search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother Day"

    தியாகத்தின் திருவுருவாய், இறைவனின் மறுவடிவாய் திகழும் அன்னையர் அனைவரையும் இந்நன்னாளில் வணங்கி தனது அன்னையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க.(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தன் தேவைகளின் சிந்தனையைப் பின்னுக்கு தள்ளி வைத்து, தன்னுடைய அன்பு செல்வங்கள் மற்றும் தன்னை சேர்ந்தவர்களின் தேவையை தன் சிந்தையின் முன் வைத்து, ஓய்வின்றி உழைத்திடும் அன்னையர் ஒவ்வொருவரும் தியாகத்தின் பிறப்பிடமே.

    தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை என்ற மிக உயர்ந்த தத்துவத்தை கொண்ட தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று முதன்மையாக்கிட உழைத்திட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இந்த தருணத்தில் நினைத்து வணங்குகிறேன். ஜெயலலிதா வகுத்த பாதையில் பயணிக்கும் சசிகலாவின் சீரிய தலைமையில் வீறுநடை போடும் நாம், ஜெயலலிதா கொண்ட லட்சியங்களை முன்னெடுத்து சென்றிடுவோம். அதில் வென்றிடுவோம்.

    தியாகத்தின் திருவுருவாய், இறைவனின் மறுவடிவாய் திகழும் அன்னையர் அனைவரையும் இந்நன்னாளில் வணங்கி, எனது அன்னையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×