search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "planting target"

    • பசுமை இயக்க திட்டத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக 2031-ம் ஆண்டிற்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • இதற்காக மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடப்பட இருக்கிறது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பசுமை இயக்க திட்டத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக 2031-ம் ஆண்டிற்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடப்பட இருக்கிறது. ஒவ்வொரு வனக்கோட்டத்திற்கும் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    4.29 லட்சம் மரக்கன்றுகள்

    அதன்படி சேலம் வனக்கோட்டத்திற்கு 4.29 லட்சம் மரக்கன்று ஆத்தூர் வனக்கோட்டத்திற்கு 5.39 லட்சம் என ெமாத்தம் மாவட்ட வனக்கோட்டத்திற்கு 9.68 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை, 20 இடங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இதில் மலை வேம்பு, தேக்கு, மகிழம், ஈட்டி, புளியம், மலைநெல்லி, கொய்யா, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இடம் பெற்றுள்ளன. அரசு சார்பில் ஒரு மரக்கன்று வளர்க்க 20 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது.

    ×