என் மலர்
நீங்கள் தேடியது "operation"
- திருமங்கலம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிராமசபை கூட்டத்தில் தலைவர் ரம்யா முத்துக்குமார் உறுதியளித்துள்ளார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் முதல் பகுதி சபா கூட்டம் 5 மற்றும் 6-வது வார்டுகளை இணைத்து கங்கன் காலனியில் காளியம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். ஆணையாளர் டெரன்ஸ் லியோன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சில் குழுத்தலைவர் ஜஸ்டின் திரவியம் கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், நகர தி.மு.க. நிர்வாகிகள் முத்துக்குமார், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பகுதி சபா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், தெருவிளக்கு வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. நாங்கள் பொறுப்பேற்று 6 மாதங்கள் தான் ஆகிறது. விரைவில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வோம் என தெரிவித்தார். இதனை த்தொடர்ந்து பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ் லியோனிடம் மனுக்களை கொடுத்தனர்.
இதே போல் 7-வதுவார்டு 8-வது வார்டு மற்றும் 11-வது வார்டு மற்றும் 12-வது வார்டுகளிலும் நேற்று நகராட்சி தலைவர் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த வார்டுகளிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- மதுரை- போடி இடையே விரைவில் பயணிகள் ரெயில் முழுமையாக இயக்கப்படும்.
- மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
மதுரை
மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் மதுரை - தேனி வரை பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தேனி - போடி இடையே 15 கிமீ தொலைவுக்கான அகல ரெயில் பாதை பணிகள் தற்போது முடிந்து உள்ளன. இங்கு ஏற்கனவே ரெயில் என்ஜின் விடப்பட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.
தேனி - போடி புதிய அகல ரெயில் பாதையில் நேற்று 120 கி.மீ வேகத்தில் ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி போடியில் இருந்து புறப்பட்ட ரெயில் என்ஜின், தேனிக்கு 9 நிமிடங்கள், 20 நொடியில் சென்றது. இந்த ஆய்வின் போது லோகோ பைலட் முத்துகிருஷ்ணன், உதவி லோகோ பைலட் அய்யனார் ஆகியோர் ரெயில் இன்ஜினை ஓட்டினார்கள். தேனி- போடி அகல ரெயில் பாதை சோதனையின் போது தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர் சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மதுரை- தேனி இடையே பயணிகள் ரெயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. தேனி முதல் போடி வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விட்டது. எனவே மதுரை-போடி இடையே பயணிகள் ரெயிலை முழுமையாக இயக்குவது என்று மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள்.
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்று வருகிறார்கள். சின்னசேலம் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளன. இந்த திருட்டில் ஈடுபட்டவர் ஒரே நபரா? அல்லது வேறு வேறு நபரா? என்பது இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது. திருட்டு போன இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள். சின்னசேலம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிரா மத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவராமன் கணியா மூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 3-ந் தேதி மாலை 3 மணி அளவில் தனது இருசக்கர வாக னத்தை கணியாமூரில் நான்கு முனை சந்திப்பில் உள்ள டீ கடை அருகே நிறுத்தி விட்டு சொந்த வேலை காரணமாக வெளி யூருக்கு சென்று விட்டு நேற்று வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் இல்லாத தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சின்ன சேலம் போலீஸ் நிலை யத்தில் சிவராமன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கை பதிவு செய்துள்ளனர். இருச க்கர வாகனங்கள் பறி கொடுத்தவர்கள் சின்ன சேலம் போலீஸ் நிலைய த்திற்கு நடையாய் நடக்கி றார்கள். இது குறித்து உயர் அதிகாரி தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்க ப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர் வாகன திருட்டால் பொது மக்கள் பீதி அடைந்துள்ள னர்.
- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ் கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வரு கின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ண த்தில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர்.
அவர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கிட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் வரை யிலும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ராமேசுவரம் வழியிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
- பராமரிப்பில்லாத சித்தார்கோட்டை சமத்துவபுரம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்பார்க்கின்றனர்.
