என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notice"

    • தங்க நகை கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது.
    • நகர்ப்புறங்களில் கிராமுக்கு ரூ.5000, கிராமப்புறங்களில் ரூ.7000 வழங்கப்படும்.

    மதுரையை சேர்ந்த பிச்சைராஜன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2024 செப்டம்பர் 30-ந்தேதி சுற்ற றிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதில் பல வழி காட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஒரே பேன் கார்டு எண்ணை பயன்படுத்தி பல நகைக்க டன்களை பெறுவது, நகைக்கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைப்பது, புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக வெளியிடப்பட்டு உள்ளன. பொது நலனுக்கு எதிராக இந்த முரண்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதலின்படி முழு தொகையையும் நகை திருப்பும் போது செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும்.

    தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக் கடன்களை பெற இயலும். அதோடு நகர்புறங்களில் ஒரு கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கிராமப்புறங்களில் 7 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது.

    ஆகவே தங்க நகைக் கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    • சாமி புறப்பாடு செய்து சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.
    • கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு தெற்கு வீதியில் சோமவார மடம் இருந்து வருகிறது.

    இந்த மடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பூண்டி சைவ செட்டியார்கள் 4வது சோமவாரத்தில் உபயங்கள் செய்து, சாமி புறப்பாடு செய்து அந்த சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.

    இந்த இடத்திற்கு திருப்பூண்டி சைவ செட்டியார்கள் சார்பில் கோவிலுக்கு முறையாக குத்தகை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்ததால் அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்கள் அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி கோரினர்.

    இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையினர் அந்த கட்டித்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர் இந்த நிலையில் தற்சமயம் அந்த கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வரும் தனி நபருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு, அதன் நகல் கதவில் ஒட்டப்பட்டது.

    அந்த ஆக்கிரமிப்புதாரர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி நாகை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி கவியரசு மற்றும் வருவாய்துறையினர், கோவில் பணியாளா்கள் ஜே.சி.பிஇயந்திரம் மூலம் கட்டிடத்தை வேதாரண்யம்காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆய்வாளர்கள்குணசேகரன் கன்னிகா, பசுபதி, மற்றும் போலிசார், பாதுகாப்புடன் பழுதடைந்த ஓட்டுவீட்டைஇடித்து அகற்றினர்

    பின்பு திருக்கோயில் வசம் இடம் எடுக்கப்பட்டது. அக்கிரமிப்பில் இருந்து மீட்க பட்டசொத்தின் மதிப்பு சுமார்ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.

    • பூரண மதுவிலக்கு கேட்டு தொடர்ந்த வழக்கில் தலைமை செயலாளர்-டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    • இதற்கு சீராய்வு மனுவை காந்திராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் காந்திராஜன். இவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2021-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மது விலக்கு விவகாரம் அரசின் கொள்கை முடிவு.

    இதில் தலையிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் இதற்கு சீராய்வு மனுவை காந்திராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் அரசு பூரண மதுவிலக்கை எப்போது கொண்டு வரும். அதற்கான கால அட்டவணை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அரசு தலைமை செயலாளர் டாஸ்மாக் மேலாண் இயக்குநர், ஆயத்தீர்வை இயக்குநர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    • நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மேயர் சரவணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

     நெல்லை:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    விழிப்புணர்வு கூட்டம்

    இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மேயர் சரவணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, நகர்நல அலுவலர் சரோஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    248 மருத்துவ முகாம்கள்

    அவர்களுக்கு தற்போது பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப் பட்டது. கூட்டத்துக்கு பின் மேயர் சரவணன் கூறியதாவது:-

    தற்போது பருவ காய்ச்சலை கட்டுப்படுத்த நெல்லை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் இந்த மாதம் 248 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு தற்போது மக்கள் பயன்படும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த 16-ந் தேதி வரை 121 முகாம்கள் நடத்தப்பட்டு 214 குழந்தைங்களுக்கு காய்ச்சல் உள்ளதை கண்டறிந்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு 25 ஆயிரத்து 256 பேர் பயன் பெற்றுள்ளனர். வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் கொசுப்புளு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணியில் 557 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதுபோல தற்போது சில தனியார் மருத்துவ மனைகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டெங்கு காய்ச்சல் குறித்து தவறான அறிக்கை தருவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே அவர்கள் டெங்கு தொடர்பாக முறையான பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

