search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private worker suicide"

    ஆண்டிப்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை குமணன் தொழுவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 28). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பார்த்திபனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால்குமணன் தொழுவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே அன்னை இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் மனைவி நித்யா (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த நித்யா தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் பார்த்து தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிசிச்சை பலனின்றி நித்யா உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×