search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest speech"

    • மக்கள் முன்னணி சார்பில் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
    • மணிப்பூர் கலவரக்காரர்களை கண்டித்தும், துணை போகும் பா.ஜ.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி கொடுமை செய்த மணிப்பூர் கலவரக்காரர்களை கண்டித்தும், துணை போகும் பா.ஜ.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் பழங்குடி மக்கள் முன்னணி சார்பில் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழங்குடி மக்கள் முன்னணி செயலாளர் சுள்ளியம்மாள் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏழுமலை வரவேற்றார். கன்னியப்பன், கணேசன், சந்தானம், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர் சுடரொளி சுந்தரம், ம.தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் மணி, சட்ட ஆலோசகர் வெற்றிச்செல்வன், காங்கிரஸ் செஞ்சி நகர தலைவர் சூரியமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் துரை திருநாவுக்கரசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சையத் உஸ்மான், அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மழை மேடை பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் நன்மாறன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர். முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்.

    ×