என் மலர்
நீங்கள் தேடியது "Petrol"
- விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்வு.
- 2008ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது கடுமையாக சரிந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது.
விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது.
2008ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது கடுமையாக சரிந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.5 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
- வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலோனார் முறையாக ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரை பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தீவிரப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
அதன்படி மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வருகிற ஏப். 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர்.
இதனை தீவிரமாக செயல்படுத்த பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் கூறியதாவது:-
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.
முதற்கட்டமாக தற்போது திருவள்ளூர் நகர் பகுதிகளில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகம் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் பங்க்குகளுக்கு பெட்ரோல் போட வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு,
அரியலூர்
தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி சி.கோவிந்தராஜன் நினைவு ஜோதி பிரசார பயண வாகனத்திற்கு ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை பாதியாக குறைக்க வேண்டும். முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது. நேரடியாக உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாகுபாடு இன்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமானம், ஆட்டோ, தையல் உள்ளிட்ட அனைத்து நலவாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் தெரிவித்து இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகிகள் பேசினர். இதில் மாநிலத் துணைத் தலைவர் கருப்பையா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்."
- அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.
திருப்பூர்:
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ., விசாரணை துவங்கியுள்ளது. அதில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்ட சதி வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையிலும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். முக்கிய கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்படுகிறது.விடுதிகள், கூரியர் சர்வீஸ்கள், வாகன பார்க்கிங் மையங்கள் என சந்தேகப்படும் விதமாக புதிய நபர்கள் நடமாட்டம் கண்காணிக்கும் வகையில் உரிய அறிவுரைகள் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவிதங்களுக்கு திட்டமிடும் நபர்கள் முக்கியமான எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்கள் தவிர தனியாக பாட்டில், கேன் போன்றவற்றில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.இது குறித்த அறிவிப்பு பெட்ரோல் பங்க்குளில் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.
- தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2022 முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலத்தில் 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் 281 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
தற்போது தலைக்கவசம் அணியாமல் வரும் பொது மக்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படு வதுடன், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குறித்தும், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், பெட்ரோல் பங்கில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்க ளுக்கு பெட்ரோல் வழங்காமல் இருப்பது குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து சாலை பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் இருசக்கர வாகன விபத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்களே அதிக அளவில் இறப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருசக்கர வாகன விபத்துகளின் மூலம் ஏற்பட்ட 126 மனித உயிரிழப்புகளில் 99 சதவீதம் மனித உயிரிழப்புகள் தலைக் கவசம் அணியாததால் ஏற்பட்டுள்ளது.
எனவே மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தினை இயக்குபவரும், உடன் பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், 2 நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடாது. நகர எல்லைக்குள் இரு சக்கர வாகனத்தினை இயக்கும் போது 40 கி.மீ., வேகத்திற்கு மிகாமல் மித வேகத்தில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 50 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ரூ.100-க்கு பெட்ரோல் இலவசமாகவும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.50-க்கு பெட்ரோல் இலவசமாகவும் வழங்கப்பட்டது.
- திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி இலக்கியவாதிகள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் 6-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லியில் பெட்ரோல் பங்க் நிர்வாகத்துடன் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை சுத்தமல்லி பங்கில் 50 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ரூ.100-க்கு பெட்ரோல் இலவசமாகவும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.50-க்கு பெட்ரோல் இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதையடுத்து சுத்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் அங்கு திரண்டு வந்து திருக்குறளை ஒப்புவித்தனர். அவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சார்பில் ரூ.100-க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் சொக்கலிங்கம் செய்திருந்தார்.
உலக பொதுமறையை கற்றுக் கொடுக்கும் திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இலக்கியவாதிகள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.
- பெட்ரோல் பங்குகளில் இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
- மீறுவோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த வாரம் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
நொய்டாவை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் 4 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை பயணிகள் மீது ஊற்றி தீவைத்துள்ளார். வழக்கமாக ரெயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்பும் ஷாருக் ஷைபி, பாட்டிலில் பெட்ரோல் எடுத்து சென்று, அதனை பயணிகள் மீது ஊற்றி தீவைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில்களில் இதுபோன்று யாராவது எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்து செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் பங்குகளில் இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனை மீறுவோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.
