயில் குடிநீர் சுத்திகரிப்பு பணி, அபிராமம் பேரூராட்சியில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிட பணிகள், பேரையூர் சுகாதார ஆரம்ப நிலைய கட்டிடப்பணிகள், புல்வாய்க்குளம் ஊராட்சியில் நடைபெறும் சமுதாயக் கூட கட்டிடப் பணி, பேரையூர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மருத்துவம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலை, வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார்(வளர்ச்சி), உதவி ஆட்சியர் நாராயணன் சர்மா (பயிற்சி) மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசுவாபதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஊராட்சித் தலைவர்கள் அழகர்சாமி, தேவதி, மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.
    • சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூர் மலை 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள சிறுத்தை ஒன்று, மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.

    இதனால் ஊதியூர் மலை பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதனால் சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டி வைத்துள்ளனர். மேலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சிறுத்தை உருவம் பதிவு ஆகவில்லை. இதனால் கூண்டுகள் வைக்கப்பட்ட இடத்திற்கு சிறுத்தை வரவில்லை என தெரிகிறது.

    வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்க டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாதுகாப்புடன் வனப்பகுதி மற்றும் மலையடிவாரம் என அனைத்து இடங்களிலும் சிறுத்தையை தேடி வருகின்றனர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது " மலைப்பகுதியில் சிறுத்தை எங்கு பதுங்கி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கேமராவிலும் பதிவாகவில்லை. டிரோன் கேமராவிலும் சிக்கவில்லை. கூண்டுக்குள்ளும் மாட்டவில்லை. ஒருவேளை சிறுத்தை இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்ற சந்தேகமும் உள்ளது. இருப்பினும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறோம். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்" என்றார்.

    • 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.
    • 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் கர்ப்பிணிகள், சிசு இறப்பை பூஜ்யமாக்க சுகாதாரத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களை பிரத்யேக மொபைல்போன் செயலி வாயிலாக கண்காணிக்கும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய பாதிப்புக்கு உள்ளானவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளின் தகவல்களை பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில், கர்ப்பிணிகளின் முழு விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் விவரங்களை அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் பார்க்கலாம். பிரச்னைக்குரிய கர்ப்பிணிகளை அடையாளம் கண்டு எளிதில் கண்காணிக்க முடியும்.

    ஒவ்வொரு மாதமும் அவர்களின் உடல் நிலை குறித்து அறிந்து உரிய ஆலோசனைகள், சிகிச்சையை பரிந்துரைக்க முடியும். இதனால் கர்ப்பகாலங்களில் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

    • அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
    • யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.

    நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.

    மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.

    தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.

    யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.

    சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.
    • உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.

    நெல்லை:

    தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் சண்முகநதி அணைப்பகுதியில் சின்ன ஓவலாபுரம் பகுதியில் பிடிப்பட்ட அரிசி கொம்பன் யானை சாலை மார்க்கமாக நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு நேற்று மாலை 6 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.

    மணிமுத்தாறு வன சோதனை சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல கோதையாறு அணையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வயல் என்ற வனப்பகுதிக்கு அரிசி கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு ஏற்ற சாத்திய கூறுகள் இல்லாததால் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று அதிகாலை வனப்பகுதியில் விடப்பட்டது.

    மேலும் அதன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே முத்துக்குழி வயல் பகுதியில் யானை வழித்தடம் இருப்பதினாலும், அந்த வழித்தடம் அதன் பூர்வீக இடமான கேரளா வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அதன் வழியாக அரிசி கொம்பன் கேரள மாநிலத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • ரேடியோ காலர் கருவி மூலம் நெல்லை மற்றும் குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
    • அரிசி கொம்பன் யானையின் உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் சின்னக்கானல் பகுதியிலும் தமிழகத்தின் தேனி மாவட்டம் குமுளி பகுதியிலும் அரிசி கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.

    இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பன் யானையை பிடித்தனர். பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டன் துறை புலிகள் சரணாலயத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டுவிட்டனர்.

    அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட யானை அந்தப் பகுதியிலேயே சுற்றி திரிந்து வருகிறது. முத்துக்குளிவயல் பகுதியில் இயற்கை உணவுகள் அதிக அளவு கிடைத்து வருகிறது. தண்ணீரும் கிடைப்பதால் யானை அந்த பகுதியை விட்டு நகராமல் அங்கேயே உள்ளது. விடப்பட்ட இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது.

    யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் கருவி மூலம் நெல்லை மற்றும் குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவர்கள், வனத்துறை ஊழியர்கள் அங்கேயே முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானையின் உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. யானையின் உடல் மாற்றத்திற்கு காரணம் அதனுடைய உணவு பழக்க வழக்கமே என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ஏற்கனவே அரிசி கொம்பன் யானை அரிசி, வெல்லம், கரும்பு போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தது. தற்பொழுது விடப்பட்டுள்ள பகுதியில் இயற்கை உணவை மட்டும் சாப்பிட்டு வருவதால் உடல் மெலிந்திருப்பதாக தெரிவித்தனர். யானையின் சாணத்தை மருத்துவ குழுவினர் தினமும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். யானை உட்கொள்ளும் உணவு சரியான முறையில் செரிமானம் ஆகி உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. யானையின் உடல் குன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரிசி கொம்பன் யானையை மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஒரு சில வாரங்களில் யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் அரிசி கொம்பன் யானை ஏற்கனவே சாப்பிட்டு வந்த அரிசி, கரும்பு, வெல்லம் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்காததால் அது மீண்டும் ஊருக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதை தடுத்து நிறுத்த வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அரிசி கொம்பன் யானையை பொருத்தமட்டில் தீயை பார்த்தால் மட்டுமே அங்கிருந்து சென்றுவிடும் என்று கூறப்படுகிறது. ஊருக்குள் வரும் வழித்தடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு அந்த பகுதிக்கு யானை வரும் போது தீயை வைத்து யானையை மீண்டும் காட் டுக்குள் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரிசி கொம்பன் யானையின் உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்று சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

