search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutrients"

    • கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்கும்.
    • ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில், உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்க உங்கள் உடலுக்கு கூடுதலான கர்ப்ப காலத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் தேவை.

    மேலும், உங்கள் குழந்தைக்கு உணவளிக்க உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் பெறுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    பாதம்

    பாதாமில் கால்சியம், மெக்னீசியம், புரதம், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது.

    பாதாம் சாப்பிடுவதால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

    கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்கும்.

    இதய நோயில் இருந்து காப்பாற்றும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

    புற்றுநோயைத் தடுக்க உதவும்.

    ஆற்றல் மற்றும் பல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

    பிஸ்தா

    பிஸ்தா மொறுமொறுப்பு சுவையான நட்ஸ் ஆகும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது.

    பிஸ்தாவில் நார்ச்சத்து, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், தாமிரம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    பிஸ்தா சாப்பிடுவது உங்கள் உறுப்புகள், தசைகள் மற்றும் திசுக்கள் சரியாக செயல்பட உதவுகிறது.

    கர்ப்பிணிப் பெண்களின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

    முந்திரி

    கர்ப்ப காலத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் முந்திரியால் வழங்க முடியும். இதில் கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் கே போன்ற சத்துகள் உள்ளது.

    முந்திரி ஒட்டுமொத்த செரிமானத்திற்கு நல்லது மற்றும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

    இது இரும்பின் சிறந்த மூலமாகும், ரத்த சோகையைத் தடுக்கவும் போராடவும் உதவுகிறது, மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

    இது கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல ஆதாரங்களாகும், எனவே அவை தாய்மார்கள் மற்றும் குழந்தைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.

    முந்திரியை உட்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈறுகள் மற்றும் பல் சிதைவைத் தடுக்க உதவும்.

    இது கொழுப்பு அளவுகளை பராமரிக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. முந்திரி வைட்டமின் கே இன் நல்ல மூலமாகும், இது கர்ப்ப காலத்தில் ரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது.

    வால்நெட்

    அக்ரூட் பருப்புகள் பசியின்மை, இனிப்புகள் மற்றும் பல சுவையான உணவுகளுக்கு ஒரு சிறந்த மூலப்பொருள். வால்நெட் பருப்பில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த உலர்ந்த பழங்கள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானது மற்றும் சத்தானது.

    மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும். இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். நல்ல தூக்கம் மற்றும் மனச்சோர்வு சரிசெய்ய உதவுகிறது.

    சரியான எடை மேலாண்மைக்கு உதவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்உலர்ந்த அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கூடுதலாக, அத்திப்பழம் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றிற்கான உங்கள் தினசரி தேவைகளை கிட்டத்தட்ட உள்ளடக்கியது.

    ஒரு நாளைக்கு ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தை ஜூசாக குடித்தால், கர்ப்பிணித் தாயின் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து 10% கிடைக்கிறது. உடலின் தாது தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    ஆரோக்கியமான உணவுக்கு பங்களித்து செரிமானத்தை எளிதாக்குகிறது. ஒமேகா 3 மற்றும் ஃபோலிக் அமிலம் கருவின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. காலை சுகவீனத்தை குறைக்கிறது. இது இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாகும். உயர் ரத்த அழுத்தத்திற்கு நல்லது.

    ஆப்ரிகாட்

    ஆப்ரிகாட்டில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, தாமிரம், வைட்டமின் ஈ போன்ற சத்துகள் உள்ளது. மேலும் இதனை எடுத்துகொள்வதால் கர்ப்பகால மலச்சிக்கலைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    தசை மற்றும் உறுப்பு செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.

    பல பெண்கள் கர்ப்பகால நீரிழிவு நோயாலும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், ஆப்ரிகாட் பழங்களை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவுகிறது.

    இதை சாப்பிடுவதால் தாய்க்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் நன்மை பயக்கும். ஆப்ரிகாட் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த உலர்ந்த பழங்களில் ஒன்றாகும். ஒரு சுவையான மில்க் ஷேக் செய்ய உலர்ந்த அப்ரிகாட் பழங்களை துண்டாக்கி தானியங்கள், இனிப்புகள் மற்றும் பலவற்றை சேர்த்து பாலுடன் கலக்கவும். பின்பு அதனை எடுத்துகொள்ளலாம்.