அரசின் இந்த உத்தரவு காரணமாக இனி இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் எங்காவது பெட்ரோல் தீர்ந்து விட்டால் பெட்ரோல் பங்க் வரை வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்றுதான் பெட்ரோல் வாங்க வேண்டும். பாட்டிலில் வாங்க சென்றால் அபராதத்திற்கு ஆளாவார்கள். இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20’ எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.
- வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த ‘காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.
சென்னை:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் - புதுச்சேரி மாநிலங்களுக்கான மண்டல தலைவர் வி.சி.அசோகன் சென்னையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, தமிழகம் மிக முக்கிய சந்தையாக உள்ளது. எங்கள் நிறுவனத்தால், கடந்த ஆண்டில் 10 சதவீதம் எத்தனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோலுடன், சேர்க்கப்பட்டுள்ளது. 2025 -க்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை தயாரிக்க அரசு ஆணைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம்.
தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20' எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது. வரும் மார்ச்சுக்குள் கூடுதலாக, 8 பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும்.
தமிழகத்தில் விரைவில் பல்வேறு திட்டங்களில் 54,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அதில், 35,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகையில் 1,300 ஏக்கரில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்தி கரிக்கும் திறனில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
அங்கு பி.எஸ். 4 திறனில் பெட்ரோல், டீசல், 'பாலி புரோப்லீன்' உற்பத்தி செய்யப்படும்.
விழுப்புரம், ஆசனூரில், 466 கோடி ரூபாயில் பெட்ரோல், டீசல் முனை யம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் வல்லூரில், 724 கோடி ரூபாயில் ஒரு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. எண்ணூர் துறைமுகத் தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் முனையம், 921 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.
வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த 'காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.
இவ்வாறு அவர்கூறினார்.
பேட்டியின் போது இந்தியன் ஆயிலின் தென் மண்டல, மண்டல சேவைகள் செயல் இயக்குனர் தனபாண்டியன், தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
- கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.
மும்பை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
ஆனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.
இதனால் இந்நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-23ம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது.
இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.
எண்ணெய் நிறுவனங்கள் 2 வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. அவை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகும். கச்சா எண்ணையின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணை நிறுவனங்களுடையது. மேலும் கச்சா எண்ணையை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
- இதில் தொடர்புடையதாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் (வயது 26) இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் வீட்டு கதவில் இருந்த திரைச் சேலை மட்டும் எரிந்து சாம்பலானது.
இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ேலும் இவ்வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு பாலாயி குடிகாடு பகுதியை சேர்ந்த கவிக்குமார் (வயது 26), பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த முரளிதரன் (வயது 28), ஏனாதி மேலத்தெரு பகுதியை சேர்ந்த ரெங்கநாத் (வயது 26) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் இதில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- என்னுடைய இடத்தை மீட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெட்ரோல் கேனை போலீசார் கண்டுபிடித்து அதனை பறித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது அம்மாபேட்டை அருகே உக்கடை ஊராட்சி வேளாளர் தெரு சேர்மன்நல்லூர் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (வயது 52) என்பவர் பெட்ரோல் கேனை மறைத்து வைத்துக் கொண்டு தனது மனைவி செல்வியுடன் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தார்.
பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு தங்கராசு, சரவணகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
மகன்கள் இருவரும் மாற்றுத்திறனாளி ஆவர்.
எனக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.
மேலும் அந்த நபர் வேலியை புல்டோசர் வைத்து இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே என்னுடைய இடத்தை மீட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மனு அளித்து வெளியே வரும்போது கலியபெருமாள் வைத்திருந்த பெட்ரோல் கேனை போலீசார் கண்டுபிடித்து அதனை பறித்தனர்.
பின்னர் அவரிடம் எதற்காக பெட்ரோல் கேன் கொண்டு வந்தார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
- நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த சில நாட்களாக திருமுல்லைவாயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இந்த பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் டேங்கிற்குள் தண்ணீர் கசிந்தது.
இதனை அறியாமல் வழக்கம் போல் வாகனங்களுக்கு ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பினர். சிறிது தூரம் சென்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றன.
தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்டதால் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.