search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prodhosa"

    பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம், ஆராதனை. சிறப்புயாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பல்லடம், ஏப்.4-

    சிவன் கோவில்களில் பிரதோ ஷ தினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவதுவழக்கம். சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவி லுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும்என முன்னோர்கள் கூறுகின்றனர். அதன்படி பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம், ஆராதனை. சிறப்புயாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதே போல பல்லடம் அருகே உள்ள சித்த ம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடை பெற்றது. காமாட்சி புரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். அதே போல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    ×