search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murdered"

    புழல் ஜெயிலில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கைதி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்குன்றம்:

    சென்னை வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் மல்லி காலனியை சேர்ந்தவர் முரளி என்கிற பாக்சர் முரளி (வயது 31). இவர் மீது எம்.கே.பி.நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி, மாதவரம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளன.

    சென்னையில் உள்ள ரவுடிகளை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த மாதம் முதல் இது வரை 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பாக்சர் ரவி மீதும் 16 வழக்குகள் இருந்ததால் அவனை கைது செய்வதற்காக அவனது வீட்டுக்கு வியாசர்பாடி போலீசார் கடந்த மாதம் சென்றனர். அப்போது போலீசாரை ரவுடி பாக்சர் ரவி தாக்கி தப்பி செல்ல முயன்றான். இதையடுத்து அவனை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். போலீசாரை தாக்கியதாக அவன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    புழல் ஜெயிலில் விசாரணை கைதிகள் இருந்த அறையில் பாக்சர் முரளி அடைக்கப்பட்டிருந்தான். ஜூன் முதல் வாரத்தில் அவனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவன் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலுக்கு மாற்றப்பட்டான்.

    அதே சிறையில் பாக்சர் முரளியின் எதிர்தரப்பு ரவுடியான வியாசர்பாடி நாகேந்திரன் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தான். நாகேந்திரனின் கூட்டாளிகள் சிலரும் குண்டர் சட்டத்தில் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    பாக்சர் முரளிக்கும், நாகேந்திரன் கூட்டாளிகளுக்கும் சிறையில் அடிக்கடி மோதல் நடந்து வந்தது. பாக்சர் முரளியை தீர்த்து கட்ட நாகேந்திரன் கூட்டாளிகள் திட்டமிட்டனர். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கைதிகளுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட கைதிகள் 8 மணிக்கு மேல் ஜெயில் அறைகளுக்கு சென்றனர்.

    பின்னர் 9.30 மணியளவில் ரவுடி பாக்சர் முரளி தனது அறையில் இருந்து வெளியே நின்று கொண்டிருந்தான். அப்போது ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகள் 4 பேர் அங்கு வந்தனர். அவர்களுக்கும், பாக்சர் முரளிக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. 4 பேரும் சேர்ந்து பாக்சர் முரளியின் தலையில் உருட்டு கட்டையால் ஓங்கி தாக்கினார்கள்.

    இதில் அவன் நிலை குலைந்து கீழே விழுந்தான். பின்னர் ஜெயிலில் இருந்த கம்பியால் தலையில் குத்தி, இரும்பு தகட்டினால் கழுத்தை அறுத்தனர். இதில் ரவுடி பாக்சர் முரளி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான்.

    உடனே அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பாக்சர் முரளியை ஆம்புலன்சில் ஏற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.30 மணியளவில் பாக்சர் முரளி இறந்தான்.

    இதுதொடர்பாக ஸ்டான்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் ஜெயிலில் கைதியாக இருந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    சிவகாசி வங்கி ஊழியர் கொலை வழக்கில் 4 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார்.
    மதுரை:

    சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் பாலமுருகன் (வயது 25). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் பிரிவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் தனது நண்பர் சதீஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலமரத்துப்பட்டி அருகே அவர்களை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வழிமறித்து பாலமுருகனை கடத்தி சென்றது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் செங்மலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை அருகில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவலின்பேரில் அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை கடத்தி சென்றது யார் என்பது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் முத்துராமலிங்கபுரம்காலனியை சேர்ந்த சித்திரைவேல், மணி என்ற பள்ளமணி, ஜோதி, கார்த்திக் என்ற குட்டைகார்த்திக் உள்பட சிலர் மீது சிவகாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பாலமுருகன் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகாசி விவேகானந்தர்காலனியை சேர்ந்த ராஜபாண்டி மகன் சிவசக்திபாண்டியன்(23), சர்க்கரை மகன் கிருஷ்ணன் (25), முருகன் மகன் பாலமுருகன் (24), ராமசாமி மகன் சித்திரைவேல் (30) ஆகிய 4 பேரும் நேற்று மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர்களை மதுரை சிறையில் அடைத்தனர்.

