என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navratri festival"

    • விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடந்து வருகிறது.
    • ரூ.100 முதல் ரூ.6 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. செட் பொம்மைகள் ரூ.850 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசைக்கு மறு நாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். அப்போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். வீடுகளில் அமாவசை தினத்தன்றே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு கொலு பொம்மைகள் வைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும்.

    நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் அம்மனுக்கு விதவிதமான நெய்வேத்தியங்கள் செய்து உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து சிறப்பு வழிபாடு செய்து பிரசாதங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. இதற்காக தற்போதே விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடந்து வருகிறது. அஷ்டலட்சுமி, கார்த்திகை பெண்கள், தசாவதாரம், மீனாட்சி திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம் உள்ளிட்ட செட் பொம்மைகள், மகாத்மா காந்தி, பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பொம்மைகளும் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    வருடந்தோறும் புதுவகையான செட் பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி இந்த நவராத்திரிக்கு ஐஸ்வர்ய ஈஸ்வரன், நவ நரசிம்மர், தத்தாத்ரேயர் என்ற புதிய செட் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.100 முதல் ரூ.6 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. செட் பொம்மைகள் ரூ.850 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இது குறித்து பெண்கள் கூறுகையில், நவராத்திரி விழா பெண்கள் வழிபட கூடிய முக்கிய விரதங்களில் ஒன்று. 9 நாட்கள் விரதமிருந்து, ஏழை எளியவர்களுக்கு முடிந்ததை தானம் செய்து வழிபடும் போது குடும்பத்தில் சுபிட்சம் மற்றும் செல்வம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு அமையும் என்பது ஐதீகம். அதனால் நவராத்திரி விரதத்தை பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சுவாமிமலை:

    ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

    விழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு வைத்து வழிபடுவர்.

    அதேபோல், ஏராள மானோர் தங்கள் வீடுகளில் 5,7,9,11 ஆகிய எண்ணிக்கையிலான படிகள் அமைத்து விதவிதமான கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து பக்தி பாடல்கள் பாடி, அக்கம் பக்கத்தினர், உறவினர்கனை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்குவர்.

    விழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து பாபு ராஜபுரத்தில் பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ள தினேஷ் என்பவர் கூறுகையில்:-

    கொலுவிற்கு தேவை யான பலவிதமான மண் பொம்மைகள், மர பொம்மைகள், பேப்பர் பொம்மைகள், 3 இன்ச் முதல் 7 அடி வரை உயரம் கொண்ட 63 நாயன்மார்கள் செட், தசவதார பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர், கொல்கத்தாகிலே பொம்மைகள், சமயபுரம் மாரியம்மன், சிவன்- பார்வதி, கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர் உள்பட பல்வேறு வகையான பொம்மைகள் ரூ.10 முதல் 7 ஆயிரம் வரை விற்பனைக்கு வைத்துள்ளேன்.

    மேலும், இந்த பொம்மைகள் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை க்காக அனுப்பப்படுகிறது.

    இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது.
    • 14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும்.

    தக்கலை:

    திருவாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மனாபபுரம் அரண்மனையில் வருடம் தோறும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றிய பின் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையிலுள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரம் சென்று வருகின்றன.

    ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக 3 சாமிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி தொடக்க நாளில் இருந்து விழா முடியும் வரை திருவனந்தபுரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படும். அதன்பிறகு 3 சாமிகளும் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம் வந்து சேரும். சுவாமிகள் புறப்பாடு மற்றும் வருகையின் போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வரவேற்பதும் வழிபடுவதும் உண்டு. இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டது. தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்ட முன்னுதித்த நங்கையம்மன் அம்மனுக்கு வீதிகள் தோறும் பக்தர்கள் திரண்டு பரவசத்துடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முன்னுதித்த நங்கை அம்மன் பத்மனாபபுரம் அரண்மனையை வந்தடைந்து. இன்று காலை அங்கு வேளிமலை முருகனும் பக்தர்கள் புடைசூழ வந்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு அரண்மனை உப்பரிகை மாளிகையின் மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் உடைவாளை ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் ஸது எடுத்து தொல்பொருள் துறை இயக்குனர் தினேஷிடம் ஒப்படைத்தார்.

    அதனை அவர், கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அவரிடம் இருந்து இதனை குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன் பெற்றுக்கொண்டார். விழாவில் மத்திய மந்திரி முரளிதரன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன். கேரள எம்.எல்.ஏ.க்கள் வின்சென்ட், ஹரீந்திரன், ஆன்சலன், மற்றும் நகர் மன்ற ஆணையாளர் லெனின், தலைவர் அருள் சோபன், துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் அரண்மனை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் முன்னே செல்ல வேளிமலை முருகன் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் யானை மீதும் அமர்ந்து பவனி சென்றனர்.