    பேரிட்சை

    பிரசவத்தின்போது ஏற்படும் பிரச்சினை வருவதை தவிர்க்க தாய்மார்களுக்கு கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இது கருப்பையில் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

    உங்கள் குழந்தைக்கு சுமூகமான பிறப்பை உறுதி செய்கிறது மற்றும் தாய்க்கு பிரசவத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

    மக்னீசியம் நிறைந்தது, இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இரும்புச்சத்து குறைபாட்டை நிர்வகிப்பதற்கும் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பேரிட்சம்பழம் நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது.

    • பல்வேறு நுண் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
    • அரிசிப் பொரியில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு அரு மருந்தாக செயல்படும்.

    அரிசியை பொரிப்பதன் மூலம் தயார் செய்யப்படும் அரிசிப் பொரியை உட்கொள்ளலாமா? என்ற தயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அரிசிப் பொரியும் ஊட்டச்சத்துமிக்க பொருள்தான். அதில் நார்ச்சத்து, புரதம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஏ, சி உள்பட பல்வேறு நுண் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை. 

    * அரிசிப் பொரியில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு அரு மருந்தாக செயல்படும்.

    * இது குறைந்த கலோரி கொண்டது. அதனால் உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இதிலிருக்கும் நார்ச்சத்தும், அத்தியாவசியமான ஊட்டச்சத்து கலவைகளும் பசியை கட்டுப்படுத்த உதவும். அதனால் அதிகம் சாப்பிடுவதை தடுத்து, விரைவாக உடல் எடை குறைவதற்கு வித்திடும்.

    * மனித உடலின் முக்கிய அங்கமாக விளங்கும் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் அரிசிப் பொரி உதவும். அதிலிருக்கும் கால்சியம், இரும்பு, வைட்டமின் டி, தியாமின், ரிபோபிளேவின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் எலும்புகளிலுள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மீளுருவாக்கமும் செய்யும். ஒட்டுமொத்த உடல் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் உதவும்.

    * அரிசிப் பொரியில் சோடியம் குறைவாகவே இருக்கும். அதனை உட்கொள்வது ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கு உதவும். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் இரண்டையும் நிர்வகிக்க உதவும். இதய செயல்பாட்டையும் மேம்படுத்தும். மாரடைப்பு, ரத்த குழாய்களில் அடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

    * அரிசிப் பொரியில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்டுகள், தாதுக்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் செய்கின்றன. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுவதற்கும், வயிற்றை பாதிக்கும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதற்கும் உதவுகின்றன. சளி, தொண்டை புண் மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் துணைபுரிகின்றன.

    * செரிமானத்தை ஊக்குவிக்கவும் அரிசிப் பொரி சிறந்த சிற்றுண்டியாக பரிமாறப்படுகிறது. வயிறு மற்றும் குடலில் சேரும் உணவுத்துகள்களை உடைத்து ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு தூண்டிவிடும்.

    * அரிசிப் பொரியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்க உதவும். குறிப்பாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். தோல் சுருக்கம், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதை தடுப்பதோடு விரைவில் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதையும் தள்ளிப்போடும்.

    * அரிசிப் பொரியுடன் மசாலாப் பொருட்களை கலந்து சிற்றுண்டியாக தயார் செய்து சாப்பிடலாம். அரிசிப் பொரி ஏராளமான நன்மைகளை வழங்கினாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். 150 கிராமுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அதை விட அதிகமாக உட்கொள்வது உடல் பருமன் பிரச்சினைக்கு வித்திடும். இரவுப்பொழுதில் உட்கொள்வது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.

    • வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
    • நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

    வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்தவை, மிருதுவானவை, சத்தானவை. தினமும் ஊறவைத்த ஒரு வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை..

    இதய ஆரோக்கியம்

    வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைக்கவும், நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கவும் உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    மூளை செயல்பாடு

    மேலும் வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை செயல்பாட்டையும் மேம்படுத்தும். அறிவாற்றல் திறனையும் அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

    அழற்சி எதிர்ப்பு பண்பு

    வால்நட்டில் பாலிபினால்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்டுகள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளன. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன.

    உடல் எடை

    வால்நட் அதிக கலோரிகள் கொண்டதாக இருந்தாலும் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. அதனால் சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக உட்கொள்ளப்படும் கலோரி அளவை குறைக்கவும் செய்யும்.

    செரிமானம்

    அக்ரூட் பருப்பை ஊறவைத்து சாப்பிடும்போது எளிதில் செரிமானமாகிவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் அதிகரிக்கும். அதில் செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்தும் உள்ளது.

    எலும்பு ஆரோக்கியம்

    வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கு மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் தேவை. அவை வால்நட்டில் இருக்கின்றன. அதனை தினமும் சாப்பிடுவது அதிக பலனை தரும்.