    இது குறித்து 38 தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். மேலும் தவறான தகவல் தெரிவித்தால் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்செங்கோட்டில் ஒரு சில கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர்.
    • தனியார் நெய் கம்பெனி நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த கம்பெனி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி செயல்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் டீக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட கடைகள் உள்ளன். இங்கு திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    ஆயில் கண்டு பிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்த முடியாதவாறு அழிக்கப்பட்டது . ஒரு சில கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர் . மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் நெய் கம்பெனி

    நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த கம்பெனி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி செயல்பட்டு வருவது கண்டு

    பிடிக்கப்பட்டது.

    இதை யடுத்து அந்த நிறுவனத்திற்கு அனுமதி

    பெறுமாறும் இல்லை யென்றால் சீல் வைக்கப்ப டும் எனவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    • பயிர் பாதிப்பு பற்றி வேளாண்துறை அதிகாரிகள் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வு செய்து வருகின்றனர்.
    • அமைச்சர் இரண்டு பேர் பயிர்கள் சேதம் குறித்த புள்ளி விவரங்களை தரவேண்டும்.

    சென்னை:

    கடந்த சில நாட்களாக தஞ்சை, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையின் காரணமாக நீரில் சாய்ந்து மூழ்கியது. இது அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வு செய்து வருகின்றனர். இதை தொடர்ந்த தமிழக முதலமைச்சர் கூடுதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

    அதில் அமைச்சர் இரண்டு பேர் எந்ததெந்த மாவட்டங்களில் நெற்பயிர் உள்ளிட்ட அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் சேதம் அடைந்துள்ளது என்பது பற்றிய கணக்கெடுத்து புள்ளி விவரங்களை தரவேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர். இவர்களோடு வேளாண்துறை செயலாளர், இயக்குநர்கள், மூத்த அதிகாரிகள் எல்லாம் களஆய்வு மேற்கொண்டு வருகிற திங்கட்கிழமை பயிர் சேத விவரங்களை அறிந்து மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான பயிர் காப்பீட்டு தொகை பெற்று தருவது குறித்து முடிவெடுப்பார்கள்.

    அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    • பள்ளியை பூட்டிவிட்டு மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்ற 7 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது
    • பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு கல்வி சுற்றுலா சென்றனர்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கரு.தெற்கு தெரு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு கல்வி சுற்றுலா சென்றனர். இதற்கு கல்வி துறையின் அனுமதியை பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் பள்ளிக்கூடம் பூட்டப்பட்டிருப்பதை அறிந்து விசாரித்தனர். அப்போது மாணவர்களை ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா அழைத்து சென்றதும் அதற்கு உரிய அனுமதி பெறாததும் தெரியவந்தது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகியது. இதையடுத்து கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களை ஆசிரியர்கள் அவசரமாக ஊருக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர் என மொத்தம் 7 பேரிடம் அறந்தாங்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டியை சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், கரு.தெற்கு தெரு அரசு நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளை அனுமதியின்றி கடல் பகுதிக்கு அழைத்து சென்றது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இது குறித்து வடகாடு போலீஸ் விசாரித்து வருகிறது.


    கடைகளை காலி செய்ய நகராட்சி நோட்டீஸ்

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சியாக கடந்த 2010ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியானது 7.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த நகராட்சியில், 1975ம் ஆண்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. சுமார் 25 பேருந்துகள் நிறுத்தும் வசதி கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. சுமார் 30 கி.மீ சுற்றளவு பகுதிகளில் இருந்து அன்றாட 10 ஆயிரம் மேற்பட்ட பயணிகள் இந்த பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். 48 ஆண்டுகால பழைய கட்டிடத்தில் 60 கடைகள் ஏலம் விட்டப்பட்டிருந்தாலும், சுமார் 100 கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது,இதனால் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்பது அரியலுார் மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை ஏற்று தமிழக அரசும், அரியலூரில் மத்திய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என அறிவித்து, இதற்கென 7.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான டெண்டர் பணிகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் உரிமை யாளர்களுக்கு நோட்டிஸ் வழங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணி முடியும் வரையில், தற்காலிகபேருந்து நிலையம் அரியலூர் -திருச்சி புறவழிச்சாலையில் உள்ள தனியார் இடத்தில் செயல்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடி ந்தவுடன் டெண்டர் மூலம் கடைகள் ஏலம் விடப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    • ஊட்டியில் விரைவில் கோடை சீசன் தொடங்குகிறது.
    • போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இந்த நோட்டீஸ் வழங்கபட்டு உள்ளது.

