search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peace rally"

    சென்னையில் 5-ந்தேதி நடைபெற உள்ள அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மு.க. அழகிரி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். #MKAzhagiri #Karunanidhi
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் முக்கிய பதவி கேட்டு முன்னாள் மத்திய மந்திரியும், தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி திடீர் போர்க்கொடி தூக்கி வருகிறார். கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி, தந்தை கூறும் போது எனது மனக்குமுறல்களை வெளியிடுவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 5-ந் தேதி சென்னை திருவல்லிக் கேணியில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி செல்கிறார். இதில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடம் மு.க. அழகிரி ஆதரவு திரட்டி வருகிறார்.


    மேலும் தி.மு.க.வில் உள்ள மு.க. ஸ்டாலின் அதிருப்தியாளர்களையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் மு.க. அழகிரி ஈடுபட்டுள்ளார்.

    அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மு.க. அழகிரி மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 5-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள அமைதி பேரணிக்கு அனைவரும் திரண்டு வரவேண்டும். இதில் பங்கேற்பவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரவேண்டும், மேலும் கருணாநிதி உருவப்படத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி வரவேண்டும். அமைதி பேரணி மிக அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

    பின்னர் நிர்வாகிகளிடம் ஒவ்வொருவரும் எத்தனை பேரை அமைதி பேரணிக்கு அழைத்து வருகிறீர்கள் என்ற விவரங்களை மு.க. அழகிரி கேட்டறிந்தார்.

    இந்த ஆலோசனையில் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்ஷா, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் சின்னான், முபாரக் மந்திரி, உதயகுமார், கோபிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

    அமைதி பேரணி நடந்து முடிந்ததும் அடுத்த கட்டமாக முக்கிய நடவடிக்கையிலும் மு.க. அழகிரி ஈடுபடுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    மு.க.அழகிரி தனது வீட்டு முன்பு போடப்பட்ட பந்தலில் அமர்ந்து தொண்டர்களை சந்தித்தார்.

    அப்போது ‘‘அஞ்சா நெஞ்சன் வாழ்க, கலைஞரின் வாரிசே வாழ்க’’ என்று தொண்டர்கள் கோ‌ஷம் எழுப்பினர். #MKAzhagiri #Karunanidhi #MKStalin #DMK
    சென்னையில் 5-ந்தேதி நடைபெறும் அமைதி பேரணிக்கு தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை எனவும் தி.மு.க.வில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்றும் மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri #Karunanidhi
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு தி.மு.க.வில் மு.க.அழகிரி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது மு.க.அழகிரி, உண்மையான தி.மு.க. தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் தி.மு.க.வில் முக்கிய பதவியை கேட்ட மு.க.அழகிரியின் விருப்பம் மேலிட தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தி.மு.க.வில் உள்ள மு.க.ஸ்டாலினின் அதிருப்தியாளர்கள் மற்றும் தனது ஆதரவாளர்கள் துணையோடு சென்னையில் வருகிற 5-ந்தேதி கருணாநிதி நினைவு அமைதி பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக தமிழகம் முழுவதும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தொண்டர்களை திரட்டும் வகையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மு.க.அழகிரி நடத்தும் பேரணியில் தி.மு.க.வினர் யாரும் பங்கேற்ககூடாது என்பதில் தி.மு.க. தலைமையும் உறுதியாக இருப்பதால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகளிடம் மு.க.அழகிரியின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சென்னையில் தங்கி இருந்த மு.க.அழகிரி நேற்று இரவு மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் சின்னான், முபாரக்மந்திரி, கோபிநாதன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

    தலைவர் கலைஞரின் நினைவைபோற்றும் வகையில் சென்னையில் வருகிற 5-ந்தேதி அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணிக்காக அண்ணா சாலையில் இருந்து அனுமதி கேட்டோம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக போலீசார் திருவல்லிக்கேணியில் இருந்து பேரணி நடத்த கூறி உள்ளனர்.

    இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். என்னை தி.மு.க.வில் இணைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.


    தலைவர் கலைஞர் என்னிடம் எப்போது கூறுகிறாரோ? அப்போது எனது மனக்குமுறலை மக்களிடம் கூறுவேன். சென்னையில் நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மு.க.ஸ்டாலின் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது பேரணி பற்றி பேசி கொண்டு இருக்கும்போது ஊரணி பற்றி கேள்வி கேட்கக்கூடாது என்று மு.க.அழகிரி கூறினார்.

    மதுரையில் இன்று மு.க.அழகிரி அமைதி பேரணி தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்களிடம் செல்போன் மூலம் பேசி பேரணியில் பங்கேற்கும்படி மு.க.அழகிரி அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    ஆலோசனை கூட்டம் முடிந்ததும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உடையனம்பட்டியில் உள்ள முத்துஇருளப்பன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மு.க.அழகிரி புறப்பட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, சென்னையில் 5-ந்தேதி நடைபெறும் பேரணியில் கலைஞரின் உண்மையான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். அமைதி பேரணிக்கு தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தி.மு.க.வில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்றார். #DMK #MKAzhagiri #Karunanidhi
    கலைஞர் நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    வருகிற 28-ந்தேதி நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் பற்றி எனக்குத் தெரியாது. கலைஞர் நினைவிடத்தில் எனது ஆதங்கத்தை தெரிவித்து விட்டேன்.

    கொஞ்ச நாட்களில் உங்களிடமும் ஆதங்கத்தை தெரிவிப்பேன். கலைஞர் நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்.

    கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை அமைதி பேரணியில் நிரூபித்து காட்டுவேன். அதற்கு பிறகும் எதிர்காலத்திலும் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன்.

    என்னை பின்னால் இருந்து பா.ஜனதா இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை நான் கேள்விபடவில்லை. கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளார்கள்.



    ரஜினியுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்று கேட்கிறார்கள். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது அவரோடு இணைந்து செயல்படுவதை எப்படி சொல்ல முடியும்? அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது.

    தனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள். கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKAlagiri
    ×