search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pancha Kavyam"

    • பாரம்பரிய நெல் ரகங்கள், பஞ்ச கவ்யம், பூச்சு விரட்டி தயாரிப்பின் முக்கியதுவத்தை பற்றி பேசினர்.
    • மரபு சார்ந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய், கனி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு வேளாண்மை துறை விதைப் பண்ணையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பில் மரபு சார் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், துணை இயக்குனர் மதியழகன், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மணிமாறன், மாவட்ட ஊராட்சிகவுன்சிலர் துளசிரேகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் அனைவரையும் வரவேற்றார். பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர் செல்வம், ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    வேளாண் வல்லுநர்கள், மூத்த விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு விவசாயி களுக்கு தேவையாள தொழி ல்நுட்பம், பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், பஞ்ச கவ்யம், பூச்சு விரட்டி தயாரிப்பின் முக்கியதுவத்தை பற்றி பேசினர்.

    முன்னதாக கண்காட் சியை நிவேதா முருகன் எம். எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இதில் பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், மரபு சார்ந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய், கனி வகைகள் உள்ளிட்ட பல் வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுர்த விஜயகுமார், மயிலாடுதுறை தி.மு.க. ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்மான இளைய பெருமாள், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் செந்தில் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×