search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porur"

    போரூர் அடுத்த காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் மின்சார சுடுகாடு அருகே முட்புதரில் இருந்து பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
    போரூர்:

    போரூர் அடுத்த காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் மின்சார சுடுகாடு அருகே முட்புதரில் இருந்து நேற்று இரவு குழந்தையின் அழுகுரல் கேட்டது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸ்காரர் ரத்னகுமார் குழந்தையை மீட்டு சின்ன போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். பிறந்து 2 அல்லது 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர் அருகே சொகுசு டீக்கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
    போரூர்:

    போரூர் லட்சுமி நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவர் போரூரை அடுத்த ஐயப்பந்தாங்கலில் சொகுசு டீக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடையை ஊழியர்கள் பூட்டி சென்றனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் கடைக்குள் இருந்து கரும்புகை வந்தது. இதுபற்றி அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறை மற்றும் போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சிறிது நேத்தில் தீ மளமளவென கடை முழுவதும் பற்றியது. மேலும் கடைக்குள் இருந்த சிலிண்டரும் வெடித்தது. இதில் அருகில் இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கட்டிடத்தின் முன் பகுதிக்கும் தீ பரவியது. இதில் வங்கியின் பெயர் பலகை மற்றும் கண்ணாடிகள் எரிந்து சேதம் அடைந்தது.

    தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடைக்குள் இருந்த மைக்ரோ ஓவன், பிரிட்ஜ், டேபிள், சேர், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும். கடைக்குள் இருந்த பிரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கடையில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்ததால் அருகில் இருந்த வங்கி மற்றும் ஏ.டி.எம் மையத்திற்குள் தீ பரவுவது தடுக்கப்பட்டது. வங்கியில் தீப்பிடித்ததாக தகவல் பரவியதால் அப்போது ஏராளமானோர் திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. #Tamilnews
    போரூர் காரம்பாக்கத்தைச் சேர்ந்தவரிடம் நிலம் விற்பதாக கூறி ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    போரூர் காரம்பாக்கம் அருணாசலம் கார்டன் பகுதியில் உள்ள மசூதியில் பணியாற்றி வருபவர் அப்துல் கரீம் (வயது 67). இவர் மசூதிக்கு சொந்தமான இடம் மிக குறைந்த விலையில் தம்மிடம் விற்பனைக்கு உள்ளதாக பலரிடம் கூறி வந்தார்.

    இதை நம்பி மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையை சேர்ந்த டெய்லர் ஜாகீர்அகமது கடந்த 9-ந்தேதி ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை அப்துல்கரீமிடம் கொடுத்தார். ஆனால் அப்துல்கரீம் இதுவரை ஜாகிர் அகமதுவுக்கு இடத்தையும், கிரையம் செய்து தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

    இதுகுறித்து ஜாகிர்அகமது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து அப்துல்கரீமை கைது செய்தார். #Tamilnews

    ×