    போளூரில் மூதாட்டி கொலை சம்பவத்தை தொடர்ந்து அத்திமூர், களியம் உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களில் ஒரு மாதத்திற்கு பிறகு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர், களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

    இதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த உறவினர்களான மோகன்குமார், சந்திரசேகரன், கஜேந்திரன், வெங்கடேசன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் இரவு பகலாக கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தி 62 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 44 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 18 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.

    போலீசாருக்கு பயந்து தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, அண்ணாநகர், திண்டிவனம் உள்பட 10 கிராம மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்று தலைமறைவாகி விட்டனர்.

    சிலவீடுகளில் பெண்கள் மட்டுமே இருந்தனர். கடைகள் திறக்கப்படவில்லை. விவசாய பணிகள் முடங்கியது. பஸ்கள் பயணிகள் இன்றி சென்றன. அந்த கிராமங்கள் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பில் இருந்தன.

    தற்போது படிப்படியாக வெளியூர் சென்ற கிராம மக்கள் ஊர் திரும்பி வருகின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.




    அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து கவுகாத்தியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். #AssamChildKidnappers
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கர்பி அங்லாங் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கர்பி அங்லாங் பகுதியில் உள்ள பஞ்சரி காசரி கிராமம் வழியாக ஒரு கார் சென்றுள்ளது. டோக்மோகா நோக்கி சென்ற அந்த காரை பொதுமக்கள் சிலர் வழிமறித்து விசாரித்துள்ளனர். அப்போது காருக்குள் இருந்த நபர்களின் நீண்ட தலைமுடி மற்றும் அவர்களின் தோற்றத்தைப் பார்த்து குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

    தாங்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், தங்களை உயிருடன் விட்டுவிடும்படியும் அவர்கள் கெஞ்சி உள்ளனர். அவர்களின் கெஞ்சலை காதில் வாங்காத கும்பல், மிகவும் கொடூரமாக தாக்கி உள்ளது. இதில் 2 பேரும் உயிரிழந்தனர். அத்துடன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ வைரலாகப் பரவி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கவுகாத்தியில் நேற்று இரவு பொதுமக்கள் பலர் திடீரென ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது. வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.



    இந்த கொலை தொடர்பாக போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க அரசு தவறிவிட்டதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். #AssamChildKidnappers

    பழனியில் இன்று காலை பிரபல ரவுடியை ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பழனி:

    பழனி அடிவாரம் பகுதியில் தனியார் பார் உள்ளது. இதன் மேனேஜராக ராஜன் (வயது 54) உள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவரை ஒரு கும்பல் துரத்தி விரட்டி வந்ததைப் பார்த்தார். பார் அருகே உள்ள சந்தில் அந்த கும்பல் திடீரென கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி தள்ளினர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியது.

    இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அரிவாளுடன் அருகே இருந்த கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடி தகராறில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பழனி பாரதிநகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் செந்தில்குமார் (38) என தெரிய வந்தது. இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும் பலரிடம் தகராறு செய்ததாகவும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர், முன்னாள் காதலியான அவர், தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
    கோயம்பேடு:

    காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் கடந்த 28-ந்தேதி, இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில் கொலையான பெண், சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவருடைய மகள் பொக்கிஷமேரி(வயது 33) என தெரிய வந்தது.

    இதுபற்றி செங்கல்பட்டு போலீசார் அளித்த தகவலின்பேரில் சென்னை அண்ணாநகர் போலீசார் நெற்குன்றம் செல்லியம்மன் நகர் ஆனித் தெருவைச் சேர்ந்த பாலமுருகன்(30), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுகுமாரன் (38) ஆகிய 2 பேரை கைது செய்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் கைதான பாலமுருகன், போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நான், சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தேன். அப்போது எனக்கும், அதே கடையில் வேலை செய்து வந்த பொக்கிஷமேரிக்கும் காதல் மலர்ந்தது. நாங்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தோம். இதற்கிடையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் காதல் முறிந்தது.

