என் மலர்
நீங்கள் தேடியது "public meeting"
- சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.
- கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நலத்திட்ட உதவிகள்
நகர செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :-
சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்திரன் என பலர் கட்சி ஆரம்பித்தும் காணவில்லை. விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க. தேய்ந்து விட்டது. ஆனால் என்றைக்கும் நம்பர் 1 கட்சியாக நிலைத்து நிற்கும் கட்சி அ.தி.மு.க. தான்.
நம்பர் 1 கட்சி
அ.தி.மு.க இன்றைக்கு எதிர்கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்கள் உள்ளங்களில் ஆளும் கட்சி. அ.தி.மு.க.விற்கும் 3 எழுத்துக்கும் ஒரு ராசி உண்டு. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு 3 எழுத்து, இப்போது இ.பி.எஸ்.க்கும் 3 எழுத்து. இன்னொரு வருக்கும் 3 எழுத்து தான் ஓ.பி.எஸ். ஆனால் அவருக்கு முதல் எழுத்து பூஜ்யம் என்பதால் அவர் கணக்கில் வரமாட்டார்.
அ.தி.மு.க.வில் இன்றைக்குள்ள நிலை போன்று 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி வரும். ஆனால் எழுச்சியுடன் வெற்றி பெறும். கட்சி கொடி, சின்னம் எங்களிடம் உள்ளது. நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க.வில் தெளிவு ஏற்பட்டு 3-வது அத்தியாயமாக எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக வருவார்.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும். தி.மு.க. ஆட்சியில் ஒரு நல்லதிட்டம் கூட வரவில்லை. நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 40-க்கு 40 அளித்தால் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
- ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி அன்று மாலை 6மணியளவில் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் வாலிபாளையம் யூனியன் மில் சாலை ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா சிறப்புரையாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 3-ந்தேதி இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்ற தலைப்பில் தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீடு வீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கவுள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும், நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டை மீறி அமைச்சர்கள் செயல்படுகின்றனர் என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
- சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது.
கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாட்டின் காவல் துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் தன்னை மீறி பேசுகின்ற எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்று விடுகிறார்கள் என்று அச்சப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் கருணாகரன், தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டீபன், சேவியர், சிவாஜி, கோபி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.
- பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தென்காசி:
ஜம்புநதி-ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்த உண்மை நிலை விளக்க பொதுக்கூட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
கூட்டத்திற்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனிதுரை தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது ஜம்பு நதி, ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் அவசரமாக தொடங்கப்பட்டு முறையான வனத்துறை அனுமதி உள்ளிட்டவை பெறாமல் பெயரளவிற்கு தொடங்கப்பட்டது. அதனை தற்பொழுது தி.மு.க.ஆட்சியில் முழுமையாக கொண்டு வருவதற்கும், இரட்டைக் குளம் கால்வாய் திட்டப் பணியையும் உரிய முறையில் மேற்கொண்டு விவசாயிகள் பயனடையும் வகையில் அனைத்து பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா, ராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் இணைப்பு குழு அமைப்பாளர் ராம உதயசூரியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஜேசுராஜன், முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன், அழகு சுந்தரம், ரவிசங்கர், திவான் ஒலி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பி.எம்.எஸ்.ராஜன், சுந்தர்ராஜன், சின்னத்தாய், வேணி, சுதா மோகன்லால், தொழிலதிபர்ஆர்.கே.காளிதாசன், சிவ அருணன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
- ஆலோசனை கூட்டம் உடுமலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
உடுமலை :
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வுக்கு உட்பட்ட தாராபுரம் குண்டடத்தில் வருகிற 11-ந் தேதி அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் உடுமலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் மடத்துக்குளம், தாராபுரம் பகுதியில் இருந்து நகரச் செயலாளர்கள், ஒன்றியசெயலாளர்கள்,சார்பு அணிநிர்வாகிகள்சார்பு அணிநிர்வாகிகள்உட்பட ஏராளமானோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
- புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.
- பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னங்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள்.
சீர்காழி:
சீர்காழி தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பாக புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் முஹம்மது இத்ரீஸ் தலைமை வகித்தார்.
மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், பஞ்சு குமார், மலர்விழி திருமாவளவன், நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், ஜி.என்.ரவி, மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் முருகன், முத்து குபேரன், செல்வமுத்துக்குமார், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொருப்பாளர் ஸ்ரீதர், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னை மரக்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- அரியலூரில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்
- கூட்டத்தில் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.இ.அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- சங்கரன்கோவிலில் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25-ந் தேதி சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு உள்ள கலைஞர் திடலில் வைத்து நடைபெறுகிறது.
