என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Project works"

    • தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.
    • கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர்கள், யூனியன் சேர்மன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.

    அதில் கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல், கீழக்கலங்கல் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்குதல், பொது பயன்பாட்டிற்கு நீர் பிடிப்பு பகுதியை வழங்குதல், ஊத்துமலை ஊராட்சியில் புதிய தண்ணீர் தொட்டி வழங்குதல், ஆலங்குளம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 ஊர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை வழங்குதல், வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு திருஉருவச் சிலை எழுப்புதல், குற்றாலம் செண்பகா தேவி அருவிக்கு மேல் அணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

    அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, தென்காசி தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல், தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் என பலர் உடன் இருந்தனர்.


    • சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து ரூ.59.70 லட்சம் மதிப்பீட்டில் 1,2,8,9,10,11 ஆகிய வார்டுகளில் வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி, பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் நெற்குப்பை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையினை எதிர்நோக்கி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வு அறை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, திருப்பத்தூர்-காரைக்குடி ரோடு வார்டு 10ல் கைவண்டி மூலம் முதல்நிலை சேகரம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ம் ஆண்டின் கீழ் ரூ.195 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் தென்மாபட்டு பகுதியில், தூய்மை பாரத திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிடம், புதுப்பட்டி வார்டு2-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் மருதாண்டி ஊரணியில் ரூ.53.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாதை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சித் தலைவர்கள் கோகிலாராணி (திருப்பத்தூர்), புசலான் (நெற்குப்பை), அம்பலமுத்து (சிங்கம்புணரி), உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பேரூராட்சி துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
    • சிவபத்பநாதன் கலந்து கொண்டு ஊரணியை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்கு உட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    யூனியன் சேர்மன் செல்லம்மாள், துணைச் சேர்மனும் ஒன்றிய செயலாள ருமான மகேஷ் மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாதன் கலந்து கொண்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டேறிப் பட்டி ஊரணியை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் கிளைச் செயலாளர்கள் சமுத்திரப் பாண்டியன், செல்வராஜ், ராஜேந்திரன், ஆத்தி செல்வன், முருகன், கலைச் செல்வன், ராமசாமி, ஞானகுமார், ஜெயராஜ் ஆறுமுகநயினார், வார்டு உறுப்பினர்கள் புஷ்பம், பரமேஸ்வரி, ஊராட்சி செயலர் கதிரேசன், மற்றும் நடராஜன், தேன்ராஜ், சபரிராம் ராஜ், நவீன் கிருஷ்ணன், தங்கராஜ், ரத்தினம், ரேவதி, முத்து விஜயன், முப்புடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

    பாளை தியாகராஜநகர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    12-வது வார்டு கவுன்சிலரும், பணி நியமன குழு உறுப்பின ருமான கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில் திலக் நகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 12- வது வார்டுக்கு உட்பட்ட சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. எனவே உடனடியாக அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • அத்தியூர் ஊராட்சியில் திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெறுகிறது

    அகரம்சீகூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் உள்ளாட்சி நிதியிலிருந்து ரூ.55.32 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் துவக்கி வைத்தார்கள். அத்தியூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும், அத்தியூர் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், பெண்ணகோணம் ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், திருமாந்துரை ஊராட்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தார்சாலை பணிகளையும், ஊராட்சி பொது நிதியிலிருந்து அத்தியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.5.32 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும், திருமாந்துரை, நோவா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப் பையன், செல்வகுமார் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருதத்தூர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒகளூர் அன்பழகன், கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், பெண்ணகோணம் ஜெயலட்சுமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பெரு கருப்பையா, பழனிவேல், ஆண்டாள் குடியரசு , மாவட்ட விவசாய தொழிலாளர் அமைப்பாளர் புகழேந்தி, அத்தியூர் கிளைச் செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா முன்னிலை வகித்தார்.

    புதுப்பாளையம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னி, பாரதிதாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராயர், உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் தீர்மானங்களை அலுவலர் ரவி வாசித்தார்.

    • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத்தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் ராயகிரி பேரூராட்சியில் நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் 6, 7 -வது வார்டுகளில் காந்தி தெரு, பவுண்டு தொழு தென்வடல் தெரு, 8-வது வார்டில் சிவகாமி அம்மையார் தெரு, காமராஜர் வீதி, கிணற்று தெரு, 10-வது வார்டில் வடக்கு மாரியம்மன் கோவில் தெரு, மண்டபம் தெரு, நடுத்தெரு, 11-வது வார்டு மண்டபம் தெரு, 12-வது வார்டு தெற்கு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களில் பேவர்பிளாக் கல் பதித்தல் மற்றும் வாறுகால் அமைத்தல் போன்ற திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத்தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குறிஞ்சி மகேஷ், செயல் அலுவலர் சுதா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராயகிரி நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் விவேகானந்தன், தி.மு.க. வார்டு செயலாளர்கள் சின்ன மாடசாமி, செல்வராஜ், தங்கவேலு, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சேவகபாண்டியன், காளியப்பன், சின்னத்தாய், தங்கத்துரை, சிவன், பாண்டி, தமிழ்ச்செல்வி, பராசக்தி, கலைச்செல்வி, பேச்சியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி, வத்திராயிருப்பு யூனியன்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரிச்சநத்தம் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிட்டங்கி யை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் நியாயவிலை கடையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.31.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதே கிராமத்தில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக ளையும், கோவிந்தநல்லூர் ஊராட்சி ருத்திரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.24.900 லட்சம் மதிப்பீட்டில், வரத்து கால்வாயில் உறிஞ்சி குழி அமைக்கப்பட்ட பணியை யும், 100 நாள் வேலை திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.மூவரை வென்றான் ஊராட்சி இந்திரா காலனியில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும், வடுகப்பட்டி ஊராட்சி களத்தூர் கிராமத்தில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.995 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பணியையும், குன்னூர் ஊராட்சியில்

    15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மைய கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.1.570 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.25 ஆயிரம் மதிப்பில் கால்நடை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்ட பணியையும், ரூ.30 ஆயிரம் மதிப்பில் வட்டார நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, வேளா ண்மைத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் உமா மகே சுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • கொல்லங்கிணறு ஊராட்சியில்பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, உயர்நிலை பள்ளியில் பெண்கள் கழிவறை, மந்திகுளம் ஊரணியில் தடுப்புச்சுவர், வாறுகால் மற்றும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் செலவில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், லதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை கலெக்டர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
    • நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியன் கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அதே பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும், நடுக்கல்லூரில் இயங்கி வரும் வாழை நாரில் இருந்து கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் கூடத்தையும் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கொண்டா நகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம், கோடகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் ஆய்வு செய்தார். கமுதி அருகே உள்ள டி.புனவாசல் கிராமத்தில் அங்கன்வாடி மையம், வல்லந்தை ஊராட்சியில் பஞ்சாப் மாநில விவசாயி மன்மோகன் சிங்கின் விவசாயத் தோட்டம், கண்மாயில் குடிநீர் சுத்திகரிப்பு பணி, அபிராமம் பேரூராட்சியில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிட பணிகள், பேரையூர் சுகாதார ஆரம்ப நிலைய கட்டிடப்பணிகள், புல்வாய்க்குளம் ஊராட்சியில் நடைபெறும் சமுதாயக் கூட கட்டிடப் பணி, பேரையூர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மருத்துவம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலை, வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார்(வளர்ச்சி), உதவி ஆட்சியர் நாராயணன் சர்மா (பயிற்சி) மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசுவாபதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஊராட்சித் தலைவர்கள் அழகர்சாமி, தேவதி, மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×