என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » nazareth village peolpe
நீங்கள் தேடியது "Nazareth village peolpe"
நாசரேத் அருகே பிள்ளையன்மனை குளத்தில் குளிப்பதற்கு படித்துறை கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாசரேத்:
தாமிரபரணி ஆற்றில் இருந்து மருதூர் மேல்கால் வழியாக வெள்ளமடம் பெரியகுளம், நொச்சிக்குளம், பிள்ளையன்மனை குளத்திற்கு தண்ணீர் வருவது வழக்கம். அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளமடம் பெரியகுளம் நிரம்பி நொச்சிக் குளத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில நாட்களில் நொச்சிக்குளம் நிரம்பி பிள்ளையன் மனை குளத்திற்கு தண்ணீர் வந்துவிடும்.
இந்தநிலையில் பொதுப் பணித்துறை சார்பாக கடந்த ஒரு வாரமாக பிள்ளையன்மனை குளம் ஜே.சி.பி. மூலம் தூர் வாரப்பட்டு வருகிறது. படித்துறை இடிக்கப்பட்டதோடு கரையில் கற்கள் சிமெண்ட் வைத்து பூசாமல் வெறும் கற்களை வைத்து மட்டுமே கரையில் அடைத்து வருகிறார்கள்.
இதனை கண்டித்து பிள்ளையன்மனை வடக்கூர் மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குளத்தில் குளிப்பதற்கு படித்துறை கட்ட வேண்டும் என்றும், குளத்துக்கரையில் அடைக்கும் பணியை சீராக செய்யவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் குளம் தூர்வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து மருதூர் மேல்கால் வழியாக வெள்ளமடம் பெரியகுளம், நொச்சிக்குளம், பிள்ளையன்மனை குளத்திற்கு தண்ணீர் வருவது வழக்கம். அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளமடம் பெரியகுளம் நிரம்பி நொச்சிக் குளத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில நாட்களில் நொச்சிக்குளம் நிரம்பி பிள்ளையன் மனை குளத்திற்கு தண்ணீர் வந்துவிடும்.
இந்தநிலையில் பொதுப் பணித்துறை சார்பாக கடந்த ஒரு வாரமாக பிள்ளையன்மனை குளம் ஜே.சி.பி. மூலம் தூர் வாரப்பட்டு வருகிறது. படித்துறை இடிக்கப்பட்டதோடு கரையில் கற்கள் சிமெண்ட் வைத்து பூசாமல் வெறும் கற்களை வைத்து மட்டுமே கரையில் அடைத்து வருகிறார்கள்.
இதனை கண்டித்து பிள்ளையன்மனை வடக்கூர் மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குளத்தில் குளிப்பதற்கு படித்துறை கட்ட வேண்டும் என்றும், குளத்துக்கரையில் அடைக்கும் பணியை சீராக செய்யவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் குளம் தூர்வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X