- திருவள்ளுவர் சிலைகளையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலை கூண்டில் அடைக்கப்பட்டு அந்த பகுதி பராமரிக்கப்படாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த சமத்துவபுரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
தமிழக அரசு இந்த ஆண்டு சமத்துவபுரங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் ரூ.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வந்த நிலையில், இந்த நிதியை முறையாக பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைகளையும், திருவள்ளுவர் சிலைகளையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்ல ஆன்மீக சுற்றுலா ரெயில் மே 4-ந் தேதி இயக்கப்படுகிறது.
- சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
விருதுநகர்
ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலப் பொது மேலா ளர் ரவிக்குமார், தெற்கு ரெயில்வே அதிகாரி வெங்கட சுப்பிரமணியன், தென் மண்டல சுற்றுலா பொது மேலாளர் சுப்பிர மணி ஆகியோர் விருது நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்தாண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பாரத் கவுரவ் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரெயில்வே நிர்வாகம், ஐ.ஆர்.சி.டி.சி. இணைந்து இந்தச் சிறப்பு ரெயிலை இயக்குவதால், சுற்றுலா சென்று வருவதற்கான செலவு குறைகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரு நபருக்கு ரெயில் கட்டணம், தங்கும் அறை, கோவிலுக்குச் சென்று வருவதற்கான கட்டணம் என ரூ.20 ஆயிரத்து 367 செலுத்த வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வோருக்கு கட்டணம் ரூ.35 ஆயிரத்து 651 ஆகும். இவர்களுக்கு தங்கும் அறை, வாகனம் ஆகியவை குளிர்சாதனத்துடன் வழங்கப்படும். மேலும் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டணச் சலுகை உண்டு.
வருகிற மே 4-ந் தேதி கேரள மாநிலம் கொச்சு வேலியில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா சிறப்பு ரெயில் செங்கோட்டை, விருதுநகர் வழியாக தஞ்சை, சென்னை வழியாக, வட மாநிலத்தில் உள்ள பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாராணசி, திரிவேணி சங்கமம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று திரும்ப உள்ளது.
இந்த ரெயிலில் 4 குளிர்சாத னப் பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். வட மாநில கோவில்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
- அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். அப்பொழுது கிராம ங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். எழுத்தூர் கிராமத்தில் குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதிகள், சிமெண்ட் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக அதிகாரிகளை அழைத்து கழிவுநீர் வடிகால் வசதிகளையும் குடிநீர் வசதிகளையும் செய்ய உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர் .மேலும் ஐயவனூர், மாங்குளம் கிராமத்தில் உள்ள கொவில்களை ஆய்வு செய்து கோவில்களை புனரமைப்பு செய்ய நிதி உதவிஅளித்து உடனடியாக கும்பாபிஷேகம் செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன.
- சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடந்த மொத்த பிரசவங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அறுவை சிகிச்சை பிரசவங்கள் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்தது.
இது ஆந்திராவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேசன் மூலம் பிறக்கும் குழந்தைகள் நகர்ப்புறங்களில் 50.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 39.3 சதவீதமாகவும் உள்ளனர்.
குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன. சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.
ஒரு சில மருத்துவமனைகள், தாய்க்கு இயல்பான பிரசவம் செய்யும் திறன் இருந்தபோதிலும், ஆபரேசனை தேர்வு செய்ய பரிந்துரைக்கின்றன. இதனால் சாதாரண பிரசவத்துடன் ஒப்பிடும்போது அதிக கட்டணம் வசூலிக்க முடியும்.
மேலும் சில சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் தாங்களாகவே ஆபரேசனை கோருகின்றனர். இது சாதாரண பிறப்பை விட பாதுகாப்பான விருப்பம் என்று நம்புகிறார்கள்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
சமீப நாட்களில், மாறிவரும் வாழ்க்கை முறை, தாமதமான கர்ப்பம் மற்றும் செயற்கை கருத்தரிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவது இயல்பானதாக மாறி வருகிறது.
இது பிரசவிக்கும் போது சிக்கலின் விகிதத்தை அதிகரிக்கிறது. தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிரையும் காப்பாற்ற, குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆபரேசன் தேர்வு செய்யப்படுகிறது.
