search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் பகுதியில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குளம்:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது.சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள், பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் உள்ளிட்டவை இந்த பகுதியில் அமைக்கப்படுகிறது. இதில் சில பாலங்கள் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படாமல் ராட்சத குழாய்களை கொண்டு அமைக்கப்படுகிறது.

    சாலையின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு மழைநீர் செல்ல குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.  ஆனால் ஆலங்குளம் மலைக்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் இருபுறமும் பாதி அளவு மண் நிரம்பி உள்ளது.

     மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மறு நடவு செய்யப்பட்ட நிலையில் அவைகளில் பெரும்பாலானவை பராமரிப்பின்றி பட்டு போகும் நிலையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 1.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும்  அவை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலையில் இருபுறமும் அணுகுசாலை இல்லாமல் இருப்பதால் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறினால் நேரடியாக சாலையிலேயே கால் வைக்கும் நிலை உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஏனெனில் இந்த சாலை வழியே பயணிக்கும் வாகனங்கள் அதிவேகமாக செல்லக்கூடும். நகர் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்கள் இதை கவனிக்காமல் சாலையின் குறுக்காக சென்றால் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இதேபோல் குழாய் பதிக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் பேரிகார்டுகள் உள்ளிட்ட எச்சரிக்கை பலகைகள் வைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     தற்போதைய திட்டப்படி சாலை அமைக்காமல் அணுகு சாலை அமைத்து நான்குவழிச் சாலை பணிகளை தொடரவேண்டும்.  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நான்குவழிச் சாலை பாலம், அணுகுசாலை, மரங்கள் மறு நடவு, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    கடையம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    கடையம்:

    அம்பை அருகே உள்ள அனந்தநாடார்பட்டி, பெரியசாமி பட்டி, இடை கால், பனையன்குறிச்சி, கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளை பகுதி களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று காலை நாலாங்கட்டளையில் உள்ள கல்குவாரி முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    கடையம் ஒன்றிய ச.ம.க. செயலாளர் பெரியசாமி, ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதன் உள்பட 8-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கல்குவாரிகளில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கற்கள் தூக்கி வீசப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.

    மேலும் குவாரி பகுதியில் ஏராளமான விவசாய நிலம் உள்ளதால் விவசாயிகளும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பாக்குடி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
    செக்கானூரணியில் ரெயில் நிற்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    திருமங்கலம்

    மதுரை-போடி இடையே ரூ.450 கோடியில் அகல ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது.முதலாவதாக பணிகள் நிறைவடைந்த மதுரை-உசிலம்பட்டி இடையேயும், 2-வதாக மதுரை-ஆண்டிபட்டி இடையேயும், 3-வதாக மதுரை-தேனி இடையேயும் ெரயிலை அதிவேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று (26-ந் தேதி) மதுரை-தேனி இடையே தினசரி விரைவு ரெயில் இயக்க ப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த மீட்டர்கேஜ் ரெயில்பாதையில் இங்கு ரெயில்கள் இயக்கப்பட்ட போது திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் இருந்த ரெயில் நிலையத்தில் மதுரை-போடி பாசஞ்சர் ரெயில் வழக்கமாக நின்று சென்றது. 

    தற்போது மதுரை-தேனி வரை ரெயில்பாதை பணிகள் முழுமையாக முடிந்து இன்று முதல் விரைவு ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் செக்கானூரணி பகுதியில் ரெயில் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் செக்கானூரணி மற்றும் 25க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமக்கள் ெரயிலில் பயணிக்க மதுரை அல்லது உசிலம்பட்டிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே மீட்டர் கேஜில் ரெயில்கள் இயக்கப்பட்டபோது செயல்பட்டு வந்த செக்கானூரணி  ரெயில் நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்றும், அதற்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர்முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும்  செக்கானூரணி பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்தனர். 

    அதிகளவு பயணிகள் பயன்படுத்திய  செக்கா னூரணி ரெயில் நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க தெற்கு ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
    அடையாள அட்டை வழங்க மறுத்ததால் அ.புதூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 1200-க்கும் மேற்பட்டோர் பணி  செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி கடந்த மாதத்தில் முடிவடைந்த நிலையில் பணிபுரிபவர்களுக்கு புதிய அட்டை வழங்க  ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வந்தனர்.  மேலும், ரூ.1000  கட்டினால் மட்டுமே உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த   200- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊராட்சி   மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி  போலீசார்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இப்பிரச்சினை குறித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட  அதிகாரிகளோ, ஊராட்சி தலைவரோ நேரில் வரவில்லை.  அதுமட்டுமல்லாமல் இந்த ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாதது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது. 

     4 மணி நேரத்துக்குப் பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி தள  பொறுப்பாளர்களை வைத்து புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் கூறியதாவது:-

     அ. புதூர் ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாததால் இப்பகுதியில் நடைபெறும் ஊராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது எனவும், ஏற்கனவே ஜல் ஜீவன் குடிநீர் குழாய் இணைப்பு பெறப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் வருவதில்லை எனவும், இது குறித்து ஒன்றிய ஆணையாளரிடம்  தெரிவித்தால், அவர் தலைவர் சொல்படி கேளுங்கள் என்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்
    துர்கா காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு மேயரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    திருப்பரங்குன்றம்,

    தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நல்வாழ்வு மையம் அமைப்பதற்கான பூமி பூஜை மதுரை துர்கா காலனியில் இன்று நடந்தது. 

