search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pipal tree"

    • மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும்.
    • விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.

    ஞானப் பழத்திற்காக விநாயகரும், முருகப்பெருமானும் போட்டி போட்டபோது, 'இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்' என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.

    அந்த முடிவைக் கேட்ட முருகப்பெருமான், மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், 'பெற்றோரை சுற்றி வந்தால், உலகத்தைச் சுற்றியதற்கு சமம்' என்று கூறி, பழத்தைப் பெற்றுக்கொண்டார், விநாயகர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில், கனியை கையில் ஏந்தியிருக்கும் விநாயகரை நாம் தரிசிக்க முடியும்.

    இந்த விநாயகரை வழிபட்டால், மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும். போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற நினைப்பவர்கள், இந்த விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.

    வாழ்வை வளமாக்கும் அரச மரம்

    எத்தனை மரங்கள் இருந்தாலும், 'மரங்களின் அரசன்' என்று போற்றப்படுவது அரசமரம் தான். இந்த மரத்தில் மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்வதாக சொல்கிறார்கள். இந்த மரத்தை 'தேவலோகத்து மரம்' என்றும் வர்ணிப்பார்கள். இம்மரத்தைச் சுற்றி வலம் வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் அருள் நமக்குக் கிடைக்கும்.

    அக்னி பகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி அரச மரத்தில் புகுந்து கொண்டதால், இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன்படுத்துகிறோம். பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரச மரக் காற்றை நாம் சுவாசித்தால், ஆயுள் வளரும்; ஆரோக்கியம் சீராகும்.

    அரச இலைகளின் சல சலப்பு ஆலய மணி போல இருக்கும். அரச மரத்தடியில் விநாயகப்பெருமானையும், நாகராஜரையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். கனிவான வாழ்க்கை அமையும்.

    ×