- இதில் டாக்டர் கனிமொழி, சோமு எம்.பி. மற்றும் தூத்துக்குடி இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் வருகிற 25-ந் தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கைளில் கூறியிருப்பதாவது, முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க சங்கரன்கோவிலில் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25-ந் தேதி சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு உள்ள கலைஞர் திடலில் வைத்து நடைபெறுகிறது. இதில் டாக்டர் கனிமொழி, சோமு எம்.பி. மற்றும் தூத்துக்குடி இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் தியாகத்தை போற்றுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
- சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக் கூட்டம் உள்ளிட்டவை நடத்த விரும்புவோர் முறையாக 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.
திருமணம், இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட இன்றியமையாத நிகழ்ச்சிகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சீனியர் அமைச்சர்களை பின்னுக்கு தள்ளிவிட்டார் உதயநிதி என்று பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
- ஒருமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்றார்.
மதுரை
மதுரை ஜீவா நகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-
எம்.ஜி.ஆர் 36 ஆண்டுகள் முன்பு மறைந்தாலும் அவர் பெயரை சொல்லாமல் தமிழகத்தில் யாராலும் அரசியல் நடத்த முடிய வில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என்று கூறிதான் அரசியல் பேச வேண்டி உள்ளது.தமிழகத்தில் யாராக இருந்தாலும் அரசியல் செய்ய எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தியே ஆக வேண்டும். நல்ல நல்ல கருத்துக்களை தன் திரைப்படம் மூலம் எடுத்து சொன்னவர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்தார் என்று சொன்னால் கிராமத்தில் இப்போதும் கூட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
யாரும் நடிகர் விஜயோட வாரிசு என சொல்லி விடாதீர்கள். நாம் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசு. அரிதாரம் பூசியவன், நடிகன் என எம்.ஜி.ஆரை கேலி பேசினாலும் கேலி பேசியவர் குடும்பத்தையும் வாழ வைத்தார். அரசியலில் தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்தாதவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெய லலிதா வும். கோட்டை பக்கமே உறவுகளை வரவிடாமல் செய்தவர்கள் அவர்கள். ஆனால் கலைஞர் குடும்ப ஆட்சி நடத்தியவர். மக்களை தான் தன் வாரிசுகளாக எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் நினைத்தனர்.
ஜெயலலிதா போல உத்திரபிரதேச முதல்வர் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக சொன்னார். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை.
ஜெயலலிதா மந்திரி சபையில் 3-வது, 6-வது இடத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும் வகையில் 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை நடத்தி காட்டினார். பொய் மூட்டை களை சட்ட மன்றத்தி லும், பொதுக் கூட்டத்திலும் அவிழ்த்து விடுகிறார்கள் தி.மு.க.வினர்.
தி.மு.க. அரசில் 35 பேர் அமைச்சர்களாக இருந்தாலும் 10-வது அமைச்சராக உதயநிதி உள்ளார். சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டார் அவர். நிதி அமைச்சர் கூட 27-வது இடத்தில் தான் இருக்கிறார்.என்மகனோ, உறவுகளோ கட்சிக்கும் ஆட்சிக்கும் வரமாட்டார்கள் என சொன்னவர் ஸ்டாலின். அதேபோல கட்சியில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் எப்படி அமைச்சராக முடியும் என்று பேசியவர் உதயநிதி.
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசினால் சந்தி சிரிக்கிறது.தமிழக மக்களை ஏமாற்றி, பொய், புரட்டை சொல்லி எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படியெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர் தி.மு.க. அமைச்சர்கள். இவர்கள் ஏமாற்றுவதை எங்கே போய் சொல்வது.
தீராத விளையாட்டு பிள்ளை உதயநிதி எப்போது கையில் செங்கலை தூக்கி னாரோ அன்றில் இருந்தே செங்கல் விலையும் உயர்ந்து விட்டது. போதைப்பொருள் கடத்தல் மாநிலமாக தி.மு.க.வினர் தமிழகத்தை மாற்றிவிட்டார்கள்.
மதுரையில் இப்போது 2 அமைச்சர்கள் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை.வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை நிகழ்த்தி சட்டமன்றத்தில் கரும்புள்ளி ஏற்படுத்திய தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் காலம் மிக விரைவில் வர உள்ளது.
ஒருமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதை மக்கள் நிறைவேற்றுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார்.
- ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி, ஒன்றிய பொருளாளர் தங்கப்பாண்டி ஆகியோர் வரவேற்றனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் திருப்பதி, டாக்டர் சரவணன், எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞரணி தண்டபாணி, நகர இளைஞரணி கேபிள் மணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சிவா ஆகியோர் பேசினர். இதில் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மேற்கு ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய, நக,ர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவர் அணி டாக்டர் கருப்பையா நன்றி கூறினார்.