என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pledge"

    • நாடார் மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
    • தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.

    மதுரை

    நாடார் மகாஜன சங்கம், நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை மற்றும் நா.ம.ச. காமராஜ் தொழில்நுட்ப கல்லூரி பரிபாலன சபை ஆகிய சங்கங்களுக்கு செயற்குழு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மதுரை நாகமலை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் நடந்தது.

    இதில் நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டு மரங்களில் பல்வேறு வகை இருந்தாலும் அதில் பனைமரம் மட்டுமே மிகப்பெரிய புயல், மழையை யும் தாங்கி உறுதிப்பிடிப்பு டன் நிலைத்து நிற்கும் தன்மை உடையது. அதுபோலவே நாடார் மகாஜன சங்கமானது தனிச்சிறப்புடன், தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.

    நிகழ்ச்சிக்கு மதுரை வேளாண் உணவு வர்த்தக மைய தலைவர்

    மற்றும் மேலாண்மை இயக்குநர் ரத்தினவேலு, நீதிபதி வணங்காமுடி, சிவகாசி காளீஸ்வரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பி.செல்வராஜன், தூத்துக்குடி டைமண்ட் சீ புட்ஸ் நிர் வாக இயக்குநர் பால்பாண்டி, மதுரை

    கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நிறுவனர் தனுஷ்கரன் முன்னிலை வகித்தனர்.

    நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தலைவர் வி.எஸ்.பி.குருசாமி, பொரு ளாளர் ஏ.சி.சி.பாண்டியன், செயலாளர்(மேன்சன்கள்) மாரிமுத்து, செயலாளர் (அச்சகம்) கிப்ட்சன், செயலாளர் (பள்ளிகள்)ஐசக் முத்துராஜ், மண்டல செயலாளர்கள் சேகர் பாண்டியன், சுப்பிரம ணியன், கனகரத்தினம், ஈஸ்வரன், பிரபாகரன், முருகேசபாண்டியன் மற்றும் பலர் பேசினர்.

    இதில் நாடார் வெள்ளைச்சாமி கல்லூ ரியின் தலைவர் ஏ.எம்.எஸ். ஜி.அசோகன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் பொன்னு சாமி, செயலாளர் சுந்தர், பொருளாளர் நல்லதம்பி, இணைசெயலாளர் ஆனந்த குமார், காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி பரி பாலன சபையின் தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் வனராஜன், செயலாளர் சுரேந்திரகுமார், பொருளா ளர் வஞ்சிக்கோ, இணைச் செயலாளர் விவேகானந்தன் மற்றும் மாவட்ட, மாநக ராட்சி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • மாநகராட்சி ஆணையர் பவன்குமார் மாணவ மாணவிகளுக்கு புற்றுநோய் குறியீடு ரிப்பன் அணிவித்து துவக்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக மாநகராட்சி ஆணையர் பவன்குமார் மாணவ மாணவிகளுக்கு புற்றுநோய் குறியீடு ரிப்பன் அணிவித்து துவக்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், உலக புற்றுநோய் தினம் என்பது புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , அதைத் தடுக்கவும் , கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிக்கவும் பிப்ரவரி 4 அன்று குறிக்கப்படும் சர்வதேச நாளாகும் . புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்ட உலக புற்றுநோய் தினத்தில் பல முயற்சிகள் நடத்தப்படுகின்றன என்றார். மேலும் புற்றுநோய் சிகிச்சைக்கு உள்ளான பெண்களுக்கு தானம் செய்வதற்காக தன் தலைமுடியை வெட்டாமல் கடந்த சில மாதங்களாக இருக்கும் அலகு -2 மாணவன் அருள் குமார் மற்றும் ராஜபிரபு ஆகியோரை பாராட்டினார். பிறகு திருப்பூர் ெரயில் நிலைய உதவி மேலாளர் சங்கர் தலைமையில் ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிலையத்தில் உள்ள நடைபாதையில் மாணவர்கள் பேரணியாக புற்று நோய் இல்லா இந்தியாவை உருவாக்குவோம், புற்று நோய் வராமல் தடுப்போம் போன்ற கோஷங்களை எழுப்பி சென்றனர். பயணிகளுக்கு புற்று நோய் குறியீடு ரிப்பன் அணிவித்தும், புற்று நோயை எவ்வாறு தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வினையும் ஏற்படுத்தினார்கள். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ரெயில் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
    • அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.

    முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

    1 மற்றும் 2 வயதுடையோருக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுடையோருக்கு ஒரு மாத்திரையும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.

    இந்த மாத்திரைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி- கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் என்றார்.

