search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on the Thalamalai road"

    • வனப்பகுதியில் கரடிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
    • கரடி ஒன்று சாலையில் நடமாடியதை கண்டு அச்சமடைந்து காரை ஓரமாக நிறுத்தினர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன.

    இதில் குறிப்பாக தலமலை, கேர்மாளம் வனப்பகுதியில் கரடிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று திம்பம்-தலமலை வனச்சாலையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று சாலையில் நடமாடியதை கண்டு அச்சமடைந்து காரை ஓரமாக நிறுத்தினர்.

    சாலையில் கார் வருவதை கண்ட கரடி சாலையில் இருந்து வனப் பகுதிக்குள் வேகமாக சென்று மறைந்தது. கரடி நடமாட்டத்தை காரில் சென்றவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை வாட்ஸ்- அப், பேஸ்புக், உட்பட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் திம்பம்- தலமலை வனச்சாலையில் பகல் நேரத்தில் கரடி நடமாடுவதால் பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கையாக இருக்கும் மாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    ×