என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "obsessed"
- காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடப்பயணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது.
- புதுவை மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
புதுச்சேரி:
காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடப்பயணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது.
கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கி பேசியதாவது:-
புதுவை மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. மத்திய பல்கலைக்கழகம், புதுவை அரசு பொறியியல் கல்லூரி போன்ற பல்வேறு திட்டங்களையும் புதுவையில் ஏராளமான தொழிற்சாலை களும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்க ப்பட்டது. தற்போது தொழிற்சாலைகள் இல்லாத மாநிலமாக புதுவை இருந்து வருகிறது.
அதிக அளவில் குற்றங்கள் நடக்கக்கூடிய மாநிலங்களாக புதுவை மாநிலம் உள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் 67.90 சதவீதம் பேர் லஞ்சம் வாங்குவதாக ஆய்வு அறிக்கை கூறப்படுகிறது.
எனவே இந்த அரசு மக்களுக்கு எவ்வித திட்ட ங்களையும் செய்யவில்லை. தற்போதைய கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. பல திட்டங்களை கொண்டு வந்ததாக கூறி வருகிறார். நானும் தற்போதைய எம்.எல்.ஏ.வும் நேருக்கு நேராக அமர்ந்து விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன் இந்த ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்களா?
குறிப்பாக சாலை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை எந்த திட்டத்தையும் இந்த அரசு செய்யவில்லை அப்படி செய்தார்கள் என நேருக்கு நேராக என்னிடம் நிருபித்தால் எனது மீசையை எடுத்து விடுகிறேன்.
எனவே அடுத்த ஆண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம். மேலும் புதுவையில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி வரும்.எனவே இப்பகுதி மக்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்