    பின்னர் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதற்கிடையில், என்னை சந்தித்து பேசிய பொக்கிஷமேரி, உன்னை என்னால் மறக்க முடியவில்லை. 2-வதாக என்னையும் திருமணம் செய்து கொள் என்று என்னை தொந்தரவு செய்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான், இது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி பொக்கிஷமேரியை, எம்.ஜி.ஆர். நகர், பெரியார் தெருவில் உள்ள எனது நண்பர் வீட்டுக்கு வரவழைத்தேன். அங்கு வந்த பொக்கிஷமேரி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த நான், நண்பரின் வீட்டில் இருந்த குக்கர் மூடியால் பொக்கிஷமேரியின் தலையில் பலமாக தாக்கினேன். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பின்னர் கொலையை மறைக்க திட்டமிட்ட நான், பொக்கிஷமேரியின் உடலை சூட்கேசில் அடைத்து, வாடகை கார் மூலம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதிக்கு சென்றேன். அங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உடலை போட்டு விட்டு, போலீசார் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த 26-ந்தேதி வேலைக்கு சென்ற பொக்கிஷமேரி மாயமானதாக அவரது தாயார், அண்ணாநகர் போலீசில் புகார் செய்து இருந்தார். அண்ணாநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு வந்து மொபட்டை நிறுத்தி விட்டு, அங்கிருந்து எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பாலமுருகனின் நண்பரின் வீட்டுக்கு சென்று உள்ளார். அதன் பிறகு அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    பொக்கிஷமேரியின் தாயார் அளித்த புகாரின்பேரில் இளம்பெண் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து இருந்த அண்ணாநகர் போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். பின்னர் கைதான பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பாலமுருகன் மட்டும் தனியாக இந்த கொலையை செய்து விட்டு, உடலை காரில் கொண்டு சென்று எரித்து இருக்க முடியாது. ஆனால், இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலையான பெண்ணின் முன்னாள் காதலன் பாலமுருகன் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. 
    பாளை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    பாளையை அடுத்த தியாகராஜநகர் அருகேயுள்ள டி.வி.எஸ்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 79). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    அவர்களில் ஒரு மகன் பால்பிரான்சிஸ் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக உள்ளார். இவர் பாளை கே.டி.சி.நகரில் வசித்து வருகிறார். ஞானப்பிரகாசமும், அந்தோணியம்மாளும் டி.வி.எஸ்.நகரில் வசித்து வந்தனர். நேற்று இரவு ஞானப்பிரகாசம் பணிக்கு சென்றுவிட்டார். அந்தோணியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மகன் பால் பிரான்சிஸ் தனது தாய்க்கு போன் செய்தார். வெகுநேரம் போன் அடித்தும் போனை எடுக்கவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த பால் பிரான்சிஸ் வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு அந்தோணியம்மாள் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தில்லைநாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தோணியம்மாளை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தின்போது அந்தோணியம்மாள் கழுத்தில் கிடந்த நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் நகைக்காக கொலை நடக்கவில்லை என போலீசார் உறுதி செய்தனர். நிலத்தகராறு அல்லது வேறு பிரச்சினைகளில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலை பற்றி விசாரணை நடத்தவும், கொலையாளிகளை பிடிக்கவும் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூரில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்காக கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து தேவனாம்பட்டினம் மீனவர்கள், சோனாங்குப்பம் கிராமத்துக்குள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தினர்.

    இதில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம், கந்தன், ஓசைமணி, சுதாகர், சரண்ராஜ் உள்பட 20 பேர் மீது துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தேவனாம்பட்டினம் தம்பிராஜ் மகன் ஆறுமுகம் ( வயது 41), ஓசைமணி (39), சுதாகர் (46), நாராயணசாமி மகன் ஆறுமுகம் (46), தினகரன் (59), சரண்ராஜ் (30), தனஞ்செழியன் மகன் தென்னரசு (32), ராமு மகன் சுந்தர் (43) ஆகிய 8 பேரை துறைமுகம் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இங்கிலாந்து நாட்டின் மிடில்ஸ்பரோ நகரில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் புறநகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெசிகா பட்டேல் (வயது 34) வசித்து வந்தார். இவரது கணவர் மிதேஷ் (வயது 36). இவர்கள் இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைகழகத்தில் படித்தபொழுது சந்தித்து கொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகிலேயே கடந்த 3 ஆண்டுகளாக மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில், ஜெசிகா தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுபற்றி ஜெசிகாவின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒருவர் கூறுகையில், அவர்கள் இனிமையான, நட்புடன் பழக கூடிய தம்பதி. அவர்கள் மருந்து கடையை நடத்த தொடங்கியதில் இருந்து இந்த பகுதியில் நன்கு பிரபலம் ஆனவர்கள் என கூறினார். #tamilnews
    மடிப்பாக்கத்தில் பீர் பாட்டிலால் அடித்து லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    திரிசூலம் இலுப்பை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (24). மினி லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் மது குடித்தார்.