    சரும ஆரோக்கியம்

    அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஈ அதிகம் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன.

    ரத்த சர்க்கரை

    அக்ரூட் பருப்புகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

    தூக்கம்

    மெலடோனின் ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கும் தன்மை அக்ரூட் பருப்புக்கு உண்டு. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனாகும். இதனால் தூக்கத்தின் தரம் மற்றும் தூங்கும் கால அளவை மேம்படுத்த உதவும்.

    நாள்பட்ட நோய்கள்

    அக்ரூட் பருப்பில் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன.

    • உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
    • இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

    தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

    புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

    தேங்காயின் அதிகபட்ச நன்மைகளை பெறுவதற்கு, நீங்கள் தேங்காய்யை பச்சையாக சாப்பிடுவதே நல்லது.

    எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.

    தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியைக் கொடுக்கிறது. அதோடு இதில் நோய் எதிர்க்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை இரண்டு மடங்காகக் அதிகரிக்கச் செய்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் பருவகால நோய் தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.


    தலைமுடி உதிர்வை தடுக்க இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

    தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும். மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது

    தேங்காயை சரியான அளவு எடுத்துக் கொண்டால் எந்த வித விளைவும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது வாயுப் பிரச்சினை, கலோரி அதிகமாகுதல், சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் அலர்ஜி போன்றவைகளும் ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு சரியான அளவில் தேங்காயை பயன்படுத்தி எல்லா விதமான நலன்களையும் பெறுங்கள்.

    • குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும்.
    • அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன.

    குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும். கீரையை உணவாக சாப்பிடுவது, மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். உண்மையில், கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

    உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி-1, பி-2, பி-6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன. கீரைகளில் உள்ள கரோட்டினாய்டுகள் வைட்டமின் ஏ சத்தாக மாறி, உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.

    உடல் இயக்கத்துக்கு நார்ச்சத்து மிக மிக அத்தியாவசியமாகும். அந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகளவு கிடைக்கின்றன. செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுக்கின்றன. குடல் இயக்க மாறுபாட்டை தடுப்பதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் கீரைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    உணவு பழக்க வழக்க மாறுபாட்டால், இதய பிரச்சினைகள் வாழ்வியல் நோயாக மாறியுள்ளது. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்வதால் இதயப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

    கீரைகள் சாப்பிடும்போது இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. கீரைகளில் உள்ள நைட்ரேட் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்துக்கு சீரான அளவில் ரத்தத்தை அனுப்புகிறது. நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை அகலப்படுத்தி தமனிகளில் அடைப்பை தடுக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

    கண் பார்வைத் திறனை பராமரிப்பதில் கரோட்டினாய்டு நிறமிகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டீன் மிக அவசியமானவை என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரை பாதிப்பு அபாயத்தையும் குறைக்கின்றன.

    மேலும், கண்புரை உருவாகுவதை தடுப்பதுடன், இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதாவதையும் குறைக்கின்றன. இந்த சத்துக்களும் கீரைகளில் நிரம்ப கிடைக்கின்றன.

    உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான அனைத்து பாகங்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான மிக அத்தியாவசிய வைட்டமின்கள் கீரைகளில் இயல்பாகவே கிடைக்கும்போது, அவற்றை தவிர்க்காமல் அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.

    • பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல்.
    • சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    தென்னிந்த பண்டிகைகளில் பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம். நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சுவையைப் போலவே சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    சர்க்கரைப் பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் உணவுப்பொருட்களில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

    குளூட்டன் இல்லாத பச்சரிசி, ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுப்பொருளாகும். இதில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் சிறு மூளையின் இயக்கத்தை தூண்டக்கூடியவை. அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.

    பச்சரிசியில் கால்சியம், மெக்னீசியம். பாஸ்பரஸ், பொட்டாசியம். இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் ஏ. பி ஆகிய சத்துக்கள் உள்ளன. பாசிப்பருப்பில், புரதச்சத்து அதிக அளவில் உள்ளது, இது உடலை குளிர்ச்சிப்படுத்தும், இதில் இருக்கும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் மெக்னீசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற சத்துக்களும் பாசிப்பருப்பில் உள்ளது. இவை அனைத்தும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

    இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் வெல்லத்தில் வைட்மின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. அவை சருமம் உள்பட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டமளிக்கும். வெல்லம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை போக்கும்.

    சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. வைட்டமின் ஏ. ஈ போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன. இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கும். முந்திரி, திராட்சை போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை.

    பண்டிகை தினத்தில் விரதத்தை முடித்தவர்கள் சர்க்கரை பொங்கலை சாப்பிடும்போது அவர்களுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும். சர்க்கரைப் பொங்கலில் வாசத்திற்காக சேர்க்கப்படும் ஏலக்காயில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    அதனால் தான் ஒவ்வொரு விசேஷத் திலும் சர்க்கரைப் பொங்கல் பிரதான உணவாக இருக்கிறது. கோவில்களில் நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    • சத்தாண சிமிலி உருண்டை பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

    தேவையான பொருட்கள்:-

    கேழ்வரகு (ராகி) மாவு - 250 கிராம்

    வெல்லம் -300 கிராம்

    வேர்கடலை - 200 கிராம்

    ஏலக்காய்- 4 நம்பர்

    நெய் - தேவையான அளவு

    உப்பு- ஒரு சிட்டிகை

    செய்முறை:-

    ஒரு கடாயில் 200 கிராம் வேர்கடலையை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 250 கிராம் கேழ்வரகு (ராகி) மாவு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு தோசை தவாவில் எண்ணை அல்லது நெய் சேர்த்து ரொட்டி அளவிற்கு திரட்டி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வேக வைத்து ராகி ரொட்டி துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்சி ஜாரில் 300 கிராம் வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த வெல்லம், பொடித்த வேர்கடலை, வேகவைத்து பொடித்த ராகி ரொட்டிகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையுடன் ஏலக்காய் பொடி, 3 கரண்டி நெய் சேர்த்து அனைத்தையும் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும். சுவையான சிமிலி உருண்டை தயார்.

    90-களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிமிலி உருண்டைகளை ஸ்நாக்காக செய்து கொடுப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    • பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
    • சத்தான ஊட்டச்சத்து நிறைந்தது, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:-

    பாசி பயறு - 200 கிராம்

    நாட்டுச்சர்க்கரை 250 கிராம்

    வேர்கடலை - 100 கிராம்

    ஏலக்காய் - 4 நம்பர்

    உப்பு -ஒரு சிட்டிகை

    நெய் - 3 கரண்டி

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் பாசிபயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு வானொலியில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 நம்பர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு தயார். https://www.maalaimalar.com/health

    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரிப்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. துணை இயக்குனர், காசநோய் மருத்துவர் கணபதி அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் நடந்த முகாமில் சித்த மருத்துவர், பல் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட காசநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    • கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி மட்டும் கருத்தில் கொள்ளாமல் வயிற்றில் உள்ள குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஒரே முதல்வரான மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்.

    கருவில் இருக்கும் குழந்தைகள் கூட கருணாநிதியின் மகன் பெயர் சொல்லும் அளவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு பார்த்து பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆயிரக்கனக்கான ஏழை, எளிய கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் இந்த மருத்துவமனை வளர்ச்சிக்கு நான் எப்போதும் உறு துணையாக இருப்பேன் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர் வனராஜ், ஒன்றிய கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
    கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். அதை எனக்குப் பிடிக்காது, அதில் என்ன இருக்கிறது? என்றும் கூறுவார்கள். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. காய்கறி சந்தைகளில் எளிதாக கிடைக்கும் கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

    கத்தரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதனால் இருதயத்தின் பலம் அதிகரிக்கிறது. கத்தரிக்காயில் ஊட்டச்சத்துகள் இருப்பதால் உடலுக்கு மென்மை மற்றும் பலத்தை அளிக்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

    கால்களில் வீக்கம் இருக்கிறதா? கவலை வேண்டாம். கத்தரிக்காயை அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகி வரும். வயிற்று பிரச்சினைகள் நீங்க, கத்தரிக்காயை சூப் வைத்து சாப்பிட்டால் சரியாகி விடும். சூப் வைப்பதும் சுலபம்தான். வேகவைத்த கத்தரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். வயிற்றுக்கு சுகமாகவும் இருக்கும்.

    நெருப்பில் சுட்ட கத்தரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் குறையுமாம். இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

    கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவை தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமை அதிகரிப்பதோடு ஞாபகத் திறனையும் தூண்டுகிறது. உங்களுக்கு அடிக்கடி மறதி ஏற்படுவதாக உணர்ந்தால் உடனே கத்தரிக்காய் சமைத்து சாப்பிடலாம். கத்தரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.
    ×