search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pablo Escobar"

    • பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவின் போதைப்பொருள் ஜாம்பவான்.
    • உலகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்தார்.

    ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வியடைந்தார்.

    ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோன் ரெட்டி டெல்லி போராட்டம் நடத்தினார். அவரது கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்ட படங்களை வெளியிட்டு வீடியோக்களையும் காட்சிப்படுத்தினார்.

    இந்த நிலையில் ஆந்திர சட்டப்பேரவையில் ஜெகன் மோகன் ரெட்டியை போதைப்பொருள் ஜாம்பவான் பாப்லோ எஸ்கோபார் உடன் ஒப்பிட்டு பேசினார்.

    இன்று சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் பேசும்போது கூறியதாவது:-

    பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவின் போதைப்பொருள் ஜாம்பவான். அவன் ஒரு போதைப்பொருள் பயங்கரவாதி. பின்னர் அரசியல்வாதியாக மாறினார். அதன்பிறகு உலகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்தார். அந்த நேரத்திலேயே 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் சம்பாதித்தார். தற்போது அது ஏறக்குறைய 90 பில்லியன் டாலராகும்.

    1976-ல் கைது செய்யப்பட்டார். 1980-ல் உலகின் மிகப்பெரிய பொதைப்பொருள் ஜாம்பவானாக திகழ்ந்தான். போதைப்பொருள் விற்றும் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும்.

    முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இலக்கு எண்ணம்?. டாடா, ரிலையன்ஸ், அம்பானியிடம் பணம் இருக்கிறது. அவர்களை விட பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிலருக்கு தேவைகள் உள்ளன, சிலருக்கு பேராசை உள்ளது மற்றும் சிலருக்கு வெறி உள்ளது. இந்த வெறி பிடித்தவர்கள் இதுபோன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆந்திர பிரதேசம் நாட்டின் போதை தலைநகராகியுள்ளது. இதில் முன்னாள் முதல்வரின் பங்கு உள்ளது என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஜெகன் மோகன் ரெட்டி மீது உள்ளது. கொலை முயற்சி வழக்கு இந்த மாதம் தொடக்கத்தில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கொண்டா ரஜின் காந்தி "தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் இன்னும் முடியடைவில்லை என் பார்வையில் உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் வன்முறை குறித்து கண்காட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை மீதான பார்வையை திசைதிருப்ப முயற்சிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    ×