15 சதவீதத்துக்கும் அதிகமான கர்ப்பங்கள் சிக்கல்களில் இறங்குகின்றன, அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படுகின்றன. இங்கே தாய் மற்றும் குழந்தைக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சையாக மாறுகிறது.
மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து உள்ளார்ந்த அபாயத்தைக் கொண்டுள்ளன.
புதிதாக பிறந்த குழந்தைகளை தாய்ப்பாலூட்டுவதில் இருந்து தூரமாக்கும் என்ற கவலையும் உள்ளது.
அறுவை சிகிச்சையின் காரணமாக, மென்மையான கீறல்கள் மற்றும் தையல்களால், தாய்மார்கள் உட்கார்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இருப்பினும் ஆரோக்கியமான கர்ப்பத்தை பராமரிப்பது, சிக்கல்களைத் தடுப்பது மற்றும் சாதாரண பிரசவத்தைத் தேர்ந்தெடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனையின் போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளையும் செய்ய பரிந்துரைக்கிறோம் என்றனர்.
- அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள்.
- பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
சேலம்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள். இதையொட்டி பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அதன்படி சேலம் கோட்டம் சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகிற 3-ந் தேதி வைகாசி பவுர்ணமியொட்டி சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர் உட்பட்ட ஊர்களில் இருந்து 75 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது .
இந்த சிறப்பு பஸ்கள் நாளை காலை முதல் 4-ந் தேதி வரை இயக்கப்படும். இதனை பக்தர்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது.
- இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம்:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது. இதன் காரண மாக பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக சேலம் மண்ட லமான சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, திரு வண்ணாமலை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்க ளூருக்கும் இன்று (சனிக்கி ழமை) முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.
இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 7-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவ டிக்கை எடுக்கப்படும். எனவே பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.
- மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது.
- தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உட்பட பல திருவிழா நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும்.
இது தவிர பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல ஒவ்வொரு அமாவாசை நாட்களில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வரும் 17-ந் தேதி ஆனி மாத அமா வாசையை முன்னிட்டு, அன்று அதிகாலை முதல் சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் பஸ் நிலையம், தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத்.
1963-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டது. என்றாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். 20 வயதாகும் வரை அவர் தனது பெரிய வயிற்றை பற்றி கவலைப்படவில்லை.
அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிறு மேலும் மேலும் பெரிதாகி பலூன் போல காணப்பட்டது. என்றாலும் சஞ்சுபகத் தனது வீங்கிய வயிற்றை பற்றி கவலைப்படாமல் வேலையை தொடர்ந்து வந்தார்.
அவரது நண்பர்களும், அப்பகுதி மக்களும் சஞ்சுபகத்தை கர்ப்பிணி என கேலி-கிண்டல் செய்து வந்தனர். இது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் வயிறு வீக்கம் காரணமாக அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுவாசிக்க முடியாமல் அவர் திணறினார். இதையடுத்து 1999-ம் ஆண்டு அவரை மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அஜய்மேத்தா, சஞ்சுபகத் கட்டியால் அவதிப்பட்டதாக கருதினார். அவரின் வயிற்றில் பெரிய கட்டி இருக்கலாம் என்று கருதிய டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அப்போது அவரது வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது 'மறைந்து போகும் இரட்டை நோய்க்குறி' என்று கருதினர். அதாவது அவரது இரட்டையர் கர்ப்ப காலத்தில் இறந்து விட்டதாக நினைத்தனர்.
ஆனால் பின்னர் நடந்த பரிசோதனை மற்றும் ஆய்வில் அவருக்கு இருக்கும் பாதிப்பு அரிதிலும் அரிய நோய் பாதிப்பான 'கருவில் கரு' என்று கண்டறியப்பட்டது. அவர் கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த வகை நோய் பாதிப்பு என்பது பிறக்காத இரட்டை குழந்தை உடலில் ஒரு ஒட்டுண்ணி போல வாழ்கிறது.
பின்னர் அந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். தனது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட குழந்தைகளை சஞ்சு பார்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.