search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police custody"

    தனது ஆதரவாளர்கள் அருந்தும் மதுவுக்கு மட்டும் தினமும் ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கருணாஸ் கூறியிருப்பதால் அவரது பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Karunas
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ், கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    இது தொடர்பான வீடியோ பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. துணை கமி‌ஷனர் அரவிந்தன் தனது சட்டையை கழற்றி விட்டு என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாரா? என்று கேள்வி எழுப்பிய கருணாஸ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே என்னை பார்த்து பயப்படுகிறார் என்றும் கூறினார்.

    நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும் அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன. முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்தவர்கள் கொலை செய்யவும் தயங்கக்கூடாது. பிக்னிக் செல்வது போல ஜெயிலுக்கு சென்று வாருங்கள். வழக்கு செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். மதுவுக்காக மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவாகிறது என்றும் பேசினார்.

    இதனை தொடர்ந்தே நேற்று முன்தினம் அதிகாலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், அடுத்த சில மணி நேரங்களிலேயே வேலூர் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். பாதுகாப்பு காரணங்களால் அவர் இடமாற்றம் செய்யபட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதன்படி எழும்பூர் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிடுவார். இதன் பின்னர் குறிப்பிட்ட நாளில் கோர்ட்டில் ஆஜராகும் அவரை போலீசார் காவலில் எடுக்க உள்ளனர்.


    கருணாஸ் பேசிய பேச்சுக்களை அடிப்படையாக வைத்தே போலீஸ் காவலில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாஸ் தனது பேச்சில் தினமும் மதுவுக்காக ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கூறியுள்ளார். இந்த பணம் எப்படி வருகிறது? எந்த அடிப்படையில் யாருக்கெல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை போலீசார் கேட்க உள்ளனர்.

    தி.நகர் துணை கமி‌ஷனராக இருக்கும் அரவிந்தன் பற்றி கருணாஸ் பேசியதும் கடும் விவாதப் பொருளானது. எதற்காக கருணாஸ் அப்படி பேசினார்? அவருடன் அப்படி என்ன பிரச்சனை? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    இது தொடர்பாகவும் போலீஸ் காவலில் கருணாசிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. அதே நேரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் விளக்கம் கேட்கப்படுகிறது.

    கருணாஸ் பேசிய பேச்சுக்கள், அவராகவே பேசியதா? என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    கருணாசின் அமைப்பான முக்குலத்தோர் புலிப்படையில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் தாமோதர கிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றியும் கருணாசிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாசை காவலில் எடுக்கும் போது, தாமோதர கிருஷ்ணன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். #Karunas

    கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில், 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை அறிவித்திருந்து.

    தொடர்ந்து மூன்று நாளாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறினார்.



    இதைத்தொடர்ந்து, சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோட்டயம் அழைத்துச் செல்லப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நீதிமன்ற விசாரணையின்போது, பிரான்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர். #MumbaiFire #CrystalTowerFire
    மும்பை:

    மும்பை பரேலில் உள்ள கிறிஸ்டல் டவர், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நேற்று முன்தினம் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    17 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்திற்கு மாநகராட்சியிடம் இருந்து பெற வேண்டிய அனுமதி சான்றிதழ்களை பெறாமல் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலா என்பவர் வீடு வாங்கிய 58 குடும்பத்தினரை குடியமர்த்தி இருக்கிறார்.

    இதுபற்றி அறிந்த மாநகராட்சி நிர்வாகம் 2016-ம் ஆண்டே குடியிருப்புவாசிகளை வெளியேற்றகோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஆனால் குடியிருப்புவாசிகள் கட்டிடத்தில் இருந்து காலி செய்யப்படவில்லை. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 4 பேரின் உயிரை பலி வாங்கி விட்டது. தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர்.

    நேற்று அவரை போய்வாடா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 27-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.  #MumbaiFire #CrystalTowerFire
    சிதம்பரம் அருகே வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்த ஷோபியாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷோபியா (வயது 32) பி.ஏ. பட்டதாரி. இவர் இந்திய உணவு கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறினார். பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 74 பேரிடம் ரூ. 3 கோடிக்கு மேல் வசூலித்தார். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டார். இவருக்கு உடந்தையாக இவரது தாய் ஆரோக்கியசெல்வி மற்றும் கடலூரில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

    இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் செம்மண்டலத்தில் தலைமறைவாக இருந்த ஷோபியாவை கைது செய்தனர். மேலும் ஆரோக்கியசெல்வி, ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஷோபியா மீது சின்னசேலம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்த லூர்துமேரி (வயது 50) என்பவர் ஒரு புகார் மனு அளித்தார்.