    உணவுப் பழக்க வழக்கத்தின் காரணமாக உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை தான். தற்பொழுது அரிசி கொம்பன் யானை இயற்கையான உணவை சாப்பிட்டு வருகிறது. தினமும் யானையை கண்காணித்து வருகிறோம். ஏற்கனவே 2 முறை மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து காட்டுக்குள் கொண்டு விட்டு உள்ளோம். யானை விடப்பட்ட ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் தான் சுற்றி வருகிறது. திட காத்திரமாக நல்ல நிலையில் அரிசி கொம்பன் யானை உள்ளது என்றார்.

    • மணல்ேமடு பகுதியில் போலீசார் தீவிரசோதனையில் ஈடுப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறை:

    மணல்மேடு அருகே கடலங்குடி, குறிச்சி ஆகிய பகுதிகளில் சாராயம் விற்பதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது கடலங்குடி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், கடலங்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் மகன் ராஜேஷ் (வயது 25) மற்றும் கடலங்குடி திருமேனியார் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (60) என்பதும், அவர்கள் 2 பேரும் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

    இதேபோல் குறிச்சி பாலம் அருகே கண்காணித்தபோது குறிச்சி மேலத்தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் ஸ்டாலின் (35) என்பவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், கலியமூர்த்தி, ஸ்டாலின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழநாற்று தொகுப்புகளை வழங்கினார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நடமாடும் மருத்துவக்குழு முகாமை பார்வையிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    குன்னூார் தாலுகாவில் உள்ள இளித்தொரையில் தோட்டக்கலைத்துறை மூலம் உருவான பசுமைக்குடில்களை பார்வையிட்டு, அங்கு உள்ள விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழநாற்று தொகுப்புகளை வழங்கினார்.

    பின்னர் தேனலை ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ரூ.31.20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறை கள், உபதலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள பெண் கள் கழிவறை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் நடக்கும் வகுப்புகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நடமாடும் மருத்துவக்குழு முகாமை பார்வையிட்டார்.

    அப்போது அங்கு உள்ள 8 பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கிய அதிகாரி வெங்கடேஷ், முகாமில் நோயாளிக்கு பிசியோதெரபி வழங்கப்படு வதையும் நேரில் பார்வையிட்டார்.தொடர்ந்து குன்னூர் பழத்தோட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், முதல்-அமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் குப்பைக்குளி முதல் சோகத்தொரை வரை ரூ.176 லட்சம் மதிப் பில் சாலை மேம்பாட்டு பணிகள், வசந்தம் நகரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத் தின்கீழ் குடிநீர் ஆதார பணிகள், பிருந்தாவன் பள்ளி அருகில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் விடுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், செயற்பொ றியாளர் செல்வகுமார், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன் குமார மங்கலம் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • வார இறுதி நாட்கள் மற்றும் தினமும் மாலை நேரங்களில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
    • மக்கள் வருகைக்காக நிறைய பொருட்களை வியாபாரத்துக்கு வர்த்தகர்கள் கடைகளில் நிரப்பி உள்ளனர்.

    திருப்பூர்:

    வருகிற 23-ந்தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ளது.இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் தினமும் மாலை நேரங்களில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் பிரதான சாலைகளான புது மார்க்கெட் வீதி, குமரன் ரோடு, காதர்பேட்டை, பி.என்., ரோடு, பல்லடம், காங்கயம் ரோடுகளில் ஜவுளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மொபைல் போன் கடைகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் மெல்ல, மெல்ல கூட்டம் அதிகமாகி வருகிறது.

    மக்கள் வருகைக்காக நிறைய பொருட்களை வியாபாரத்துக்கு வர்த்தகர்கள் கடைகளில் நிரப்பி உள்ளனர். தற்காலிக துணி, பலகார கடைகள், நடைபாதை கடைகள் முளைத்துள்ளன. நாளை முதல் குமரன் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சீராக வாகனங்கள் செல்லும் வகையில் போலீசார் ஆலோசனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தீபாவளியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் போது, பயணிகள் எளிதாக நின்று ஏறும் வகையில், தற்காலிக பஸ் நிலையம் ஏற்படுத்துவது, போக்குவரத்து மாற்றம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் மாநகர போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீசார், வருவாய்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறையினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.அதில், மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டது. தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கொடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடக்கும் கூட்டங்களில் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், அதிகம் மக்கள் கூடும் இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. பிக்பாக்கெட், நகை பறிப்பு குற்றவாளிகளை கண்டறியும் வகையில் மக்கள் கூடும் இடம், பஸ்களில் மப்டி போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றனர்.

    ×