search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on 75th"

    • ஈரோட்டில் நாளை வ. உ. சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட–ப்படுகிறது.
    • கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தேசியக்கொ டியை ஏற்றி வைக்கிறார். அதை த்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா நாளை(திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டா டப்படுகிறது. ஈரோட்டில் நாளை வ. உ. சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட–ப்படுகிறது.

    நாளை காலை 9.05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தேசியக்கொ டியை ஏற்றி வைக்கிறார். அதை த்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

    பின்னர் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்க ளுக்கு நற்சான்றிதழ் வழங்கி அவர்களை கவுரவிக்கிறார். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ -மாணவி கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து விழா நிறைவு பெறுகிறது.

    ×