    இந்த சாமி ஊர்வலத்தில் தமிழக-கேரள போலீசார் மற்றும் திரளான பக்தர்கள் நடந்து சென்றார்கள். 3 சாமி சிலைகளும் இரவில் குழித்துறையில் தங்கிவிட்டு, நாளை (13-ந்தேதி) காலையில் அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலை சென்றடையும். அங்கு மூன்று சாமி சிலைகளுக்கும் கேரள அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும்.

    14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும். தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனை பூஜை புரை என்ற இடத்தில் பூஜைக்காக வைப்பார்கள். வேளிமலை முருகன் சிலை ஆரியசாலையில் உள்ள சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

    இதை தொடர்ந்து நவராத்திரி கொலு மண்டபத்தில் 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலமாக குமரி மாவட்டத்தை நோக்கி புறப்படும்.

    • ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும்.
    • அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் காலை 7.45 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருள், 8 மணிக்கு பஜனை, மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. தொடர்ந்து அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளிபல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வருதல், நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, பின்னர் ஆண்டுக்கு 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.

    • சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
    • 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும்.

    குழித்துறை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு, குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமார கோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவிதாங்கூர் மன்னர் காலம் தொட்டு சரஸ்வதி தேவியம்மனை யானை மீதும், முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் ஆகிய விக்ரகங்களை, பல்லக்கிலும், சுமந்தும் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியுடன் இந்த சாமி விக்ரகங்கள் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக-கேரளா போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் யானை மீது சரஸ்வதி தேவியும், பல்லக்குகளில் குமார கோவில் முருகனும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையும் ஊர்வலமாக புறப்பட்டது.

    வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். நேற்று இந்த சாமி விக்ரகங்கள் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில், தங்குகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு அங்கிருந்து அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டு சென்றது. அப்போது பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இன்று மதியம் 12 மணிக்கு குமரி-கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி மற்றும் தமிழக இந்து அறநிலைய துறையினர், கேரளா இந்து அறநிலை துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாமி விக்ரகங்கள் இன்று நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்கலும், நாளை திருவனந்தபுரம் சென்றடைகிறது.

    அங்கு கிழக்கு கோட்டை கொலுமண்டபத்தில் சரஸ்வதி தேவியையும், ஆர்யா சாலையில் முருகப்பெருமானையும், வலிய சாலையில் முன்னுதித்த நங்கை அம்மனையும், பூஜைக்கு வைத்து 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்வார்கள்.

    பின்னர் 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும். அப்போதும் பொதுமக்கள் வழி நெடுக வரவேற்பு அளிப்பார்கள். பின்னர் குமரியில் அந்தந்த கோவில்களில் வைத்து வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். இந்த சாமி விக்ரகங்கள் செல்லும் வழியில் கேரளா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் சாலைகளின் இரு புறங்களிலும் மா, பலா, வாழை, தென்னை ஓலை களாலும் அலங்கரித்து பூஜைகள் செய்து வரவேற்பு அளித்தனர்.

    • மாணவிகள் பலர் வேடம் அணிந்து, மகிஷாசுர வதம், கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா ஆகிய நடன நிகழ்ச்சிகளை நடத்தி ஆடினர்.
    • நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதில் துர்க்கை, விநாயகர் உள்பட பல்வேறு சிலைகள் இடம்பெற்று இருந்தன.

    பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி அங்கு ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    இதில் மாணவிகள் பலர் வேடம் அணிந்து, மகிஷாசுர வதம், கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா ஆகிய நடன நிகழ்ச்சிகளை நடத்தி ஆடினர். இதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    அப்போது மேடையில் சாமி வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் தனது வாயில், மண்எண்ணையை ஊற்றி அதை கையில் வைத்திருந்த பந்தத்தில் ஊதி சாகசம் செய்ய முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முகத்தில் தீப்பற்றியது. இதைபார்த்ததும் அதிர்ச்சியான அங்கிருந்தவர்கள் ஓடி சென்று விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

    இதில் மாணவிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

    பின்னர் மாணவியை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மாணவி, அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உற்சவ அம்மன் கொலு வைத்து அலங்காரம்
    • பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு கோவில் மண்டபத்தில் உற்சவ அம்மன் கொலு வைத்து, 15-ந்தேதி பார்வதி அலங்காரமும், 16-ந்தேதி காமாட்சி அலங்காரமும், 17-ந் தேதி மாவடி சேவை அலங்காரமும், 18-ந் தேதி ஸ்ரீமீனாட்சி அலங்காரமும்,

    19-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 20-ந் தேதி துர்காதேவி அலங்காரமும், 21-ந் தேதி ஸ்ரீஅன்னபூரணி அலங்காரமும், 22-ந் தேதி தனலட்சுமி அலங்காரமும், 23-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 24-ந் தேதி திருஅவதார அலங்காரமும் செய்யப்பட்டு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை யும் நடக்கிறது. பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    இந்த விழாவில் கலந்து கொண்டு லட்சார்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • பழனியில் நவராத்திரி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
    • 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது.

