search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pasque"

    • தொண்டி அருகே பாஸ்கு திருவிழா நடந்தது.
    • கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல் மாதா திருத்தலம் உள்ளது. இங்கு 128-ம் ஆண்டு பாஸ்கு திருவிழா நடந்தது. கடந்த 2 நாட்களாக இரவு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், சிலுவை பாதை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    முதல் நாள் பங்குத் தந்தை அருள் ஜீவா, 2-ம் நாள் சம்பை இணைப்பங்குப் பணியாளர் அருட்தந்தை லாரன்ஸ் ஆகியோர் தலைமையில் ஆர். எஸ். மங்கலம் வட்டார அதிபர் அருட் தந்தை கிளமெண்ட், செங்குடி பங்குத் தந்தை வின்சென்ட் அமல்ராஜ், முத்துப்பட்டினம் பங்குத் தந்தை அற்புத அரசு. இணைப்பணியாளர் அருட்தந்தை ரீகன், நகரிகாத்தான் பங்குப் பணியாளர்கள் சூசை மிக்கேல் ராஜ், பிரிட்டோ, தங்கச்சிமடம், ஒலைக்குடா பங்குப் பணியாளர்கள் அருட்தந்தை சாமிநாதன், அருட்தந்தை ஜான்சன், இணைப் பணியாளர்கள் முன்னிலையில் பாஸ்கு திருவிழா நடந்தது.

    இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×