    அதில் எனது மகள், உறவினர் மற்றும் நண்பர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 4 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி எங்களிடம் ரூ.25 லட்சத்தை ஷோபியா வாங்கினார். அதற்கு போலி உத்தரவு நகலை கொடுத்தார். அப்போது நாங்கள் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. நாங்கள் கொடுத்த பணத்தை ஷோபியாவிடம் கேட்டபோது எங்களை ரவுடிகளை வைத்து மிரட்டினார். ஷோபியாவிடம் இருந்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    அதன்பேரில் ஷோபியா மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஷோபியா மீது பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் வேறு யாரிடமாவது இது போன்று அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஷோபியா பண மோசடியில் ஈடுபட்டாரா என்பதை கண்டறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சென்னையில் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் கைதான 17 குற்றவாளிகளை இன்று முதல் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. #chennaigirlharassment
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக, அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்த ரவிகுமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது தெரிய வந்தது.

    கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டனர். வருகிற 31-ந்தேதி வரை இவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    குற்றவாளிகளை உறுதி செய்வதற்கான அடையாள அணிவகுப்பு புழல் சிறையில் நேற்று நடந்தது. எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் ரோகித்துரை, கலைபொன்னி ஆகியோர் முன்னிலையில் இது நடைபெற்றது.

    கற்பழிப்பு குற்றவாளிகளுடன் அதே வயதுடைய வேறு குற்றவாளிகள் 10 பேரும் நிறுத்தப்பட்டனர். இதில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினாள்.

    இந்த நிலையில், குற்றவாளிகள் 17 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்ற மகளிர் நீதிமன்றம், கற்பழிப்பு குற்றவாளிகளை 5 நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

    இதையடுத்து, குற்றவாளிகள் 17 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். அவர்களிடம் இன்று முதல் 5 நாட்கள் விசாரணை நடத்துகிறார்கள். #chennaigirlharassment
    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தரகர் சோனு ஜலானின் போலீஸ் காவலை ஜூன் 6 வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #IPLbettingcase #KingpinbookieSonu
    மும்பை:

    சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து மராட்டிய மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சூதாட்ட தரகர் சோனு ஜலான் மற்றும் 3 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். 

    கைது செய்யப்பட்ட சூதாட்ட தரகர் சோனு ஜலானுக்கும், இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகின. இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி, தானே போலீசார், அர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பினர். இன்று அவர் போலீசார் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், பிடிபட்ட சோனு ஜலான் இன்று தானே நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சூதாட்ட வழக்கு ஜாமினில் விடுவிக்கப்படக்கூடிய குற்றப்பிரிவு சட்டத்தின்கீழ் வருவதால் சோனு ஜலானை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர், மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுக் கொண்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸ் தரப்பு வக்கீல், கைதான சோனு ஜலானுடன் தொடர்பில் இருக்கும் மேலும் சிலரை பற்றி விசாரிக்க வேண்டியுள்ளதால் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரினார். இதைதொடர்ந்து, தரகர் சோனு ஜலானின் போலீஸ் காவல் ஜூன் 6 வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #IPLbettingcase #KingpinbookieSonu 
    மகாராஷ்டிராவில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் போலீஸ் ஸ்டேசனில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #AccusedEscaped #PoliceCustody
    கோலாப்பூர்:

    மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஷாஹூவாடி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை மற்றும் வீட்டை உடைத்து திருடியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். 

    கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை மே 20-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, 4 பேரையும் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில், இன்று அதிகாலையில் போலீசார் சற்று கண் அயர்ந்த வேளையில், காவல் நிலைய லாக்கப்பில் இருந்து 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். லாக்கப் கதவின் கிரில் கம்பிகளை வளைத்து அதன் வழியாக வெளியேறி உள்ளனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாவட்ட எல்லைகள் உடனடியாக மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.  #AccusedEscaped #PoliceCustody
    ×