search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "northern England"

    இங்கிலாந்து நாட்டின் மிடில்ஸ்பரோ நகரில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் புறநகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெசிகா பட்டேல் (வயது 34) வசித்து வந்தார். இவரது கணவர் மிதேஷ் (வயது 36). இவர்கள் இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைகழகத்தில் படித்தபொழுது சந்தித்து கொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகிலேயே கடந்த 3 ஆண்டுகளாக மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில், ஜெசிகா தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுபற்றி ஜெசிகாவின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒருவர் கூறுகையில், அவர்கள் இனிமையான, நட்புடன் பழக கூடிய தம்பதி. அவர்கள் மருந்து கடையை நடத்த தொடங்கியதில் இருந்து இந்த பகுதியில் நன்கு பிரபலம் ஆனவர்கள் என கூறினார். #tamilnews
    ×