search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.
    • ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பையாஸ் பகுதியில் உள்ள மின் விளக்குகள் ஒரு வாரமாக எரியாததால் அப்பகுதி இருட்டாக காணப்படுகிறது.

    சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.

    சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும் அங்கு பஸ்சுக்கு குடும்பமாக, குழந்தைகளுடன் நிற்கின்றனர். போதை ஆசாமிகள் அவர்கள் வெளியூர் ஆட்கள் என தெரிந்து கொண்டு, அவர்களிம் மது அருந்த பணம் கேட்பதாகவும், ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாமல்லபுரம் இ.சி.ஆர் மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையால், பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.
    • பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அவ்வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கணபதி நகர் மற்றும் செட்டிபாளையம் ரோடு பொதுமக்கள், எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து அளித்த மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது; - பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையால், பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.

    பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அந்த வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிப்படுகின்றது. எனவே அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.மேலும் மது கடையை அகற்றக்கோரி வரும் ஆகஸ்ட் 8ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    எனவே அந்த மதுபான கடையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் இன்று 4-வது நாளாக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.
    • பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், எண் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த 28-ந்தேதி ராமேசு வரத்தில் தொடங்கினார். அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    3-வது நாளான நேற்று முதுகுளத்தூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள தேவர் சிலைக்கும், வீரன்சுந்தர லிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருஉத்திரகோசமங்கை கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் பிரசார வேனில் அண்ணாமலை சிறிது தூரம் சென்றார். அப்போது பொதுமக்களிடையே பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 3½ லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆகியும் எத்தனை பேருக்கு வேலைகிடைத்தது.

    தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும். 2024-ம் ஆண்டு தாமரை மலரவே இந்த நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம் என்றார்.

    அப்போது அண்ணா மலை பொதுமக்களிடம் பிரதமர் மோடி ராமநாத புரத்தில் போட்டியிட வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அங்கிருந்தவர்கள் ஆமாம் என கோஷமிட்டனர். அதன் பின்னர் பிரசாரத்தை முடித்த அண்ணாமலை ராமநாதபுரத்திற்கு திரும்பி னார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    4-வது நாளான இன்று காலை 10 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை ஆர்.எஸ்.மங்கலத்தில் தனது நடைபயணத்தை தொடர்ந்தார்.

    பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகி களுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் விலைவாசி ஏற்றம் குறித்தும், தி.மு.க. அரசின் நடவடிக்கை குறித்தும் சிறப்புரையாற்றினார். இன்று பிற்பகல் கள்ளிக்குடி ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அதன் பின் ஒன்றிய தலைவர் நர சிங்கம் வீட்டில் மதிய உணவை முடித்து கொண்டு திருவாடானையில் நடைபயணம் செல்கிறார். இரவு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மக்களை சந்தித்து பேசுகிறார். வழிநெடுகிலும் பா.ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நடைபயணத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செய லாளர் கருப்புமுருகானந்தம், மாநில இளைஞரணி செய லாளர் டாக்டர் ராம்குமார், மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி.ரமேஷ், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் தூவல் சத்தியமூர்த்தி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.
    • இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் அரசு பேருந்துகளும் இயங்கி வருகின்றனர். சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.

    இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பூசாரிபட்டி பஸ் நிறுத்தத்தில் 3 தனியார் பேருந்துகளை பொதுமக்கள் பா.ம.க ஒன்றிய செயலாளர் பி.எஸ்கே. செல்வம் தலைமையில் சிறை பிடித்தனர்.

    • கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடி ரோட்டில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை உள்ளது.

    இங்கு புதுச்சேரி மட்டுமின்றி மாநில எல்லை பகுதியான தமிழகத்தை சேர்ந்த வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வந்து பிரசவம் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழக பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் நேற்று காலை ராஜீவ்காந் தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து பதிவு செய்தனர். பின்னர் பரிசோதனைக்காக காத்திருந்தனர். அவர்களை மதியம் 1.30 மணி வரை அழைக்கவில்லை.

    ஆனால் புதுவையை சேர்ந்த கர்ப்பிணிகளை மட் டும் அழைத்து பரிசோதனை செய்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிலரும், அவர்களது உறவினர்களும் நேற்று மதியம் 1.30 மணியளவில் மருத்துவமனையை விட்டு வெளியேறி எதிரே 100 அடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஒரு டாக்டர் பணியில் இருக்கும்போது மட்டும் தான் தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

    கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போக்குவரத்து பாதிப்பு இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு மகளிர் மற்றும் குழந் தைகள் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் நாராயணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதா ன பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. 

    • மன்னார்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • நுண்ணுயிர் உரமானது மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமை ச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்குடியில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர் திருச்செல்வி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.

    சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் குறித்து விளக்கி பேசுகையில்:-

    மன்னார்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதிலிருந்து பெறப்படும் நுண்ணுயிர் உரமானது பொது மக்கள் பயன்பாட்டிற்கு மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அலுவலர்கள் திருலோ கச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
    • தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்திருப்பேரை:

    நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டும், அருகில் உள்ள மரங்களுக்கு சென்று கொண்டும் இருக்கிறது. ஏற்கனவே இந்த இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து சரிசெய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய துறையினர் உடனடியாக குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆவூரில், பொதுமக்கள் நலன் கருதி காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்களின் உதவியால் 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    புதிதாக பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.

    தொடர்ந்து, கோவிந்தகுடி ஊராட்சியில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.