    மண்டலத் தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார் இதில் மாநகராட்சி மேயர் இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். 

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே இந்தப்பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறை பல ஆண்டுக ளாக பூட்டி கிடப்பதாகவும், அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் குடிநீர், சாலை வசதி சரிவர இல்லை. 

    இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி மேயரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதானம் பேசி கோரி க்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மின்சாரம் வழங்காததால் பொன்னேரி மின்நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் ஆலாடு ஊராட்சியில் அடங்கிய பொழுது விடிஞ்சா மேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் மின்சாரம் சரியாக வராததால் புதிய மின் மாற்றி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 3 மாதத்திற்கு முன்பாக வேலைகள் நடைபெற்றிருந்த நிலையில் மின்சாரம் இன்றும் வழங்கவில்லை. இதனால்அப்பகுதி மக்கள் குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் வழக்கறிஞர் அணி செயலாளர் தேவராசு கொள்கை பரப்பு செயலாளர் அருள்தாஸ் தலைமையில் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆலாடு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் யாபேசு, மோகன், அம்பேத் தீனா, திருமலை பாஸ்கர், மற்றும் கிராம பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கடலூர் புதிய பஸ் நிலையத்தை புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கக்கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் கடலூர் புதிய பஸ் நிலையத்தை புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கக்கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

    தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் அல்லிமுத்து, முத்துக்குமரன், மக்கள் அதிகாரம் நகர செயலாளர் நந்தா, பொருளாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் மாநில தலைவர் கு. பாலசுப்பிரமணியன், மக்கள் அதிகாரம் மாநில தலைமை நிர்வாகிகள் பாலு, மாவட்ட செயலாளர் ராசாமணி, துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் நிர்வாகிகள் விவேகானந்தன், பலராமன், ராஜேஷ் குமார், பாண்டியன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் இணை செயலாளர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.

    • புதிதாக குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தவர்கள் பள்ளியில் சேர்ப்பதற்கு ஜாதி சான்று, இருப்பிட சான்று முதலியவற்றிற்கு ஆதார் கட்டாயம் தேவைபடுவதால் அவர்கள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
    • குழந்தைகளுக்கு ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், தன்னார்வ ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பா–ளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இதில் பர்கூர், தாமரை பகுதியிலும், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக ஆதார் எடுக்க குழந்தைகள் மற்றும் ஆண்கள், பெண்கள் முகவரி மாற்றாம், பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம் செய்பவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு முகாமில் வந்து ஆதார் எடுத்து சென்றனர்.

    இதில் ஆதார் எடுத்தவர்கள் 70 சதவீதபேர்களுக்கு மீண்டும் எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவர்கள் எடுத்த ஆதார் புகைப்பட எண்ணை பதிவு செய்து பார்க்கும்போது அதில் காரண விளக்கம் எதுவும் தென்படவில்லை என்ற பதிவு மட்டும் வருகிறது.

    எனவே முகாமில் புதிதாக குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தவர்கள் பள்ளியில் சேர்ப்பதற்கு ஜாதி சான்று, இருப்பிட சான்று முதலியவற்றிற்கு ஆதார் கட்டாயம் தேவைபடுவதால் அவர்கள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    இதனை உடனடியாக சரி செய்து மீண்டும் குழந்தைகளுக்கு ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், தன்னார்வ ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குலமங்கலம் கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
    • குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை வடக்கு வட்டம், குலமங்கலம் பீடர்-1 கிராமத்தில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் குலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள நாடக அரங்கில் நடைபெற உள்ளது.

    இதில் மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டு கலெக்டரிடம் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம்.

    • ஈரோடு சிந்தன் நகரில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் ஊற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.

    ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக இன்று மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜ், மாலதி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு ஒன்று திரண்டனர்.

    அவர்கள் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில்கள் உள்ளன. திடீரென மாநகராட்சி சார்பில் குடியிருப்பு மத்தியில் பாதாள சாக்கடை கழிவுநீர்ஊற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதற்கு நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இன்று திடீரென மாநகர் சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் வந்தனர். நாங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் அவர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இருந்தாலும் போலீசார் உதவியுடன் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஊற்று நிலையம் அமைந்தால் எங்கள் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் இந்த வழியாகத்தான் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    இதனால் துர்நாற்றம், சுகாதார கெடு, நோய் தொற்று பரவ ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைக்கப்படுவதற்கு பதில் ஊரின் ஒதுக்குப்புறமாக இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெயர் திருத்தம், ஆதார் கார்டு மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.
    • பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி தாலூகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ சேவை மையம் உள்ளது.பெயர் திருத்தம் ,ஆதார் கார்டு பெறுதல், போன் நம்பர் மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக பொதுமக்கள் இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.

    அவ்வாறு வருபவர்களிடம் அலுவலர்கள் இங்கு சர்வர் ரிப்பேராகிவிட்டது ,ஒன்றும் செய்ய முடியாது, இன்னும் 2 நாட்களுக்கு பிறகு வாருங்கள் என்றும், அப்படி அவசரம் என்றால் தாலுகா அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடை பெயரை சொல்லி அங்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நிலையில் அதிகாரிகளின் இந்த செயலால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    • நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூரில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக அரசு சார்பில் சென்னையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் நாவலூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    ×