    பழனி:

    முருகபெருமானின் 3ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இன்று காலை கிழக்கு ரதவீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் முதலில் காப்பு கட்டப்பட்டது. கோவிலில் உள்ள அம்மன், முருகன், வள்ளிதெய்வானை ஆகியோருக்கும் கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து மலைக்கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையின் போது முருகப்பெருமான், வள்ளி தெய்வானை, துவார பாலகர்கள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு காப்பு கட்டப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள், 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும்.

    கோவில் வளாகத்தில் கொலு அமைக்கப்பட்டு தினந்தோறும் வெவ்வேறு அம்மன்கள் அலங்காரம் செய்யப்படும். 9ம் நாள் விழாவாக வருகிற 23ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மதியம் 3 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி புறப்பட்டு கோதை மங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலை சாமி வந்தடைந்து பராசக்திவேல் மலைக்கோவில் அடைந்த பின்பு அர்த்தசாம பூஜை நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்றுமுதல் வருகிற 23ம் தேதி வரை மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்றும், 24ம் தேதி முதல் தங்கரத புறப்பாடு மீண்டும் புறப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.
    • சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில், மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் உள் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

    நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்து கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    விழாவின் தொடர்ச்சியாக, கோலாட்ட அலங்காரமும், அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏகபாதமூர்த்தி, கால்மாறி ஆடிய படலம், தபசு காட்சி, ஊஞ்சல், சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அம்மன் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார். தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    • விரதத்தின் மகிமையைத் தெரிந்துகொண்டு சிறுவர்களும் பக்தியுடன் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
    • திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் நலம் தரும் நவராத்திரியின், 9 நாட்கள் இந்திய விண்வெளிக் கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் நலம் தரும் நவராத்திரியின், 9 நாட்கள் இந்திய விண்வெளிக் கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விண்வெளி உலக மாதிரி, ஏலியன், சந்திராயன்- 3 ஏவுகணை, குண்டு தாங்கி வானத்தில் செல்லக் கூடிய படைக்கருவி , செட்டியார் கடை, கொலு பொம்மைகள் ஆகியவற்றைக் கொண்டு நவராத்திரி கொலு அமைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் வழிபட்டு மகிழ்ந்தனர். நவராத்திரியின் சிறப்புமிக்க ஒன்பது நாள் கொண்டாட்டம் மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியையும், பக்தி உணர்வினையும் விதைப்பதாக இருக்கின்றது. விரதத்தின் மகிமையைத் தெரிந்துகொண்டு சிறுவர்களும் பக்தியுடன் வழிபாடுகளை மேற்கொண்டனர். பண்டிகையாக கொண்டாடும் விதமான நவராத்திரி கொண்டாட்டம் நாம் அனைவரும் உணர்ந்து அனுஷ்டித்து நன்மை பெறுவோம் என்று கிட்ஸ் கிளப் பள்ளியின் தாளாளர் நிவேதிகா, மாணவ- மாணவியர்களிடம் எடுத்துக் கூறினார்.

    • தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
    • மகாலட்சுமி, மருமகள் சிவப்பிரியா, மருமகன்கள் கவுரி சங்கர், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.பி.என்.காலனி 5-வது வீதியில் அமைந்துள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமியின் வீட்டில் 25-வது ஆண்டு நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதையொட்டி அவரது வீட்டில் 9 படிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்து கடவுள் சிலைகள், இயேசு, மாதா சிலை மற்றும் மும்மதத்தை குறிக்கும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மகாத்மா காந்தி, காமராஜர், அண்ணா, அம்பேத்கர், அப்துல்கலாம், அன்னை தெரசா, விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சிலை மற்றும் கம்பா நதியில் ஏகாம்பரேஸ்வரை ஏழவார்குழலி வழிபடும் சிலை, நவதுர்கை, சிவதாண்டவம், லலிதாம்பிகை தர்பார், சுருட்ட பள்ளீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். பூஜையில் விகாஸ் வித்யாலயா பள்ளி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி, அவரது மனைவி ராதா, மகன் மாதேஸ்வரன், மகள்கள் கவிதா, மகாலட்சுமி, மருமகள் சிவப்பிரியா, மருமகன்கள் கவுரி சங்கர், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விஜயவாடாவில் உள்ள துர்கா கோவிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    • ஆந்திராவில் பழமைவாய்ந்த கரகாட்ட கலை நிகழ்ச்சி நவராத்திரி விழாக்களில் களைகட்டி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தற்போது நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

    விஜயவாடாவில் உள்ள துர்கா கோவிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று சாமி உற்சவத்தின் போது 15 பேர் கொண்ட ஆந்திர கரகாட்டகுழுவினர் நடனம் ஆடினர்.

    சுமார் 100-க்கும் மேற்பட்ட கரகாட்டக் கலைஞர்கள் வரிசையாக நின்று நடனமாடினர்.

    இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதே போல ஆந்திராவில் பழமைவாய்ந்த கரகாட்ட கலை நிகழ்ச்சி நவராத்திரி விழாக்களில் களைகட்டி உள்ளது.

    ×