search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police spo"

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரி இன்று பத்திரமாக வீடு திரும்பினார். #Kashmir
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்தவர் முடாசீர் அகமது. இவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரி நேற்று இரவு பத்திரமாக வீடு திரும்பினார் என காஷ்மீர் எஸ் பி பானி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், போலீஸ் அதிகாரியை கடத்திய பயங்கரவாதிகளே அவரை விடுவித்து விட்டனர். அவரிடம் விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார். #kashmir
    ×