    அவருக்கு அருகே 5 பேர் கும்பலும் மது குடித்துக் கொண்டிருந்தனர். குடிபோதையில் இவர்களுக்கும், சுரேஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் அது முற்றி தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கும்பல் சுரேஷ்குமாரை சுற்றி வளைத்து சினிமா பாணியில் பீர் பாட்டில்களால் தலையில் ஓங்கி அடித்து தாக்கினர்.

    மண்டை உடைந்ததால் நிலை குலைந்த சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். சந்தேகத்தின் பேரில் ராஜா, சுடலை ராஜன், ராமச்சந்திரன், திலீப், கலைமணி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    முன் விரோதத்தில் இக்கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

    போளூர் அருகே குழந்தை கடத்துபவர் என கருதி மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    போளூர்:

    போளூர் அருகே குல தெய்வம் கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்துபவர்கள் எனக் கருதி கிராம மக்கள் தாக்கியதில் ருக்மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக 62 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் 36 பேரை போளூர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அத்திமூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), பாபு (54), ரமேஷ் (36), ஏழுமலை (29), தின்டிவனத்தை சேர்ந்த சேகர் (43), தானியார் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (34). ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் ஊரை விட்டு தலைமறைவாகி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் பகுந்தனர். களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, தின்டிவனம் உள்ளிட்ட 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டனர். இதனால் அந்த கிராமங்கள் 7-வது நாளாக இன்றும் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் தலைமறைவாக உள்ள 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த கஜேந்திரன் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சுயநினைவு திரும்பாத நிலையில் இருந்து வந்தார். கார் மெக்கானிக் தொழில் செய்து வந்த அவருக்கு 2 மகள் உள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு சமாளிக்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.

    கஜேந்திரன் மனைவி பத்மாவதி நேற்று முன்தினம் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை சந்தித்து மருத்துவ உதவி கேட்டு மனு கொடுத்தார்.

    இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க சென்னையிலுள்ள மருத்துவ மனை உதவிக்கரம் நீட்டியுள்ளது. எனவே அவர் நேற்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    போளூர் அருகே குழந்தை கடத்துபவர் என கருதி மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 3-வது நாளாக 10 கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தை கடத்துபவர் எனக் கருதி குல தெய்வ கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த ருக்மணி அம்மாள் மற்றும் குடும்பத்தினரை ஊர் பொதுமக்கள் தாக்கியதில் ருக்மணி அம்மாள் பரிதாபமாக இறந்தார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்த சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் 23 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை வீடு, வீடாக சென்று தேடி வருகின்றனர்.

    மேலும் இதுதொடர்பாக தானியார் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (வயது 45), ஏரிக்கொல்லைமேடு பகுதியை சேர்ந்த பழனி (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் 42 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 25 பேரை நேற்று முன்தினம் இரவு போளூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    இதில் 13 வயது சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்றவர்களை வேலூர் ஜெயிலிலும் அடைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து 24 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து நேற்று முன்தினம் களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, தின்டிவனம், கணேசபுரம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், தானியார், காமாட்சிபுரம், இந்திராநகர் ஆகிய 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளனர்.

    இரவோடு இரவாக பலர் தங்களது வீடுகளை காலி செய்துள்ளனர். 3-வது நாளாக இன்று கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களை கொண்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அப்பகுதியில் தினமும் அதிகாலை நேரத்தில் பலர் சைக்கிளில் இளநீர் கொண்டு வந்து போளூரில் விற்பனை செய்வது வழக்கம். நேற்று இளநீர் விற்பவர்கள் யாரும் வரவில்லை.

    ஜவ்வாதுமலையில் உள்ள பட்டரைகாடு, நம்மியம்பட்டு உள்பட 364 குக்கிராமங்களில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அந்த பகுதிகளில் தேடி வருகின்றனர்.  #tamilnews
    ×