search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New police stations"

    • போலீஸ் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது.
    • காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

     கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    அதனை ஏற்று கோவை மாநகரில் கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே போலீஸ் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த புதிய காவல் நிலையத்தை டி.ஜி.பி சைலேந்திரபாபு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அங்குள்ள காவல் துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    இதேபோல் சிட்கோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுந்தராபுரம் போலீஸ் நிலையம், குனியமுத்தூரை அடுத்த சுண்ணாம்பு காலவாயில் அமைந்துள்ள கரும்புக்கடை போலீஸ் நிலையம் மற்றும் போத்தனூர் காவல் நிலைய வளாகத்தில் கோவை தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தையும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திரகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், துணை கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சந்தீப், சுகாசினி, உதவி ஆணையாளர் பசீனா பிவி, இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், தமிழரசு, ரத்தினகுமார், நடசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 15 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன.
    • ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 80 காவலர்கள் பணியில் இருப்பார்கள்

    கோவை,

    கோவை மாநகரில் தற்போது தலா 15 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. கண்காணிப்பு பணியை தொய்வின்றி மேற்கொள்ளவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் கூடுதல் காவல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

    கடந்தாண்டு கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காளப்பட்டி, இருகூர் ஆகிய 2 இடங்களுக்கும் தனித்தனியாக போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்து மாறு மாநகர காவல்துறை நிர்வாகம் சார்பில் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போது, பீளமேடு போலீசார் தான் விமானநிலையம், காளப்பட்டி வரை ரோந்து சென்று சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும், குற்ற வழக்கு களை விசாரிக்கவும் வேண்டியுள்ளது.

    இதேபோல சிங்கா நல்லூர் காவல் துறையினர் இருகூர் வரை சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால் அவர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது.

    இதையடுத்து சமீபத்தில் கோவைக்கு வந்த உள்துறை செயலாளரிடம் மேலும் 2 போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்துவதன் தேவை குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தெரி வித்தனர். இதுகுறித்து மாநகர காவல்துறை உயரதிகாரிகள் கூறும் போது, "கவுண்டம்பாளையம், சுந்த ராபுரம், கரும்புக்கடை ஆகிய 3 காவல் நிலையங்க ளுக்கும் கனரக காவல் நிலையத்துக்கான அனுமதி கோரியுள்ளோம்.இதனால் ஒவ்வொரு காவல் நிலை யத்திலும் 80 காவலர்கள் பணியில் இருப்பார்கள். இதுதவிர, இருகூர், காளப்பட்டி ஆகிய 2 காவல் நிலையங்களுக்கு அனுமதி கேட்டுள்ளோம். கோவை மாநகராட்சி எல்லையில் உள்ள வட வள்ளி, துடியலூர் ஆகிய காவல் நிலையங்கள் மாவட்ட காவல்துறை கட்டுப்ப ாட்டின் கீழ் உள்ளன. இதை மாற்றி மாநகர காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் மருதமலை முருகன் கோயில் வரை கோவை மாநகர கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்," என்றனர்.

    ×