    ஊட்டி

    ஊட்டியில் விரைவில் கோடை சீசன் தொடங்குகிறது. இதையொட்டி மலர் கண்காட்சி நடைபெறும். இதற்கான தற்போதே பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஊட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் போலீசார், ஊட்டியில் சாலையோரமாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து உள்ளவர்களுக்கு கடைகளை உடனடியாக அகற்றும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தவறும்பட்சத்தில் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மார்ச் மாதம் முதல் ஊட்டியில் சீசன் காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். மேலும் முக்கிய நபர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதியும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இந்த நோட்டீஸ் வழங்கபட்டு உள்ளது. என்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. அ.தி.மு.க. பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா பூமி பூஜைக்கு தலைமை தாங்கி கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் தமிழக முதல்வரின் கள ஆய்வு குறித்து முறையான முடிவுகள் வெளி வரவில்லை. கள ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்கவில்லை. குறைந்தபட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளையாவது அழைத்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.540 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தற்போது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. இதேபோல மதுரை டைட்டல் பார்க், மதுரைக்கு முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவில்லை.

    வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாக தெரியவில்லை. மொத்தமாக முதல்வரின் கள ஆய்வு கூட்டம் என்பது அவரது சுற்றுப்பயணமாக அமைந்ததே தவிர மதுரை மக்களுக்கு எந்தவித திட்டப் பணிகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்றுஅறிவித்த நிலையில் நிதி உதவி செய்யும் ஜப்பான் நிறுவனத்திடம் சுகாதாரத்துறை அமைச்சர் இது தொடர்பாக ஏதேனும் முயற்சி செய்தார்களா? என்பது தெரியவில்லை.

    இவர்கள் மத்திய அரசை குறை கூறுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகள் அருகிலேயே மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் இடத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழடி அருங்காட்சி யகத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த பணி 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க. தான். மதுரைக்கு ஆய்வுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தினம், பாலா, பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காய்கறி, மளிகை கடைகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்தன.
    • பேரூராட்சி மூலம் வாடகை செலுத்தக்கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்ப்ட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், கடைகள் மற்றும் மீன் மற்றும் பல்பொருள் அங்காடியில் உள்ள காய்கறி, மளிகை கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த குத்தகைதாரர்களுக்கு பேரூராட்சி மூலம் வாடகை செலுத்த கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

    ஆனால் இது நாள் வரை வாடகை செலுத்தாத 15 கடைகளை காவல் துறை, வருவாய் துறையின் முன்னிலையில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி ஊழியர்களால் கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தர்மர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
    • இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. எம்.பி. தர்மர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியான மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள். அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றால் இந்த மாவட்டத்திற்கு தான் பணி மாறுதல் செய்வார்கள். ஆனால் அந்த நிலையை மாற்றி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இந்த மாவட்டத்தையும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சி அடைய செய்தது அ.தி.மு.க. ஆட்சி தான்.

    வறண்ட மாவட்டம் என்ற நிலை மாறி, வளர்ச்சி அடைந்த மாவட்டம் என்ற நிலையை உருவாக்கியது அ.தி.மு.க. அரசுதான். ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் நஷ்டத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகி விட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    தற்போது தமிழக அரசு மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டங்களை மட்டும் வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தையும், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். இது கண்டனத்திற்குரியது.

    ஏற்கனவே பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வங்கிகளிலும், வெளியில் வட்டிக்கும் பணம் வாங்கி அந்த கடன்களை எப்படி அடைப்பது? என்று விவசாயிகள் விழி பிதுங்கி இருக்கும் இந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்காதது மாவட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக ஏன் அறிவிக்கவில்லை? என்ன காரணம்? என்பதை அரசு விளக்க வேண்டும்.

    இந்த மாவட்டத்தில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஏன் வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசுக்கும், விவசாய துறை செயலாளருக்கும், இ-மெயில் மூலம் அறிக்கை அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×