என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Principal"

    • கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு உதவியாற்ற மனிதனைப் போல் நான் உங்கள் முன் நிற்கிறேன்.
    • நீங்கள் ஒழுக்கத்தை மீறினால் நாங்கள் இனி உங்களை தண்டிக்க மாட்டோம், நாங்களே தண்டனை கொடுத்துக் கொள்வோம். தற்போது இந்தப் பள்ளியில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.

    ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் , பொப்பளி, பெண்டா கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சிந்தா ரமணா குஞ்சிலு வேலை செய்து வருகிறார். இவர் மாணவர்களிடையே நல்ல ஒழுக்கம் மற்றும் கல்வியை வழங்குவதற்காக பெரும்பாடு பட்டு வருகிறார்.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வருவதில்லை. இதனால் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி தவறான பாதையில் செல்வதாக உணர்ந்தார்.

    மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பி ஊக்குப்படுத்தினார். ஆனாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை.

    மாணவர்களின் பெற்றோர்களுக்கு நல்ல போதனை கூறும் வீடியோக்களை அனுப்பி அவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

    அவரின் முயற்சிகள் அனைத்தும் வீணாகி போனதால் விரக்தி அடைந்தார்.

    இந்த நிலையில் தலைமையாசிரியர் சிந்தா ரமணா குஞ்சிலு, நேற்று காலை மாணவர்களை பள்ளி வளாகத்திற்கு வரவழைத்தார்.

    அவர்கள் முன்பு தலைமை ஆசிரியர் சிந்தா ரமணா குஞ்சுலு தோப்புக்கரணம் போட்டார். தரையில் படுத்து கைகளை கூப்பி வணங்கினர். அப்போது மாணவர்கள் இனி தவறு செய்ய மாட்டோம் ஐயா என பலமுறை கூறினர்.

    மாணவர்கள் தவறு செய்தாலும் நாங்கள் கண்டிக்க முடியாது. எதுவும் செய்ய முடியாது. கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு உதவியாற்ற மனிதனைப் போல் நான் உங்கள் முன் நிற்கிறேன்.

    நீங்கள் ஒழுக்கத்தை மீறினால் நாங்கள் இனி உங்களை தண்டிக்க மாட்டோம், நாங்களே தண்டனை கொடுத்துக் கொள்வோம்.

    மாணவர்களிடையே கல்வி வராமல் போகலாம் ஆனால் பணிவு வரவேண்டும். குழந்தைகளுக்கு குறைந்தபட்ச கல்வி மற்றும் திறனை வளர்க்க நாங்கள் எங்களது பங்களிப்பை செய்து வருகிறோம்.

    சரியான பாதையில் வழி நடத்தி மாணவர்களை கல்வியை வழங்குவது என்னுடைய பொறுப்பு. கல்வி அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஆனால் நல்ல நடத்தை அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக சமூகம் அமைதியாக இருக்கும்.

    தற்போது இந்தப் பள்ளியில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. இது எனது மனதை வேதனைப்படுத்துகிறது என தெரிவித்தார்.

    தலைமையாசிரியர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பேசும் பொருளாக மாறியது.  

    • ராமநாதபுரம், கீழக்கரையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
    • குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தில் குடியரசு தினவிழா ஆணையாளர் சுரேந்திரன் தலைமையில் நடந்தது. நகரசபை தலைவர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து நகர சபை அலுவலக வளாகத்தில் உள்ள காத்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை தலைவர் பிரவின் தங்கம், கணக்காளர் பத்மநாபன், மேலாளர் நாகநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. யூனியன் தலைவர் பிரபாகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் துணை தலைவர் ராஜவேணி, ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது கொடியேற்றினார். நேர்முக உதவியாளர் பாலமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். மாணவ- மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் செய்தார்.

    கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த 74-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் சதக்கத்துல்லா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழா உறுதிமொழியை நுண்ணு யிரியல் துறை பேராசிரியை ஷோபனா முன்மொழிய, அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக் கொண்டனர்.

    பெரியப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அசன் அலி, முகமது களஞ்சியம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நல்லாசிரியர் முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.

    • திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.
    • தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் என்று மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தமிழக அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஏராளமான திட்டபணிகள் நடைபெற்று வருகிறது.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்-முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கூறியதாவது:- தாயுள்ளம் கொண்ட நமது தமிழக முதல்வர் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.

