என் மலர்
நீங்கள் தேடியது "polling station"
- தஞ்சை மாநகரில் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது.
- முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று மத்திய மாவட்ட மாநகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.
மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உபயதுல்லா, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் மீண்டும் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 1-ந் தேதி மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கும் மற்றும் உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.
நவம்பர் 27-ந் தேதி உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் நிர்வாகிகளை கொண்டு முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது, உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்படி இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்து தஞ்சை மாநகரம் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஜித்து, மாநில பிரசார குழு உறுப்பினர் கார்குழலி, முன்னாள் எம்.பி. பரசுராமன், மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், மாநகர நிர்வாகிகள் துணை செயலாளர்கள் எழில், உஷா, காளையார் சரவணன், பகுதி செயலாளர்கள் சந்திரசேகர மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் சண்முகசுந்தரம், கமலாரவி, செந்தமிழ்செல்வன், மண்டல குழு தலைவர்கள் ரம்யாசரவணன், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்மாநகர துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
- ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்குச்சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது.
- ஒன்றிய பகுதிகளில் உயிர் நீத்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மேலவெளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சை வடக்கு ஒன்றிய தி.மு.க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் முன்னோடிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 27-ம் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒன்றியம் மற்றும் கிளை கழகங்களால் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் கிளை கழகங்களில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்குசாவடி முகவர்களை நியமிப்பது, ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்கு சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஒன்றிய பகுதிகளில் உயிர் நீர்த்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது .
இதில் ஒன்றிய குழு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மல்லிகா உத்திராபதி, ராமநாதன், பால துரையரசன், கோவி. ராஜேந்திரன், சதீஷ்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மோகன், ஸ்டாலின் ராஜன், செல்வ கலைமணி, ஒன்றிய பிரதிநிதி ஆற்காடு புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் கர்ணன் நன்றி கூறினார்.
- மதுைர தெற்கு மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
- இதில் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அவைத்தலை வர் நாகராஜன், துணை செயலாளர் லதாஅதியமான், ஒன்றிய செயலாளர்கள் திருமங்கலம் தனபாண்டி, கள்ளிக்குடி ராமமூர்த்தி, டி.கல்லுப்பட்டி நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேஷ் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், மாவட்ட கவுன்சிலர் ஜெயராஜ், ஒன்றிய அவைத்தலைவர் கப்பலூர் சந்திரன், நகர அவைத்தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
- 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் இம்மாத இறுதிக்குள் 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் செல்வகுமார் மற்றும் தேர்தல் பணி தொடர்பான துறை சார்ந்த அலுவலர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட வேண்டும்.
- வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் டிசம்பர் 19 பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது, வாக்குச் சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டியது மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், து.செல்வம், மாவட்ட பொருளாளர் எல். ஜி. அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணிய மூர்த்தி, கனகவள்ளி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தஞ்சை மாவட்டத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
- தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர் களாலும் தாசில்தார் அலுவலகங்களிலும் படிவம் 6பி-ல் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 20 லட்சத்து 37 ஆயிரத்து 651 வாக்காளர்களில் 13 லட்சத்து 5 ஆயிரத்து 947 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
பொதுமக்கள் வசதிக்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதே போல் அடுத்த மாதம் 5-ந் தேதியும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாட்களில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை தாசில்தார்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து வழங்கலாம்.
இவற்றின் மூலம் தங்களை செல்போன் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
- வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் நாளை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குவதையொட்டி முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பும் பணியை மும்முரமாக ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறனர். இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
- வாக்காளர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்கள் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களாலும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவம் 6B-இல் வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்கா–ளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 20,29,246 வாக்காளர்களில் 13,46,249 (66.34 சதவீதம்) வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
பொது மக்களின் வசதிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்று கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடாத பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது வருகிற மார்ச் 31-க்குள் நிறைவடைய உள்ளதால் பொது மக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறாத நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியர்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ தங்களது ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6B-இல் பூர்த்தி செய்து வழங்கிடலாம்.
வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் வாக்காளர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை e- EPIC ஆக தங்களது மொபைலிலேயே டவுன்லோடு செய்திடலாம் . தேர்தல் நடைபெறும் சமயம் வாக்காளர் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்களும் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் உள்ளவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமான குடிபெயர்வு, இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும் மற்றும் அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம். மேற்கூறியவாறு அனைத்து வகையான விண்ணப்பங்களையும் Voters Helpline மொபைல் ஆப் மூலமாகவும் NVSP Portal மூலமாகவும் வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 40 தொகுதியிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்போம்.
- தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
மண்டபம்
ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெற்ற தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசியதாவது:-
நடைபெறவுள்ள நாடா–ளுமன்ற தேர்தலில் நாற்ப–தும் நமதே, நாடும் நமதே என்ற அளவுக்கு அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி பயிற்சி பாசறை கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்த அனுமதி அளித்த முதல்-அமைச்சரும்,தி.மு.க. தலை வருமானமு.க.ஸ்டாலி னுக்கு நன்றி.
மன்னர்கள் காலத்தில் போர் பயிற்சி நடைபெற்ற இந்த இடத்தில் முகவர்க–ளுக்கு தேர்தல் என்னும் போரிலர் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள தேர்தல் போரில் தி.மு.க. வெல்வது உறுதி.
இவ்வாறு பேசினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-
தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதி கள் உள்பட தமிழகம், புதுச் சேரி உள்பட 40 தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. அந்த வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் ஒப்படைப்போம் என்று உறுதியளிக்கிறேன்.
தமிழக எம்.பி.க்களின் கொள்கை ரீதியான கருத் துக்களை எதிர்கொள்ள முடியாமல் பிரதமரும், பா.ஜனதாவினரும் தடுமாறி வருகின்றனர். இந்த தேர்தலுக்குப்பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் பேசி–னார்.
விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வடிவிலான வெண்கல சிலையை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நினைவு பரிசாக வழங்கினர். இதில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
- வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் கட்சி நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும்.
- சிவானந்தம், பிரவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகர தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் செயலாளர் ராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது. பகுதி செயலாளர் நடராஜன், சலீம், செயற்குழு உறுப்பினர் விக்ரமன், பொதுக்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யாத மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் கடலூர் மாநகரில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது. வருகின்ற அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் கட்சி நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும்.
வாக்கு சாவடி முகவர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்து மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றிட வேண்டும். கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் புதிய மார்க்கெட் கட்டிடம் மற்றும் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு மாநகர திமுக சார்பில் பெருந்திரளாக வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், அமைப்பு சாரா தொழிலாளர் அணி ஓ.எல். பெரியசாமி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாவட்ட பிரதிநிதிகள் ராமு, செல்வமணி, பொருளாளர் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆராமுது, சக்திவேல், இளைஞர் அணி மணிகண்டன், ஜெயமணி, ஜெயச்சந்திரன், குப்புராஜ், கோபி, மாநகர பிரதிநிதி சிவானந்தம், பிரவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2520 ஆக உயர்ந்துள்ளது.
- 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2024 -ன் திருத்தப்பணிகள் 1.6.2023 முதல் 16.10.2023 வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பணியான வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர்- முதன்மை செயலர் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்கு ச்சாவடிகளை உள்ளடக்கிய "வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல்" அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
அதன்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள், அவினாசியில் 313 வாக்குச்சாவடிகள், காங்கயத்தில் 295 வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள், உடுமலையில் 294 வாக்குச்சாவடிகள், மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ளன. எந்தமாற்றமும் இல்லை.
ஆனால் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 374 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 5 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் 379 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 410 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் 412 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளன.
அதன்படி 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 8 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் இது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து 21.8.2023 முதல் 27.8.2023 வரை கீழே குறிப்பிட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். பின்னர் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான கூட்டம் நடத்தப்படும்.
மேற்படி கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தி சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் , உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயராஜ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மக்களவை தேர்தலை யொட்டி தேனி மாவட்டத்தி ற்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார்.
- இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 31ந் தேதி வெளி யிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தேனி:
மக்களவை தேர்தலை யொட்டி தேனி மாவட்டத்தி ற்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது:-
மக்களவை தேர்தலையொ ட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் வாக்கு ச்சாவ டிகள் பகுப்பாய்வு செய்ய ப்பட்டன. இதில் ஆண்டி பட்டி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவ டிகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.
பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவ டிகளில் 7 வாக்குச்சாவடிகள் அமைவிடம், கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன. போடி சட்டப்பே ரவை தொகுதியில் உள்ள 315 வாக்குச்சாவடிகளில் 18 வாக்குச்சாடிகள் அமை விடம், கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
28 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன. வரைவு வாக்குச்சா வடி பட்டியல் கோட்டா ட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலக ங்கள், நகராட்சி அலுவலக ங்க ளில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ள்ளன.
வரைவு வாக்குச்சாவ டிகள் குறித்த சந்தேகங்கள், திருத்தங்கள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வருகிற 30ந் தேதிக்குள் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 31ந் தேதி வெளி யிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.