என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliment election"

    • நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
    • முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

    பாட்னா:

    பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்.

    எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம்.

    சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இந்தியா கூட்டணியின் நோக்கம்.
    • பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்ட 26 எதிர்க்கட்சிகள் ஜூலை 18 அன்று இந்தக் கூட்டணியை உருவாக்கின.

    பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்ட 26 எதிர்க்கட்சிகள் ஜூலை 18 அன்று இந்தியா கூட்டணியை உருவாக்கின. வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இந்தக் கூட்டணியின் நோக்கம்.

    இந்த ஆண்டில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் அட்டவணை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு குறைவாக இருக்கும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதம் நிறைவு பெற உள்ளது. இதனால் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அடுத்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் வேட்பாளர்களை அறிவிக்க இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கிடையே, ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி இந்த தடவை 400 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. சமீபத்தில் நடந்த பா.ஜ.க. தேசியக் குழு கூட்டத்தில் இந்தத் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு குறைவாக இருக்கும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சமூக வலைதளக் குழுக்களை தீவிரப்படுத்தவும் பா.ஜ.க. அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய சுலோகத்தை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது. '3வது முறையும் மோடி ஆட்சி, 400 இடமே நமது இலக்கு' என்ற புதிய சுலோகத்தை முன்வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.

    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என பிரேமலதா தெரிவித்தார்.

    சென்னை:

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்க்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மாவட்ட செயலாளர்கள் சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

    பெரும்பாலானோர் தனித்துப் போட்டியிடுவோம் என கருத்து பகிர்ந்தனர்.

    இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. இனிமேல் கூட்டணி அமைத்துப் பேசுவோம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும்.

    விஜய பிரபாகரனை ஒரு தொகுதியில் நிற்கவைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசாமில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்தது.
    • இந்தியா கூட்டணியுடன் நாங்கள் நிற்கிறோம் என்றார் ஆம் ஆத்மி எம்பி சந்தீப் பதக்.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தலில் அசாமில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்தது. அதன்படி கவுகாத்தியில் பாபென் சவுத்ரி, தில்பர்காவில் மனோஜ் தன்வார் மற்றும் சோனிபூரில் ரிஷி ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா கூட்டணியுடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாம் இப்போது பேசுவதில் சோர்வடைகிறோம்.

    தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். எங்களுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணியுடன் நாங்கள் நிற்கிறோம்.

    இன்று ஆம் ஆத்மி கட்சி அசாமில் அறிவித்துள்ள 3 வேட்பாளர்களை இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என நம்புகிறோம்.

    கூட்டணிக்கு வந்து தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு. நேரமும் வியூகமும் முக்கியம். பேசி அலுத்துவிட்டோம். பேசுவதில் இன்னும் எவ்வளவு நேரம் விரயமாகும்? என கேள்வி எழுப்பினார்.

    • தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 306 தொகுதிகளைப் பெற்று ஆட்சியில் அமரும் என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு நடத்தியது. டிசம்பர் 15 முதல் ஜனவரி 28-ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன் விவரம் வருமாறு:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என இந்தியா டுடே, சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 306 தொகுதிகளைப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.


    உத்தர பிரதேசத்தில் 72 தொகுதிகளை பா.ஜ.க. கூட்டணியும், 8 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

    கேரளாவில் இந்தியா கூட்டணி 20 தொகுதிகளை கைப்பற்றுகிறது.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 26 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

    தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றுகிறது.

    குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றுகிறது.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணி 22 தொகுதிகளையும், பா.ஜ.க. கூட்டணி 19 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது.

    ஜார்கண்டில் 14 தொகுதிகளில் பா.ஜ.க. 12 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

    பஞ்சாப்பில் இந்தியா கூட்டணி 10 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

    பீகாரில் 40 தொகுதிகளில் பா.ஜ.க. 32 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது என தெரிவித்துள்ளது.

    • கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
    • கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம் கோவையில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. இந்த கூட்டம், அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுக்க சிறு, குறு தொழில் செய்பவர்கள் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் கொரோனா உள்ளிட்டவைகளால் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். ஜி.எஸ்.டி.-யில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதை கட்ட முடியாமல் சிறு, குறு தொழில் செய்வோர் தங்களது தொழிலை செய்ய முடியாத சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்."

    "கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மின் கட்டண உயர்வு தொடர்பாக பலமுறை தொழில்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும்," என்று தெரிவித்தார். 

    • சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
    • முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தை சந்திக்க இருக்கிறார்.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்துள்ள ஜே.பி. நட்டாவை பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

     


    சென்னை வந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ட்ரல் அருகே நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வத்தையும் ஜே.பி. நட்டா சந்திக்க இருக்கிறார். இந்த பயணத்தின் போதே பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வியூகம் பற்றிய ஆலோசனை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

    • நெல்லையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார்.
    • அப்போது, மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.

    நெல்லை:

    தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக்கூட்டங்களை நடத்துகிறது. 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், நெல்லையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க. எம்.எல்.ஏ. அப்துல் வகாப், தி.மு.க. மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், நெல்லை மேயர் சரவணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

    மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழிகளில் உள்ளன.

    பிரதமர் பல இடங்களில் திருக்குறள் சொல்கிறார். உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் என கூறுகிறார் என்று பா.ஜ.க.வினர் சொல்கின்றனர். ஆனால் சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளிக் கொடுக்கும் அவர்கள் தமிழுக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை.

    பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக நாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தயாராக உள்ளோம்.
    • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம் என்றார்.

    புவனேஸ்வர்:

    அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.

    • உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி என்றார் அகிலேஷ் யாதவ்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரசுக்கு வாரணாசி, ரேபரேலி, அமேதி, பாரபங்கி, ஜான்சி, காசியாபாத் உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ல 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், எல்லாம் நன்றாகத்தான் முடிந்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. எங்களுக்குள் மோதல் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்தார்.

    • வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
    • பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது

    வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் இத்தகைய செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    பல்வேறு வங்கிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கணக்குகளிலிருந்து வருமான வரித்துறை ஜனநாயக விரோதமாக ₹ 65 கோடியை எடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் கூறியுள்ளார்.

    பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×