    மகளிர் முன்னேற்றத்தில்மிகவும் அக்கறையுடன் கட்டணமில்லா பஸ்பயணம், உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்குமாதம் ரூ.1000 திட்டம், வரும்பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், வீடுதேடிவரும்மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    இதுதவிர மாதந்தோறும் மாவட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி கள ஆய்வு பணி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நிறைவேற்றப்படாத வளர்ச்சி பணிகள் நமது மானாமதுரை தொகுதியில் இளையான்குடி பேரூராட்சிக்கு தற்போது ரூ.9 கோடி மதிப்பில் திட்டப்பணிகள், மானாமதுரை வைகை ஆற்றில் புதிய பாலம், நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள், உயர் நிலை-மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், புதிதாக நெல்கொள்முதல் நிலையங்கள், மானாமதுரையில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல், செல்லப்பனேந்தல் இடையே வைகைஆற்றில் புதிய பாலம், மானாமதுரை வைகைஆற்றில் குடிநீர்திட்டத்திற்காக தடுப்பணைகள், கிராமங்கள் முழுவதும் புதிதாக பஸ் வசதி, மானாமதுரையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மையம்,சொட்டதட்டி- பனையூர் சுற்றுசாலை திட்டம், தற்போது உலகமே வியக்கும் கீழடி, கொந்தகை, மணலூர்அகழ்வாராய்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு இன்று ரூ.18 கோடி மதிப்பீட்டில் தமிழக செட்டிநாடு கலையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும், அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பல அரிய பொருட்களை தமிழக மக்கள் எளிதாக பார்த்து பயன் அடையும் வகையில் எதிர்கால நமது தலைமுறைக்காக கீழடியில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தை தாயுள்ளம் படைத்த நமது தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு பெருமை ஆகும்.

    மதுரை-ராமேசுவரம் சாலையில் இருந்து எளிதாக கீழடிஅருங்காட்சியகம் வருவதற்காக புதிய சர்வீஸ் சாலை மற்றும் சாலையை கடக்க நடைபாலம் அமைக்கவும், சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் 10-ம்வகுப்பில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை சேர்க்க மறுப்பதுடன், வேறு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை தர இயலாது என தலைமையாசிரியர் கூறியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால் தலைமையாசிரியரை மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிபர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள லாங் சிங் டே சீனாவுக்கு எதிரான கொள்கையினை கொண்டவர்.

    தைபே:

    கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான தைவானில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சி வெற்றி பெற்று லாங் சிங் டே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் அவர் கூட்டணி கட்சி ஆதரவுடன் தைவானின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அதிபர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது. தங்கள் நாட்டை தனி நாடாக நிலை நிறுத்துவதில் தைவான் உறுதியாக உள்ளது.1996- ம் ஆண்டு முதல் தைவானில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள லாங் சிங் டே சீனாவுக்கு எதிரான கொள்கையினை கொண்டனர். இவர் அதிபரானது சீனாவுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. இவரை ஆபத்தான பிரிவினைவாதி என சீனா குற்றம் சாட்டி உள்ளது.

    • ப்ரின்சிபல் மாணவரிடம் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பாக்கியுள்ளது என கூறியுள்ளார்.
    • இது தொடர்பாக மாணவன் மற்றும் பள்ளி ப்ரின்சிபல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் இயங்கி வரும் சிபிஎஸ் தனியார் பள்ளி கஞ்ச் மில் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பில் பயின்று வந்த மாணவன் தேர்வில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது.

    தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட மாணவன் முடிவு செய்தான். அதன்படி பள்ளிக்கு சென்ற மாணவன் தனக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளான். அப்போது பள்ளியின் ப்ரின்சிபல் மாணவரிடம் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பாக்கியுள்ளது என கூறியுள்ளார்.

    மேலும் கட்டண பாக்கியை செலுத்தியதும் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக மாணவன் மற்றும் பள்ளி ப்ரின்சிபல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, பள்ளியின் ப்ரின்சிபல் மற்றும் மேலும் இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து கொண்டு மாணவனை கடுமையாக தாக்கினர்.

    தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளான மாணவன் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆசிரியர்களை தள்ளி விட்டுள்ளான். பள்ளியில் இருதரப்பும் மோதிக் கொண்ட விவகாரம் காவல் நிலையம் சென்றடைந்தது. இடையே ஆசிரியர்களால் தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, காவல் நிலையத்தில் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தான்.

    இதே போன்று பள்ளி ப்ரின்சிபல் தரப்பிலும் மாணவன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஹஜிரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ளனர். 


    • மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
    • பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூறினார்கள்.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைச் சேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார்.

    கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ-மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றார். அங்கு முதல் நாள் போட்டி முடியாததால் மறுநாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் இரவில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். அப்போது, பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. அதாவது, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

    இதுபற்றி அறிந்த குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி சிதம்பரநாதன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் பாலசுந்தரம், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி நிர்வாகம், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, பெற்றோர் கூறுகையில், உடற்கல்வி ஆசிரியரை கைது செய்ய வேண்டும். பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதுதொடர்பாக துணை சூப்பிரண்டிடம், பெற்றோர்கள் புகார் செய்தனா். அதன்பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கோவையில் பதுங்கிய இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் நேற்று இரவில் கைது செய்து திருச்செந்துர் அழைத்து வந்ததனர்.

    இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
    • மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம்

    ராஜஸ்தான் அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒரு பெண் ஆசிரியையுடன் பள்ளியில் உள்ள தனது அலுவலக அறைக்குள் தகாத செயலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சலேரா கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர், பலமுறை அந்த பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.

    மற்றுமொரு காணொளியில், அதிபர் பாடசாலையில் தனது மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம். இந்த வீடியோக்கள் பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியரின் தகாத நடத்தைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

     

    இந்த சம்பவம் குறித்து பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா, "முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியை இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்  

    • ஆனால் இதை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றுள்ளது.
    • இதனை சிறுமி வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் 7 ஆம் வகுப்பு மாணவியை உடன் படிக்கும் சக மாணவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் டவுண்ட் டெசில் [Daund Tehsil] பகுதியில் செயல்பட்டுவரும் செயின்ட். செபாஸ்டின் ஆங்கில வழி தனியார் பள்ளியில் 2 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 7 ஆம் வகுப்பு மாணவன் அவனது ரிப்ரோட் கார்டில் திருட்டுத்தனமாகப் பெற்றோரின் கையெழுத்தை போடுவதை அதே வகுப்பில் படிக்கும் சிறுமி பார்த்துள்ளார். இதனை சிறுமி வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய சொல்லி 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனிடம் அதற்கு கட்டணமாக 100 ரூபாய் கொடுத்துள்ளான். ஆனால் அந்த மூத்த மாணவன் இந்த திட்டத்தை பள்ளி நிர்வாகத்திடம் சென்று சொல்லியுள்ளான்.

    விஷயம் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் பல முறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

    ஆனால் இதை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றுள்ளது. சிறுவனை கண்டித்து அனுப்பிவிட்டோம் என பூசி முழுகியுள்ளது. இதனால் பெற்றோர் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி போலீசிடம் சென்றுள்ளனர். நீண்ட தாமதத்திற்கு பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை[ஜனவரி 26] போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர்.

    சிறார் நீதிச் சட்டம் பிரிவு 75 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் விஷயத்தை மறைக்க முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலைக்கு திட்டம் தீட்டிய சிறுவனுக்கு இன்னும் 12 வயது ஆகாததாலும், சிறார் நீதிச் சட்டம், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையை அனுமதிக்காததாலும் அவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

    • கழிவறைக்குள் வைத்து பூட்டுவேன் என பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய நபர்.
    • சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடுத்து நடவடிக்கை.

     பல்லியா:

    உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.

    அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்வதும், ஒரு நபர் அவர்களை திட்டுவதும் இடம் பெற்றுள்ளது. சொன்னபடி செய்யா விட்டால் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டுவது அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அந்த பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி மணிராம் சிங், சோஹான் பிளாக்கில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த வீடியோ பதிவு நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக அந்த பகுதி கல்வி அதிகாரி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மிருத்யுஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றும் கூறினார். தலைமையாசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    ×