என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "motorcycle thieves"
- சுரேஷ் (வயது 39). அப்பகுதியில் உள்ள ஒரு அரிசி கடை முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
- அவா்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 கிராம் எடையுள்ள உருக்கிய தங்க கட்டி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனா்.
திருச்சி,
திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியை சோ்ந்தவா் சுரேஷ் (வயது 39). இவர் கடந்த 15-ந்தேதி இரவு அப்பகுதியில் உள்ள ஒரு அரிசி கடை முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மறுநாள் காலை வண்டியை எடுப்பதற்காக வந்து பார்த்த போது வண்டி திருடப்பட்டது குறித்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சோ்ந்த ஸ்ரீகாந்த் வயது (19), விக்னேஷ் வயது (20) இரு வாலிபர்களையும் மணிகண்டம் போலீசார் கைது செய்தனா்.
மேலும் அவா்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 கிராம் எடையுள்ள உருக்கிய தங்க கட்டி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனா்.
- நண்பர் உதவியுடன் வாலிபர்களை மடக்கி பிடித்தார்.
- மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் தள்ளி கொண்டு செல்வதை பார்த்தார்.
கோவை:
கோவை ேக.ஜி சாவடி அடுத்த நவக்கரையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 23). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார்.
மறுநாள் அதிகாலை அவரது நண்பர் பாபு என்பவர் ஈஸ்வரனின் மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் தள்ளி கொண்டு செல்வதை பார்த்தார். உடனே பாபு, ஈஸ்வரனுக்கு போன் செய்து மோட்டார் சைக்கிளை யாருக்காவது கொடுத்தாயா? 2 பேர் தள்ளி செல்கிறார்கள் என்றார்.இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தான் யாருக்கும் மோட்டார் சைக்கிளை தரவில்லை, அவர்களை பின் தொடர்ந்து போ நானும் வருகிறேன் என்றார். உடனே ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு நண்பர் பாபுவின் உதவியுடன் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தார்.
பின்னர் அந்த வாலிபர்களை ேக.ஜி சாவடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் தெலுங்குபாளையத்தை சேர்ந்த யாசுப் (வயது 27) மற்றும் செல்வபுரத்தை சேர்ந்த முகமது ஆசிப் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்