search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perumal navaratri"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 13-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடக்கிறது.

    15-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை புஷ்ப வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 16-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை தங்கத் தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை பல்லக்கு உற்சவம், தங்கத் திருச்சி வாகன வீதிஉலா மற்றும் ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பல்லக்கு உற்சவம் நடக்கிறது.

    இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து 19-ந்தேதி திருமலை அருகே உள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×