    பின்னர், தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மாணவிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, வட்டார மருத்துவர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகள் ஆசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வனச்சரகத்தின் மூலம் ஆற்காட்டுதுறை மீனவர் கிராமத்தில், வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில், கடல் ஆமை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில்முனைவர் சிவகணேசன் கடலாமை முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர், நடேசன் ராஜா கடலோர காவல்துறை குழும போலீசார், ஆற்காட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள், முனைவர் அறிவு கிராம மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசியர்கள் மற்றும் வனத்துறையினர்கள் கலந்து கொண்டனர்.

    கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டார்.

    முடிவில் வனவர் ராமதாஸ் நன்றி கூறினர்.

    • ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    புகை பிடிக்காத தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் திருப்பூர் ரெயில் நிலையமும் இணைந்து ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், நிலைய துணை மேலாளார் (பொறுப்பு) மகேஸ்வரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதன்மை வணிக ஆய்வாளர் சரவணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசக குழு உறுப்பினர் சுரேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம், காமராஜ், பூபாலன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகை என் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, இதனால் அருகாமையில் இருப்பவர்க ளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்வேன் போன்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • சங்கரன்கோவில் நகராட்சியில் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மகளிர் குழு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்க உறுதிமொழி எடுக்கப்பட்டு ஊர் குளத்தை சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டனர். மேற்கண்ட பணிகளை நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சுந்தர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து, கருப்பசாமி, வெங்கட்ராமன், தூய்மை திட்ட பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் மகளிர் குழு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.
    • அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மதுரை

    அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ந்தேதியை சமத்துவ நாளாக கடைப்பிடிக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்க ளுடைய உரிமைகளுக்காக வும், ஒடுக்கப்பட்ட வர்களுடைய சமத்துவத் திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமை களை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியல மைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சகமனிதர்களிடம் சமத்து வத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், துணை ஆணையாளர்கள்முஜிபூர் ரகுமான், தயாநிதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசா லாட்சி, உதவி ஆணை யாளர் (பணி) ஆறுமுகம், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திருப்பூர்:

    அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூகஅடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடையஉரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள்எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தைஅமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின்பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம்சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது)விஜயராஜ், (நிலம்) துரை, தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.  

    • அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத்தந்த அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டா டப்படும் என்று அறிவித்து, சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய, அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதி மொழியை வாசித்தார். அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவ சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போலீசாரின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தென்பாகம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், புதூர், சங்கரலிங்கபுரம் மற்றும் குரும்பூர் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தென்பாகம் போலீஸ் நிலை யத்தில் இளைஞர்களிடமும், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சோட்டையன் தோப்பு பகுதியில் இளைஞர்களிடமும், முத்தையாபுரம்போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் எம். தங்கம்மாள்புரம் பகுதி பொதுமக்களிடமும், குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் குரும்பூர் சாமிநகர் பகுதி பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதேபோல் சங்கரலிங்க புரம் சப் -இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் சங்கரலிங்கபுரம் என். வேடப்பட்டி பகுதியில் பொதுமக்களிடமும், புதூர் சப் -இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் புதூர் பஜார் பகுதியில் பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த 'மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போலீசாரின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.'நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும், குழந்தைகளையும், மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்" என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் உட்பட அனைவரும் ஏற்று குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கு வோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • சாத்தான்குளம், எட்டயாபுரம் ஆகிய போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
    • குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி குரும்பூர், முத்தையாபுரம், தூத்துக்குடி வடபாகம், சாத்தான்குளம், எட்டயாபுரம் ஆகிய போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் குரும்பூர் பரதர் தெருவில் பொது மக்களிடமும், முத்தையா புரம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமை யிலான போலீசார் முத்தையாபுரம் பகுதி பொது மக்களிடமும், தூத்துக்குடி வடபாகம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யிலான போலீசார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் பொது மக்களிடமும், சாத்தான் குளம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் சாத்தான்குளம் சந்தோஷபுரம் பகுதி பொது மக்களிடமும், எட்டயாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அங்காள ஈஸ்வரி தலைமையிலான போலீசார் எட்டயாபுரம் ஆர்.சி தெரு பகுதி பொது மக்களிடமும் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்.ஓ.எஸ்.செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் போலீசார் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் .

    குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர்.

    • வருகிற 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    வேதாரண்யம்:

    உலக சுற்றுச்சூழல் தினம் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வருகிறது.

    இதனை யொட்டி நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அறிவுரையின்படி, முதற்கட்டமாக கோடியக்காட்டில் புயல் பாதுகாப்பு கட்டிட வளாகப்பகுதியில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமையில், கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் சுபா, வனவர்கள் சதீஷ்குமார், ராமதாஸ் மற்றும் வனத்துறை பணியாளர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

    தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் கூறுகையில்:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி விழிப்புணர்வு முகாமும், 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமும், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி கடற்கரை தூய்மை படுத்தும் பணியும், நிறைவாக 5-ந் தேதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×