search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prostitution gang"

    நாகர்கோவிலில் தனது மகள் விபசார கும்பலிடம் சிக்கியதாக அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தாயார் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் எனது மகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடத்தினோம். ஆனால் எனது மகள் திடீரென திருமணம் வேண்டாம் என கூறி விட்டு எங்கள் வீட்டில் இருந்து வெளியேறி விட்டாள். தற்போது அவள் விபசார கும்பலின் பிடியில் சிக்கி உள்ளார். அவரை மீட்டு என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    மேலும் அவரது மகள் சில வாலிபர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் மனுவுடன் சேர்த்து கொடுத்திருந்தார். அந்த மனுவில் கல்லூரி மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை ஒரு கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், அந்த கும்பலிடம் தான் தனது மகள் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

    இதனால் இந்த புகார் குறித்து விரைந்து விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு, அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி அதிரடி விசாரணையில் இறங்கினார்.

    மாணவி தங்கியிருக்கும் அவரது உறவினர் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த மாணவி, தாயார் அளித்த புகாரை மறுத்ததோடு, தாயார் பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.

    எனது தாயாருக்கும், எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு உள்ளது. அவர்கள் சந்தோ‌ஷமாக இருக்க என்னை பகடை காயாக்க முயல்கிறார்கள். எனது தாயாரும், ஆட்டோ டிரைவரும் உல்லாசமாக இருப்பதை நானே பல தடவை நேரில் பார்த்துள்ளேன்.

    எனவே தான் திருமணம் வேண்டாம் என்று கூறினேன். அவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கவே எனது உறவினர் வீட்டிற்கு வந்தேன். ஆனால் என் தாயாரும், அவரது கள்ளக்காதலன் குடும்பத்தினரும் என்னை அவர்கள் வழிக்கு கொண்டு வர அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள்.

    எனது தாயார் கூறும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது வேண்டுமென்றே கூறப்பட்ட பொய் புகார். நான் என் தாயாருடன் செல்லமாட்டேன்.

    நான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தேன். அவருடன் சேர்ந்து சில புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அந்த புகைப்படங்கள் என் செல்போனில் இருந்தது. அந்த படங்களைதான் என் தாயார் ஆபாச படங்கள் என்று கூறி கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மாணவி அவரது தாயார் பற்றி இதே புகாரை தெரிவித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார், மாணவியை தாயாரிடம் இருந்து பிரித்து உறவுப்பெண்ணுடன் அனுப்பி வைத்திருந்தனர். இந்தநிலையில் மாணவி விபசார கும்பலிடம் சிக்கி இருப்பதாக அவரது தாயார் தெரிவித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவியின் தாயார் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண் ஆகியோரிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது மாணவியுடன் வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.#tamilnews
    ×