    விழாவில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பரசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கணேசன் மற்றும் சிறப்பு காவலர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
    • கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடுமலை கிளை மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் ,கூலித்தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. உடுமலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் முழுமையாக இல்லை. இதனால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணித்து வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு பஸ்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளது. அதன் மூலமாக பல்வேறு அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் அரசு பஸ்களை முறையாக முழுமையாக பராமரிப்பதற்கு உடுமலை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.

    அந்த வகையில் ஏராளமான பஸ்கள் ஜன்னல் கண்ணாடிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலும் உள்ளது. பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தரவேண்டிய அதிகாரிகள் பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொள்ளாதது வேதனை அளிக்கிறது.

    இதனால் உடுமலைப் பகுதியில் இயங்குகின்ற அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் பொருத்துவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பஸ்களை பராமரிப்பதற்காக அளிக்கப்படுகின்ற தொகை முழுமையாக செலவிடப்படுகிறதா என்றும் மாவட்டஅனைத்து பஸ்களும் முறையாக கிராமத்துக்கு இயக்கப்படுகிறதா என்றும் நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். 

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நால்ரோட்டில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
    • கேமராக்களை பொதுமக்களே ரூ.40 ஆயிரம் நிதி திரட்டி பொருத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் ராஜாகோரி சுடுகாடு உள்ளது.

    இந்த மாநகரில் இறப்பவர்களின் பெரும்பாலான உடல்கள் இங்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது.

    மேலும் இந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளன.

    இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், யாராவது குற்றம் செய்தால் அவர்களை அடையாளம் காணும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நால்ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இந்த கேமராக்கள் அந்த பகுதி பொதுமக்கள் ஏற்பாட்டில், மாநகாராட்சி மற்றும் போலீசார் ஒத்துழைப்புடன் பொருத்தப்பட்டது.

    நான்கு முனைகளில் இருந்து வருபவர்களை அடையாளம் காணும் வகையில் நான்கு திசைகளை நோக்கி இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    மேலும் இந்த கேமராக்களில் பதிவு செய்யப்படும் காட்சிகளை அருகில் உள்ள ஒரு அறையில் இருந்து பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த கேமராக்களை பொதுமக்களே ரூ.40 ஆயிரம் நிதி திரட்டி பொருத்தினர்.

    சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. காரணம் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த கம்பத்தில் தற்போது 4 கேமராக்கள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சி அளி்க்கிறது.

    இதனை யாரும் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கேமராக்கள் பொருத்த ப்பட்டதன் நோக்கமே நிறைவேறாமல் உள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை வடக்குவாசல் பகுதியில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு இல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது.

    இந்த கேமராக்களை சரி செய்து பொருத்தி, மாநகராட்சி பொருத்தும் கேமராக்கள் இணைப்புடன் இணைக்கலாம்.

    எனவே பயன்பாடு இல்லாமல் இருக்கும் இந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து பொருத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

    • இப்பகுதியானது கடற்கரை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள நிலத்தடிநீர் பெரும்பாலும் அதிகளவு உப்பாக இருக்கிறது.
    • இதன் காரணமாக தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1 குடம் தண்ணீர் ரூ.10 முதல் ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிராமத்தில் சிலோன் காலனி என்ற பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    மக்கள் புகார்

    இப்பகுதியானது கடற்கரை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள நிலத்தடிநீர் பெரும்பாலும் அதிகளவு உப்பாக இருக்கிறது. எனவே இங்குள்ள மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் நீரையே நம்பியுள்ளனர்.

    ஆனால் அவ்வாறு வழங்கப்படும் சீவலப்பேரி குடிநீ2ரும் மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1 குடம் தண்ணீர் ரூ.10முதல் ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    சுத்திகரிப்பு நிலையம்

    இந்த சூழ்நிலையில் இம்மக்களின் நலன் கருதி கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் 14-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பில் சிலோன் காலனியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மெத்தனப்போக்கினால் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் வேலிச்செடிகள், குப்பைகள் என புதர்மண்டி வெறும் காட்சிப்பொருளாக காட்சியளித்துக் கொண்டி ருக்கிறது.

    எனவே சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருதோடு மட்டுமின்றி மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படும் சீவலப்பேரி கூட்டு குடிநீரையும் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்க கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆடி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வேக வைத்த தேங்காயை கொண்டு சென்று அங்கு தேங்காயை உடைத்து வைத்து வழிபட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர் ,பாண்டமங்கலம், பாலப்பட்டி, மோக னூர், வெங்கரை, ஜேடர்பா ளையம், ஆனங்கூர் பிலிக்கல் பாளையம் , கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், கூடசேரி உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் ஆடி பண்டி கையை முன்னிட்டு நேற்று மாலை தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் இளைஞர்கள், குழந்தைகள் அவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் ஒன்று திரண்டு தேங்காய்களை எடுத்து தேங்காயில் துவாரம் போட்டு தேங்காய்க்குள் இருக்கும் தண்ணீருக்குள் வருத்த கடலை, பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, எள் , பாசிப்பருப்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை பொடியாக்கி உள்ளே போட்டனர். பின்னர் தேங்கா யில் உள்ள துவா ரத்தில் அழிஞ்சி குச்சியின் ஒரு முனையை வைத்து அடைத்து மறுமுனையின் குச்சியை கையில் பிடித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பொது இடத்தில் தீ மூட்டி அந்த தீயில் நன்றாக தேங்காயை வேக வைத்தனர்.

    பின்னர் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வேக வைத்த தேங்காயை கொண்டு சென்று அங்கு தேங்காயை உடைத்து வைத்தனர்.

    பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விநாயகப் பெருமானை வழிபட்டு தேங்காயிலிருந்த கலவைகளை எடுத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தனர்.

    ×